காஞ்சிபுரத்தில் நெசவாளர்கள் போராட்டம் - SHORTAGE OF ZARI IN KANCHIPURAM
🎬 Watch Now: Feature Video

Published : February 9, 2026 at 5:37 PM IST
காஞ்சிபுரம்: ஜரிகை தட்டுப்பாடு காரணமாக அண்ணா கூட்டுறவு சங்கத்தில் நெசவாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. அதன் எதிரொலியாக காஞ்சிபுரத்தில் பட்டு நெசவுத் தொழில் கடும் முடக்கத்தைச் சந்தித்துள்ளது. காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப் புடவைகளின் ஆன்மாவாகக் கருதப்படும் 'தங்கச் ஜரிகை' தட்டுப்பாடு காரணமாக, இன்று பேரறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோயில் நகரம் மற்றும் பட்டு நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், லட்சக்கணக்கான குடும்பங்கள் கைத்தறி நெசவுத் தொழிலையே நம்பி வாழ்ந்து வருகின்றன.
இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுப் புடவைகளில் அசல் வெள்ளி இழையில் தங்க முலாம் பூசப்பட்ட ஜரிகைகள் பயன்படுத்தப்படுவது தனிச்சிறப்பாகும். ஆனால், கடந்த சில மாதங்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சந்தையில் உச்சத்தைத் தொட்டுள்ளதால், ஜரிகை கொள்முதல் செய்வதில் கூட்டுறவு சங்கங்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் ஜரிகை கொள்முதல் செய்யப்படாததால், கடந்த மூன்று மாதங்களாக 1,000-க்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு நெசவு செய்யத் தேவையான ஜரிகை வழங்கப்படவில்லை. ஜரிகை பற்றாக்குறையினால் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய கூலி வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக நெசவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
காஞ்சிபுரம்: ஜரிகை தட்டுப்பாடு காரணமாக அண்ணா கூட்டுறவு சங்கத்தில் நெசவாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. அதன் எதிரொலியாக காஞ்சிபுரத்தில் பட்டு நெசவுத் தொழில் கடும் முடக்கத்தைச் சந்தித்துள்ளது. காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப் புடவைகளின் ஆன்மாவாகக் கருதப்படும் 'தங்கச் ஜரிகை' தட்டுப்பாடு காரணமாக, இன்று பேரறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோயில் நகரம் மற்றும் பட்டு நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், லட்சக்கணக்கான குடும்பங்கள் கைத்தறி நெசவுத் தொழிலையே நம்பி வாழ்ந்து வருகின்றன.
இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுப் புடவைகளில் அசல் வெள்ளி இழையில் தங்க முலாம் பூசப்பட்ட ஜரிகைகள் பயன்படுத்தப்படுவது தனிச்சிறப்பாகும். ஆனால், கடந்த சில மாதங்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சந்தையில் உச்சத்தைத் தொட்டுள்ளதால், ஜரிகை கொள்முதல் செய்வதில் கூட்டுறவு சங்கங்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் ஜரிகை கொள்முதல் செய்யப்படாததால், கடந்த மூன்று மாதங்களாக 1,000-க்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு நெசவு செய்யத் தேவையான ஜரிகை வழங்கப்படவில்லை. ஜரிகை பற்றாக்குறையினால் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய கூலி வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக நெசவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

