தவெக வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட 'ரோபோ' - TVK USING ROBOT FOR CAMPAIGN
🎬 Watch Now: Feature Video

Published : April 21, 2026 at 6:06 PM IST
கோயம்புத்தூர்: ரோபோ மற்றும் ட்ரோன் என நவீன முறையில் வாக்கு சேகரித்து தமிழக வெற்றி கழக வேட்பாளர் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடையும் நிலையில், வேட்பாளர்கள் காலை முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.23 அன்று நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்படுகிறது.
இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. தொடர்ந்து, இன்று மாலை 6 மணிக்குள் அரசியல் கட்சிகள் தங்கள் பரப்புரையை முடித்துவிட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால் வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர் செந்தில்குமார், பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் ரோபோ, ட்ரோன் எல்இடி ஸ்கீர்ன் ஆகியவற்றை கொண்டு பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் வாக்கு சேகரித்துள்ளார்.
அதாவது, கோவை காமராஜபுரம் பகுதியில் மாலையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், ட்ரோன்கள் மூலம் எல்.இ.டி திரையை பறக்க செய்து அதில் அவரது புகைப்படத்தையும், தவெக வீடியோக்களை ஒளிபரப்பி வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து, ரேஸ்கோர்ஸ் பகுதியில் ரோபோ ஒன்றை கொண்டு பொதுமக்களின் கவனத்தை இருக்கும் வண்ணம் நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ரோபோவை பார்த்த சிறுவர்களும், பொதுமக்களும் ஆர்வமுடன் ரோபோ உடன் கைகுலுக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்
கோயம்புத்தூர்: ரோபோ மற்றும் ட்ரோன் என நவீன முறையில் வாக்கு சேகரித்து தமிழக வெற்றி கழக வேட்பாளர் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடையும் நிலையில், வேட்பாளர்கள் காலை முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.23 அன்று நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்படுகிறது.
இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. தொடர்ந்து, இன்று மாலை 6 மணிக்குள் அரசியல் கட்சிகள் தங்கள் பரப்புரையை முடித்துவிட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால் வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர் செந்தில்குமார், பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் ரோபோ, ட்ரோன் எல்இடி ஸ்கீர்ன் ஆகியவற்றை கொண்டு பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் வாக்கு சேகரித்துள்ளார்.
அதாவது, கோவை காமராஜபுரம் பகுதியில் மாலையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், ட்ரோன்கள் மூலம் எல்.இ.டி திரையை பறக்க செய்து அதில் அவரது புகைப்படத்தையும், தவெக வீடியோக்களை ஒளிபரப்பி வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து, ரேஸ்கோர்ஸ் பகுதியில் ரோபோ ஒன்றை கொண்டு பொதுமக்களின் கவனத்தை இருக்கும் வண்ணம் நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ரோபோவை பார்த்த சிறுவர்களும், பொதுமக்களும் ஆர்வமுடன் ரோபோ உடன் கைகுலுக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்

