நீச்சல் குளத்தில் திருச்செந்தூர் தெய்வானை யானை ஆனந்த குளியல் - TIRUCHENDUR ELEPHANT DEIVAYANAI

🎬 Watch Now: Feature Video

thumbnail
நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் போட்ட திருச்செந்தூர் தெய்வானை யானை (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 30, 2026 at 3:00 PM IST

|

Updated : April 30, 2026 at 3:14 PM IST

1 Min Read
Choose ETV Bharat

தூத்துக்குடி: கோடை வெயிலில் இருந்து தப்பிக்க திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை சரவண பொய்கை நீச்சல் குளத்தில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தது.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான தெய்வானை யானை உள்ளது.தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தென்மாவட்டங்களில் அதிக அளவு வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது.இந்த நிலையில் கோயில் யானை தெய்வானை இந்த வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக இன்றைய தினம் காலையில் சரவண பொய்கையில் குளிப்பதற்காக உற்சாக நடை போட்டு வந்தது.சரவண பொய்கையில் உள்ள நீச்சல் குளத்தில் இறங்கி நீச்சல் குளத்தில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தது.தன்னுடைய தும்பிக்கை மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்து உடலை குளிர வைத்து விளையாடி மகிழ்ந்தது.

அதைத் தொடர்ந்து ஷவர் மேல் உள்ள மேடையில் காலை வைத்து விளையாடி மகிழ்ந்தது. தெய்வானை யானை சரவண பொய்கையில் குளித்துக் கொண்டிருந்தை அந்த வழியாக சென்ற பக்தர்கள் சுற்றுலா பயணிகள் அதை பார்த்துச் சென்றனர். வெயிலின் தாக்கத்தை அதிகமாக உள்ளதால் அதனால் கோயில் யானை தேவனை நீச்சல் குளத்தில் தொட்டியில் ஆனந்த குளியல் போட்டது உஷ்ணத்தை குறைப்பதற்காக நீச்சல் குளத்தில் ஆனந்தமாக குளியலிட்டு மகிழ்ந்தது.

தூத்துக்குடி: கோடை வெயிலில் இருந்து தப்பிக்க திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை சரவண பொய்கை நீச்சல் குளத்தில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தது.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான தெய்வானை யானை உள்ளது.தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தென்மாவட்டங்களில் அதிக அளவு வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது.இந்த நிலையில் கோயில் யானை தெய்வானை இந்த வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக இன்றைய தினம் காலையில் சரவண பொய்கையில் குளிப்பதற்காக உற்சாக நடை போட்டு வந்தது.சரவண பொய்கையில் உள்ள நீச்சல் குளத்தில் இறங்கி நீச்சல் குளத்தில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தது.தன்னுடைய தும்பிக்கை மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்து உடலை குளிர வைத்து விளையாடி மகிழ்ந்தது.

அதைத் தொடர்ந்து ஷவர் மேல் உள்ள மேடையில் காலை வைத்து விளையாடி மகிழ்ந்தது. தெய்வானை யானை சரவண பொய்கையில் குளித்துக் கொண்டிருந்தை அந்த வழியாக சென்ற பக்தர்கள் சுற்றுலா பயணிகள் அதை பார்த்துச் சென்றனர். வெயிலின் தாக்கத்தை அதிகமாக உள்ளதால் அதனால் கோயில் யானை தேவனை நீச்சல் குளத்தில் தொட்டியில் ஆனந்த குளியல் போட்டது உஷ்ணத்தை குறைப்பதற்காக நீச்சல் குளத்தில் ஆனந்தமாக குளியலிட்டு மகிழ்ந்தது.

Last Updated : April 30, 2026 at 3:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details