காணும் பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டிகள் - SPORTS COMPETITIONS HELD IN NELLAI
🎬 Watch Now: Feature Video

Published : January 17, 2026 at 8:35 PM IST
திருநெல்வேலி: காணும் பொங்கலை முன்னிட்டு நெல்லையில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழக்கப்பட்டன.
நெல்லையில் பொங்கல் மற்றும் மாட்டு பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடிய பொதுமக்கள் இன்று காணும் பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர். குறிப்பாக, நெல்லை ராதாபுரத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் திருநங்கைகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, போட்டியாளர்கள் இளவட்டக்கல் தூக்குதல், கயிறு இழுத்தல், பானை உடைத்தல், சிலம்பம், கரண்டியில் எலுமிச்சை பழத்தை வைத்து ஓடுதல், கணவர்கள் மனைவிகளை தூக்கி கொண்டு ஓடுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.
குறிப்பாக கணவன் மனைவியை தூக்கிக் கொண்டு ஓடும் போட்டியில் முதல் பரிசை மாறன்குளத்தைச் சேர்ந்த அஜித்-ஜோதிகா தம்பதியினர் வென்றனர். மேலும் இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் இளைஞர்கள், திருநங்கைகள் ஆர்வமாக பங்கேற்று கல்லை தூக்கினர். இளைஞர் ஒருவர் 31 முறை கல்லை தூக்கி போட்டு ரூபாய் 3000 பரிசை வென்றார். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கினார்கள்.
திருநெல்வேலி: காணும் பொங்கலை முன்னிட்டு நெல்லையில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழக்கப்பட்டன.
நெல்லையில் பொங்கல் மற்றும் மாட்டு பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடிய பொதுமக்கள் இன்று காணும் பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர். குறிப்பாக, நெல்லை ராதாபுரத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் திருநங்கைகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, போட்டியாளர்கள் இளவட்டக்கல் தூக்குதல், கயிறு இழுத்தல், பானை உடைத்தல், சிலம்பம், கரண்டியில் எலுமிச்சை பழத்தை வைத்து ஓடுதல், கணவர்கள் மனைவிகளை தூக்கி கொண்டு ஓடுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.
குறிப்பாக கணவன் மனைவியை தூக்கிக் கொண்டு ஓடும் போட்டியில் முதல் பரிசை மாறன்குளத்தைச் சேர்ந்த அஜித்-ஜோதிகா தம்பதியினர் வென்றனர். மேலும் இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் இளைஞர்கள், திருநங்கைகள் ஆர்வமாக பங்கேற்று கல்லை தூக்கினர். இளைஞர் ஒருவர் 31 முறை கல்லை தூக்கி போட்டு ரூபாய் 3000 பரிசை வென்றார். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கினார்கள்.

