டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் - PUBLIC DEMAND TASMAC CLOSE PROTEST

🎬 Watch Now: Feature Video

thumbnail
டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 17, 2026 at 8:07 PM IST

1 Min Read
Choose ETV Bharat

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூரில் இரண்டு அரசு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இரண்டு கடைகளும் வட வீக்கம் சாலையில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் செயல்படுவதால் கிராமத்தில் உள்ள கூலித் தொழிலாளிகள் மற்றும் இளைஞர்கள் வெகுவாக பாதிக்கப்படுவதாக கூறி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கடந்த இரண்டு வருட காலமாக பொதுமக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இதே கோரிக்கையை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

அப்போது பேச்சுவார்த்தைக்கு வந்த போலீஸ் மற்றும் அதிகாரிகள் வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனாலும் பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அதுமட்டுமின்றி, பிரச்சனைக்குரிய டாஸ்மாக் கடை அருகில் அரசு விதிமுறைகளை மீறி விடிய விடிய கள்ளத்தனமாக சிலர் மதுவை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாகவும், தட்டிக் கேட்கும் பொது மக்களை குண்டர்களை வைத்து மிரட்டியதாகவும் தெரிகிறது. இந்நிலையில் அதிருப்தி அடைந்த கிராம பொதுமக்கள் அதே கல்லாத்தூர் கடை வீதியில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் இளைஞர்கள் என போராட்டம் நடத்தினர். இதனால் ஜெயங்கொண்டம் - விருத்தாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது.

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூரில் இரண்டு அரசு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இரண்டு கடைகளும் வட வீக்கம் சாலையில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் செயல்படுவதால் கிராமத்தில் உள்ள கூலித் தொழிலாளிகள் மற்றும் இளைஞர்கள் வெகுவாக பாதிக்கப்படுவதாக கூறி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கடந்த இரண்டு வருட காலமாக பொதுமக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இதே கோரிக்கையை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

அப்போது பேச்சுவார்த்தைக்கு வந்த போலீஸ் மற்றும் அதிகாரிகள் வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனாலும் பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அதுமட்டுமின்றி, பிரச்சனைக்குரிய டாஸ்மாக் கடை அருகில் அரசு விதிமுறைகளை மீறி விடிய விடிய கள்ளத்தனமாக சிலர் மதுவை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாகவும், தட்டிக் கேட்கும் பொது மக்களை குண்டர்களை வைத்து மிரட்டியதாகவும் தெரிகிறது. இந்நிலையில் அதிருப்தி அடைந்த கிராம பொதுமக்கள் அதே கல்லாத்தூர் கடை வீதியில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் இளைஞர்கள் என போராட்டம் நடத்தினர். இதனால் ஜெயங்கொண்டம் - விருத்தாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது.

ABOUT THE AUTHOR

...view details