திமுக வேட்பாளர் பணப்பட்டுவாடா செய்ததாக கூறி நாதகவினர் சாலை மறியல் - TAMIL NADU ASSEMBLY ELECTION 2026

🎬 Watch Now: Feature Video

thumbnail
நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல் (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 22, 2026 at 10:36 AM IST

1 Min Read
Choose ETV Bharat

தஞ்சாவூர்: திமுக வேட்பாளர் பணப் பட்டுவாடா செய்ததாக கூறி நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் தஞ்சாவூரில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் இறுதிப் பிரச்சாரம் நேற்று முடிந்தது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திருமுருகன் ஒரத்தநாடு வட்டம், ஆம்பலாப்பட்டு தெற்கு தெருவில், நேற்று (ஏப்.22) பிற்பகல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, திமுக வேட்பாளர் வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் அப்பகுதியில் பணப்பட்டுவாடா செய்து கொண்டிருந்ததாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம்சாட்டினர்.

மேலும், ிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி, அங்கிருந்தவர்களை விரட்டி சென்று பிடித்து தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர். மேலும், ஒரு சிலரை பிடிக்க முற்பட்டபோது அவர்கள் தப்பித்து ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், ஒரத்தநாடு பைபாஸ் சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகே நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திருமுருகன் தலைமையில், சுமார் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

திமுக வேட்பாளர் வைத்திலிங்கம், வாக்காளர்களுக்கு ரூ.3 ஆயிரம் வரை தருவதாகவும், அவரை இந்த தேர்தலில் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்: திமுக வேட்பாளர் பணப் பட்டுவாடா செய்ததாக கூறி நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் தஞ்சாவூரில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் இறுதிப் பிரச்சாரம் நேற்று முடிந்தது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திருமுருகன் ஒரத்தநாடு வட்டம், ஆம்பலாப்பட்டு தெற்கு தெருவில், நேற்று (ஏப்.22) பிற்பகல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, திமுக வேட்பாளர் வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் அப்பகுதியில் பணப்பட்டுவாடா செய்து கொண்டிருந்ததாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம்சாட்டினர்.

மேலும், ிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி, அங்கிருந்தவர்களை விரட்டி சென்று பிடித்து தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர். மேலும், ஒரு சிலரை பிடிக்க முற்பட்டபோது அவர்கள் தப்பித்து ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், ஒரத்தநாடு பைபாஸ் சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகே நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திருமுருகன் தலைமையில், சுமார் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

திமுக வேட்பாளர் வைத்திலிங்கம், வாக்காளர்களுக்கு ரூ.3 ஆயிரம் வரை தருவதாகவும், அவரை இந்த தேர்தலில் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details