சாலையில் ஒய்யாரமாக நடந்துச் சென்ற சிறுத்தை - வீடியோ எடுத்த பேருந்து பயணிகள் - LEOPARD WALKING ON THE ROAD
🎬 Watch Now: Feature Video

Published : January 6, 2026 at 12:48 PM IST
ஈரோடு: தாளவாடி அருகே கேர்மாளம் வனச்சாலையில் பட்டப்பகலில் தனியார் பேருந்து முன்பு ஒய்யாரமாக சிறுத்தை உலா வந்த வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் சமீப காலத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வனப்பகுதியில் உள்ள திம்பம் மலைப்பாதை, கேர்மாளம் வனச்சாலை மற்றும் தலமலை வனச்சாலைகளில் பகல் நேரங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் பயணிகளுக்கு வனத்துறை அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியில் இருந்து தனியார் பேருந்து ஒன்று சத்தியமங்கலம் செல்வதற்காக கேர்மாளம் வனச்சாலையில் சென்று கொண்டிருந்தது. இதில் பேருந்து மாவள்ளம் வனப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்தபோது, திடீரென சாலையின் குறுக்கே வந்த சிறுத்தை ஒன்று சிறிது தூரம் பேருந்து முன்பாக மெதுவாக ஓடியது. சிறிது தூரம் ஓடிய சிறுத்தை பின்னர் சாலையோர வனப்பகுதிக்குள் சென்றது. இதனை பேருந்தில் பயணித்தவர்கள் வீடியோ பதிவு செய்தனர்.
அதேபோல் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் சாலையில் நடந்து சென்ற சிறுத்தையை அவ்வழியாக காரில் சென்ற பயணிகள் வீடியோ பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஈரோடு: தாளவாடி அருகே கேர்மாளம் வனச்சாலையில் பட்டப்பகலில் தனியார் பேருந்து முன்பு ஒய்யாரமாக சிறுத்தை உலா வந்த வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் சமீப காலத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வனப்பகுதியில் உள்ள திம்பம் மலைப்பாதை, கேர்மாளம் வனச்சாலை மற்றும் தலமலை வனச்சாலைகளில் பகல் நேரங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் பயணிகளுக்கு வனத்துறை அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியில் இருந்து தனியார் பேருந்து ஒன்று சத்தியமங்கலம் செல்வதற்காக கேர்மாளம் வனச்சாலையில் சென்று கொண்டிருந்தது. இதில் பேருந்து மாவள்ளம் வனப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்தபோது, திடீரென சாலையின் குறுக்கே வந்த சிறுத்தை ஒன்று சிறிது தூரம் பேருந்து முன்பாக மெதுவாக ஓடியது. சிறிது தூரம் ஓடிய சிறுத்தை பின்னர் சாலையோர வனப்பகுதிக்குள் சென்றது. இதனை பேருந்தில் பயணித்தவர்கள் வீடியோ பதிவு செய்தனர்.
அதேபோல் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் சாலையில் நடந்து சென்ற சிறுத்தையை அவ்வழியாக காரில் சென்ற பயணிகள் வீடியோ பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

