விரைவில் சென்னையில் மீண்டும் 'மாடி பஸ்' - DOUBLE TRUCKER BUS
🎬 Watch Now: Feature Video

Published : January 8, 2026 at 2:13 PM IST
சென்னை: 18 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மக்களை கவரும் வகையில் விரைவில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்துகள் சேவை தொடங்கவுள்ளது.
சென்னை மக்களிடையே ஒரு காலத்தில் பெரும் வரவேற்பை பெற்ற டபுள் டக்கர் பேருந்துகள், சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு விரைவில் மீண்டும் சேவைக்கு வரவுள்ளன. இந்த சேவையின் தொடக்கமாக, புதிய பேருந்தின் கட்டமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அடையாறு முதல் மாமல்லபுரம் வரையிலான வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
மேலும் சாலைகளில் பயணிக்கும் போது சுற்றுப்புற காட்சிகளை ரசிக்கும் வகையில், ‘டபுள் டெக்கர்’ எனப்படும் இந்த பேருந்துகளை இயக்க மாநகர் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக பேருந்து தயாரிப்பு மற்றும் இயக்கப் பணிகளை மேற்கொள்ள ஒரு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே நேற்று மாலை சென்னை பட்டினம்பாக்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு RTO சோதனைக்காக கொண்டு வரப்பட்ட டபுள் டெக்கர் பேருந்தை பொதுமக்கள் ஆர்வமுடன் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.
சென்னை: 18 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மக்களை கவரும் வகையில் விரைவில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்துகள் சேவை தொடங்கவுள்ளது.
சென்னை மக்களிடையே ஒரு காலத்தில் பெரும் வரவேற்பை பெற்ற டபுள் டக்கர் பேருந்துகள், சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு விரைவில் மீண்டும் சேவைக்கு வரவுள்ளன. இந்த சேவையின் தொடக்கமாக, புதிய பேருந்தின் கட்டமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அடையாறு முதல் மாமல்லபுரம் வரையிலான வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
மேலும் சாலைகளில் பயணிக்கும் போது சுற்றுப்புற காட்சிகளை ரசிக்கும் வகையில், ‘டபுள் டெக்கர்’ எனப்படும் இந்த பேருந்துகளை இயக்க மாநகர் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக பேருந்து தயாரிப்பு மற்றும் இயக்கப் பணிகளை மேற்கொள்ள ஒரு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே நேற்று மாலை சென்னை பட்டினம்பாக்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு RTO சோதனைக்காக கொண்டு வரப்பட்ட டபுள் டெக்கர் பேருந்தை பொதுமக்கள் ஆர்வமுடன் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.

