திரும்பிப் பார்க்க வைத்த சோளக்கதிர் வீடு! - CORN HOUSE IN ARIYALUR

🎬 Watch Now: Feature Video

thumbnail
அரியலூரில் மக்கள் கண்களை கவர்ந்த வீட்டின் காணொலி (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 9, 2026 at 5:14 PM IST

1 Min Read
Choose ETV Bharat

அரியலூர்:  அரியலூர் மாவட்டம் ஓட்டகோவில் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி கமலவேணி. இருவரும் இணைந்து தங்களுக்கு சொந்தமான நிலத்தில் சோளம் பயிரிட்டு, மானாவாரி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சோளக்கதிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில், தனியார் சோள விதை நிறுவனம் ஒன்றின் பிரதிநிதி பூஜா என்பவர், முத்துச்சாமி மற்றும் கமலவேணி தம்பதியை அணுகி, தங்களது நிறுவனத்தின் சார்பில் சோளப்பயிர் குறித்த விழிப்புணர்வை விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் ஏற்படுத்தும் விதமாக உங்களது நிலத்தை பயன்படுத்திக் கொள்ளலாமா? என அனுமதி கேட்டுள்ளார்.

கமலவேணியும், முத்துசாமியும் அதற்கு சம்மதம் தெரிவிக்கவே, நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சோளக்கதிர்களை தனியே அறுவடை செய்து, பின்னர் அந்த சோளக் கதிர்களைக் கொண்டே சாலை ஓரத்தில் வீடு போன்ற மாதிரி வடிவமைப்பை அசத்தலாக செய்து காட்சிப்படுத்தியுள்ளனர்.

அரியலூர் - செந்துறை சாலையில் உள்ள இந்த விவசாய நிலத்தை கடந்து செல்லும் பார்வையாளர்கள் அனைவரும், திடீரென தங்கள் பகுதியில் எழும்பிய இந்த சோளக்கதிர் வீட்டை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

பலர் தங்களது வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி விட்டு, விவசாய நிலத்திற்குள் வந்து மிக நேர்த்தியாக கட்டப்பட்டுள்ள இந்த சோள வீட்டை அலைபேசிகளில் புகைப்படம் எடுத்துக் கொள்வதுடன், முன்னால் நின்று செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

அரியலூர்:  அரியலூர் மாவட்டம் ஓட்டகோவில் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி கமலவேணி. இருவரும் இணைந்து தங்களுக்கு சொந்தமான நிலத்தில் சோளம் பயிரிட்டு, மானாவாரி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சோளக்கதிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில், தனியார் சோள விதை நிறுவனம் ஒன்றின் பிரதிநிதி பூஜா என்பவர், முத்துச்சாமி மற்றும் கமலவேணி தம்பதியை அணுகி, தங்களது நிறுவனத்தின் சார்பில் சோளப்பயிர் குறித்த விழிப்புணர்வை விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் ஏற்படுத்தும் விதமாக உங்களது நிலத்தை பயன்படுத்திக் கொள்ளலாமா? என அனுமதி கேட்டுள்ளார்.

கமலவேணியும், முத்துசாமியும் அதற்கு சம்மதம் தெரிவிக்கவே, நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சோளக்கதிர்களை தனியே அறுவடை செய்து, பின்னர் அந்த சோளக் கதிர்களைக் கொண்டே சாலை ஓரத்தில் வீடு போன்ற மாதிரி வடிவமைப்பை அசத்தலாக செய்து காட்சிப்படுத்தியுள்ளனர்.

அரியலூர் - செந்துறை சாலையில் உள்ள இந்த விவசாய நிலத்தை கடந்து செல்லும் பார்வையாளர்கள் அனைவரும், திடீரென தங்கள் பகுதியில் எழும்பிய இந்த சோளக்கதிர் வீட்டை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

பலர் தங்களது வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி விட்டு, விவசாய நிலத்திற்குள் வந்து மிக நேர்த்தியாக கட்டப்பட்டுள்ள இந்த சோள வீட்டை அலைபேசிகளில் புகைப்படம் எடுத்துக் கொள்வதுடன், முன்னால் நின்று செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details