பழனி முருகன் கோயிலில் நடிகர் ரவி மோகன் சாமி தரிசனம் - ACTOR RAVI MOHAN AT PALANI

🎬 Watch Now: Feature Video

thumbnail
பழனி முருகன் கோயிலில் நடிகர் ரவி மோகன் சாமி தரிசனம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 26, 2026 at 8:27 PM IST

1 Min Read
Choose ETV Bharat

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் நடிகர் ரவி மோகன் சாமி தரிசனம் செய்தார். 

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு இன்று (மே 26) நடிகர் ரவி மோகன் ஆன்மீக பயணமாக வருகை தந்தார். ​அடிவாரத்திலிருந்து மலைக்கோயிலுக்குச் சென்ற அவருக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டு, மரியாதை செய்யப்பட்டது. 

தொடர்ந்து, இன்று மதியம் மலைக்கோயிலில் நடைபெற்ற முக்கிய வழிபாடான உச்சிக்கால பூஜையில் அவர் கலந்துகொண்டார். அப்போது முருகப்பெருமான் 'பாலசுப்பிரமணியர்' அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். ராஜ அலங்காரப் பொலிவோடு காட்சியளித்த முருகப்பெருமானை நடிகர் ரவி மோகன் கைகூப்பி மனமுருகி தரிசனம் செய்தார்.

ஆனந்த தரிசனத்திற்குப் பின்பு, மலைக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற போகர் சித்தரின் சன்னதிக்குச் சென்ற அவர், அங்கேயும் அமர்ந்து பக்திப் பரவசத்துடன் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டார்.

மலைக்கோயில் வளாகத்தில் அவரை காண ஏராளமான பொதுமக்களும், ரசிகர்களும் திரண்டனர். அவருடன் கைகுலுக்கியும், செல்ஃபி எடுத்தும் மகிழந்தனர். ​மலைக்கோயில் தரிசனங்கள் அனைத்தையும் நிறைவு செய்த பின்னர், ரோப் கார் மூலமாக மலைக்கோயிலில் இருந்து அடிவாரத்திற்கு இறங்கிச் சென்றார்.

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் நடிகர் ரவி மோகன் சாமி தரிசனம் செய்தார். 

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு இன்று (மே 26) நடிகர் ரவி மோகன் ஆன்மீக பயணமாக வருகை தந்தார். ​அடிவாரத்திலிருந்து மலைக்கோயிலுக்குச் சென்ற அவருக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டு, மரியாதை செய்யப்பட்டது. 

தொடர்ந்து, இன்று மதியம் மலைக்கோயிலில் நடைபெற்ற முக்கிய வழிபாடான உச்சிக்கால பூஜையில் அவர் கலந்துகொண்டார். அப்போது முருகப்பெருமான் 'பாலசுப்பிரமணியர்' அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். ராஜ அலங்காரப் பொலிவோடு காட்சியளித்த முருகப்பெருமானை நடிகர் ரவி மோகன் கைகூப்பி மனமுருகி தரிசனம் செய்தார்.

ஆனந்த தரிசனத்திற்குப் பின்பு, மலைக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற போகர் சித்தரின் சன்னதிக்குச் சென்ற அவர், அங்கேயும் அமர்ந்து பக்திப் பரவசத்துடன் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டார்.

மலைக்கோயில் வளாகத்தில் அவரை காண ஏராளமான பொதுமக்களும், ரசிகர்களும் திரண்டனர். அவருடன் கைகுலுக்கியும், செல்ஃபி எடுத்தும் மகிழந்தனர். ​மலைக்கோயில் தரிசனங்கள் அனைத்தையும் நிறைவு செய்த பின்னர், ரோப் கார் மூலமாக மலைக்கோயிலில் இருந்து அடிவாரத்திற்கு இறங்கிச் சென்றார்.

ABOUT THE AUTHOR

Tamil Nadu's geography is as such it shares a coastal border with India’s neighbour Sri Lanka. Its political discourse is unique. ETV Bharat Tamil Nadu has a dedicated bureau in the capital and a batch of journalists covering the rest of the state. It brings you stories which matter to the region and from the state's perspective. Its coverage is not limited to the latest happenings but also will include unique and extraordinary stories from across the country and elsewhere from the globe as well....view details