ஏசி பேருந்து நிறுத்தம் திறப்பு - AC BUS STAND OPENS IN COIMBATORE

🎬 Watch Now: Feature Video

thumbnail
கோவையில் ஏசி பேருந்து நிறுத்தம் திறப்பு (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 12, 2026 at 9:57 AM IST

1 Min Read
Choose ETV Bharat

கோயம்புத்தூர்: மேற்கு தமிழகத்தில் முதன்முறையாக சூலூரில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் திறந்து வைக்கப்பட்டது.

கோவை மாவட்டம் ​சூலூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தின் முன்பாக சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த நவீன பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. எல்.ஜி. தனியார் மருத்துவமனையின் சமூகப் பங்களிப்பு நிதி (CSR) 7 லட்சம் ரூபாய் மற்றும் சூலூர் பேரூராட்சி நிர்வாகத்தின் 5 லட்சம் ரூபாய் என மொத்தம் 12 லட்சம் ரூபாய் செலவில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது.  

ஒரே நேரத்தில் 15 முதல் 20 பயணிகள் அமரக் கூடிய வகையில் குளிர்சாதன வசதியுடன் இந்தப் பேருந்து நிறுத்தம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தை சூ​லூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, பேருந்து நிறுத்தத்தின் அருகிலேயே ‘நம்ம சூலூர்’ என்ற செல்ஃபி பாயிண்ட்டையும் புலவர் செந்தலை கௌதமன் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், கோடை காலங்களில் பேருந்திற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் முதியவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

இந்தப் பேருந்து நிறுத்தத்தைப் பராமரிக்கும் பணிகளைச் சூலூர் பேரூராட்சி நிர்வாகமே மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார். வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சூலூரில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஏசி பேருந்து நிறுத்தம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கோயம்புத்தூர்: மேற்கு தமிழகத்தில் முதன்முறையாக சூலூரில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் திறந்து வைக்கப்பட்டது.

கோவை மாவட்டம் ​சூலூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தின் முன்பாக சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த நவீன பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. எல்.ஜி. தனியார் மருத்துவமனையின் சமூகப் பங்களிப்பு நிதி (CSR) 7 லட்சம் ரூபாய் மற்றும் சூலூர் பேரூராட்சி நிர்வாகத்தின் 5 லட்சம் ரூபாய் என மொத்தம் 12 லட்சம் ரூபாய் செலவில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது.  

ஒரே நேரத்தில் 15 முதல் 20 பயணிகள் அமரக் கூடிய வகையில் குளிர்சாதன வசதியுடன் இந்தப் பேருந்து நிறுத்தம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தை சூ​லூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, பேருந்து நிறுத்தத்தின் அருகிலேயே ‘நம்ம சூலூர்’ என்ற செல்ஃபி பாயிண்ட்டையும் புலவர் செந்தலை கௌதமன் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், கோடை காலங்களில் பேருந்திற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் முதியவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

இந்தப் பேருந்து நிறுத்தத்தைப் பராமரிக்கும் பணிகளைச் சூலூர் பேரூராட்சி நிர்வாகமே மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார். வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சூலூரில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஏசி பேருந்து நிறுத்தம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details