ETV Bharat / state

கரூர் விவகாரத்தில் விஜய் தொடர்ந்து பொய் பேசி வருகிறார்: வேல்முருகன் குற்றச்சாட்டு

விஜய்க்கு தமிழ்நாட்டின் புவியியல் அரசியலும் தெரியவில்லை, சமூக அரசியலும் தெரியவில்லை, நிர்வாக முறையும் தெரியவில்லை என வேல்முருகன் விமர்சித்திருக்கிற்

தவாக தலைவர் வேல்முருகன்
தவாக தலைவர் வேல்முருகன் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 25, 2026 at 8:05 AM IST

2 Min Read
Choose ETV Bharat

திருச்சி: கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் பெருந்தன்மையோடு நடந்து கொண்டார்; ஆனால் விஜய் தொடர்ந்து பொய் பேசி வருகிறார் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் திருச்சியில் பேட்டியளித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் டெல்டா மண்டல நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் பங்கேற்று, சட்டமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்திற்கு முன்னதாக வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், “கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரு இடத்தில் போட்டியிட்டோம். இந்த முறை கூடுதல் இடங்களை கேட்டிருக்கிறோம். பேச்சுவார்த்தையின்போது அது இறுதி செய்யப்படும்” என்றார்.

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கேட்டதற்கு, “தேர்தல் நேரத்தில் மக்களுக்கு வாக்குறுதிகளை கொடுத்து அவர்களுடைய அன்பையும் ஆதரவையும் பெறுவதற்கு அரசியல் கட்சிகள் பல்வேறு யுத்திகளை கையாளுவார்கள். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமியும் ஒரு யுத்தியை கையாண்டு உள்ளார்” என்று பதிலளித்தார்.

திமுக - தேமுதிக கூட்டணி குறித்து பேசுகையில், “ஒவ்வொரு கட்சியும் தேர்தல் நேரத்தில் அவர்களுக்கான இடங்கள், கோரிக்கைகள் அடிப்படையில் கூட்டணியில் இணைவார்கள். திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்துள்ளது பற்றி பலரும் விமர்சித்து வருகின்றனர். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அது கண்டிக்கத்தக்கது” என்று கூறினார்.

வேலூரில் விஜய் பேசியது குறித்து விமர்சித்த வேல்முருகன், “தமிழ்நாட்டின் அரசியல் சூழல் தெரியாமல் பண்பாடற்ற, புரிதலற்ற செய்திகளை தான் விஜய் பேசியுள்ளார். கரூர் சம்பவத்தின் போது முதலமைச்சர் மிகவும் நாகரிகமான முறையில் யாரையும் விமர்சிக்காமல் பேசினார். இன்னும் சொல்லப்போனால் விஜய்க்கு சாதகமாக தான் அவர் பேசினார்.

இதையும் படிங்க: 'இனி பொறுமையா இருக்க முடியாது' - புதிய கட்சி தொடங்கினார் சசிகலா

திமுக அரசு நினைத்திருந்தால் 41 பேர் மரணத்திற்கு விஜய் தான் காரணம் எனக் கூறி, அவரை கைது செய்திருக்க முடியும். ஆனால் முதலமைச்சர் அதை செய்யவில்லை. அவர் பெருந்தன்மையோடு நடந்து கொண்டார். ஆனால் விஜய் தொடர்ந்து பொய்யான கருத்துக்களை கூட்டங்களில் பேசி வருகிறார்.

யாரோ எழுதிக் கொடுப்பதைதான் அவர் பேசி வருகிறார். அப்படியிருக்கையில், விஜய் சிறந்த முறையில் ஆட்சி செய்வார் என நம்பும் கூட்டத்தை பார்த்தால்தான் பாவமாக இருக்கிறது. விஜய்க்கு தமிழ்நாட்டின் புவியியல் அரசியலும் தெரியவில்லை, சமூக அரசியலும் தெரியவில்லை, நிர்வாக முறையும் தெரியவில்லை. எந்த நடிகராக இருந்தாலும் அவரைப் பார்க்க மக்கள் வரத்தான் செய்வார்கள்.

சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த தலைவர்கள் பேசாத அளவுக்கு விஜய் தற்பெருமை பேசுகிறார்.அவர் பேச்சு நகைப்புக்குறியாதாகத்தான் இருக்கிறது. விஜய்யின் பேச்சுக்கள் அவரின் அனுபவமின்மையை தான் காட்டுகிறது” என்றார்.

கூட்டணி குறித்து பேசுகையில், “எல்லா கட்சிகளும் ஒவ்வொரு காலகட்டத்திலும் மற்ற கட்சிகளை விமர்சனம் செய்திருப்பார்கள். எங்கள் கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்துள்ளார்கள். ஆனால் இன்றைய சூழலில் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகிற கூட்டத்தை எதிர்ப்பதற்கும், ‘தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணி ஆட்சி’ என பேசும் அமித்ஷாவுக்கு சரியான பாடத்தை புகட்டுவதற்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைய வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பம். எங்களின் பிரதான எதிரி பாஜக தான்” என்றார்.