ETV Bharat / state

கூட்டங்களுக்கு அனுமதி தருவதில் பாரபட்சம்; தவெக தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

தங்களுக்கான அடிப்படை உரிமை பாதிக்கிப்படுவதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம் என்று தவெக தரப்பில் வாதிடப்பட்டது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 26, 2026 at 5:43 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: கட்சி கூட்டங்களுக்கு விண்ணிப்பித்தவர்களின் விவரங்களை அனைவருக்கும் தெரியும் வகையில் காவல்துறை இணையதளத்தில் வெளியிடுவது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கட்சி கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி கேட்டு 2025ஆம் ஆண்டு அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்காததால், அனுமதி வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி தவெக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கட்சி கூட்டங்களின் போது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினால், இழப்பீடு வசூலிக்கும் வகையில் உரிய வழிகாட்டுதல்கள் கொண்டுவர அரசுக்கு உத்தரவிட்டது.

இதனிடையே, 2025 செப்.27ம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அதன் தொடர்ச்சியாக, கட்சி கூட்டங்களுக்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு கடந்த ஜன.5ம் தேதி கொண்டு வந்தது.

இதனை தொடர்ந்து தவெக துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், '' தமிழகத்தில் மற்ற கட்சிகள் கூட்டங்களை நடத்த கூடாது என்ற அடிப்படையில் வழிகாட்டுதல்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு ஆம்புலன்ஸ்கள், மருத்துவ குழுக்கள், தன்னார்வலர்கள், தடுப்புகள், கண்கானிப்பு கேமரா, தீயணைப்பு துறை மற்றும் கூட்ட நேரம் குறித்து தெரிவிக்க வேண்டும் என்ற கடுமையான நிபந்தனைகள் கட்சிகளுக்கு எதிரான அடக்குமுறையாகும்.

இந்த வழிகாட்டுதல்களில் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வெளியே நடக்கும் அசம்பாவிதங்களுக்கும் கட்சியினர் பொறுப்பேற்க வேண்டும் என கூறுகிறது. இந்த வழிகாட்டுதல்கள், கூட்டத்தை ஒழுங்குப்படுத்துவதற்கு பதிலாக கட்சிகளை கட்டுப்படுத்தவும், கட்சிகளை செயல்படாமல் தடுக்கும் வகையில் கடுமையாக கொண்டு வரப்பட்டுள்ளது.

அதனால், இந்த வழிகாட்டுதல்களுக்கு தடை விதிக்க வேண்டும். தற்போது கொண்டு வரப்பட்ட வழிகாட்டுதல்களை ரத்து செய்து விட்டு, அனைத்து கட்சிக்கும் பொதுவான வழிகாட்டுதல்களை புதிதாக கொண்டு வர அரசுக்கு உத்தரவிட வேண்டும்'' என அதில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம் ஶ்ரீவஸ்தவா, நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு அனுமதி வழங்கலாம். பதிவு செய்யப்பட்ட கட்சி என்பதற்காக பாரபட்சம் காட்டப்படுகிறது. தங்களுக்கான அடிப்படை உரிமை பாதிக்கிப்படுவதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். நிகிழ்ச்சிக்கு வெளியே ஏற்படும் அசம்பாவிதங்களுக்கும் கட்சியையே பொறுப்பாக்குகிறது. கூட்டத்திற்கு முன் பாதுகாப்புக்கான தீயணைப்பு வாகனங்களை கேட்டால் தருவதில்லை. அதனால் நாங்கேளே சொந்தமாக வாங்கி வைத்துள்ளோம்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் தவெக அனுமதி கேட்டால் அதை பரிசீலிக்கப்படுவதில்லை. எனவே அனுமதி கேட்டு விண்ணப்பித்தால், அதை காவல்துறை இணையதளத்தில் விண்ணப்பித்த நேரத்தையும் குறிப்பிட்டு வெளியிட்டால், யாருக்கும் எந்த பிரச்சினையும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து அரசு தரப்பில், வழிகாட்டுதலுக்கு பின் தேவையற்ற அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் இதை ஏற்றுள்ளனர். புதிய வழிகாட்டுதிலின் படி உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கிப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், 30 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என்பதில் என்ன சிரமம் உள்ளது? ஏற்கெனவே அதிகப்படியான கூட்டத்தால் ஏற்பட்ட பாதிப்பால் 41 பேர் உயிரிழந்துள்ளனர். அதுபோன்ற சம்பவங்களை தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில் தவறு இல்லை. ஏராளமாக கூட்டங்களை கட்டுப்படுத்தவே கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. வழிகாட்டுதல் குறித்த அரசின் ஆலோசனையில் தவெக கலந்து கொண்டது. இப்போது எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? அவசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்பதில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது.

புதிதாக பதிவு செய்த கட்சி இன்று அனுமதி கேட்கும் போது, அங்கீகரிக்கப்பட்ட கட்சி மறுநாள் அனுமதி கேட்டால் யாருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பில், ஒரே இடத்திற்கு பதிவு செய்யப்பட்ட கட்சி முதலில் அனுமதி கேட்டால், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அவர்களுக்கே அனுமதி வழங்கப்படும், வேறு யாருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டது என தெரிவித்தார்.

இதையடுத்து, அனுமதி கேட்டு விண்ணப்பிப்பிவர்களின் விவரங்களை இணையதளத்தில் வெளியிடுவது குறித்து 3 வாரங்களில் அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: கே.என் நேரு மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் சிபிஐ விசாரணை கோர முடிவு - எம்.பி இன்பதுரை தரப்பு