திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உட்பட 8 பேர் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கோப்புப் படம் (ETV Bharat Tamil Nadu)

Published : February 24, 2026 at 11:07 AM IST
சென்னை: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 8 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் இன்று உத்தரவிட்டுள்ளார்.
| அதிகாரி பெயர் | முந்தைய பதவி | புதிய பதவி |
| ஆர்.ஜெயா | பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர் | சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் |
| கலைச்செல்வி மோகன் | காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் | பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை இயக்குநர் |
| த.சினேகா | செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் | காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் |
| எஸ்.மாலதி ஹெலன் | செங்கல்பட்டு மாவட்ட சார் ஆட்சியர் | செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் |
| கு.ரவிகுமார் | திருவள்ளூர் மாவட்ட சார் ஆட்சியர் | கரூர் மாவட்ட ஆட்சியர் |
| சந்திர சேகர் சாகமூரி | ஒன்றிய அரசுப் பணியிலிருந்து திரும்புதல் | சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் |
| அ.சண்முக சுந்தரம் | - | தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் |
| நே.பொன்மணி | - | வணிக வரித் துறை இணை ஆணையர், ஈரோடு |

