ETV Bharat / sports

டி20 உலகக் கோப்பை 2026: அரையிறுதிக்கான போட்டி நடுவர்களை அறிவித்த ஐசிசி

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரின் 2026 சீசனுக்கான அரையிறுதி சுற்றுக்கு இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் முன்னேறியுள்ளன.

அரையிறுதிக்கான போட்டி நடுவர்களை அறிவித்தது ஐசிசி
அரையிறுதிக்கான போட்டி நடுவர்களை அறிவித்தது ஐசிசி (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : March 3, 2026 at 4:07 PM IST

1 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகளுக்கான கள நடுவர்கள் மற்றும் போட்டி நடுவர்கள் குழுவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவிதுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் முன்னாள் சாம்பியன்களான ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை உள்ளிட்ட அணிகள் லீக் மற்றும் சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறிய நிலையில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இதனையடுத்து மார்ச் 4ஆம் தேதில் கொல்கத்தாவில் நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளும், மார்ச் 5ஆம் தேதில் மும்பையில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அதனைத் தொடர்ந்து மார்ச் 8ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் அரையிறுதி போட்டிகளுக்கான போட்டி நடுவர்கள் குழுவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது. இதில் கொல்கத்தாவில் நடைபெறும் தென்னாப்பிரிக்கா-நியூசிலாந்து இடையிலான முதல் அரையிறுதி ஆட்டத்தில் ரிச்சார்ட் இல்லிங்வொர்த் மற்றும் அலெக்ஸ் வார்ஃப் ஆகியோர் கள நடுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு மூன்றாம் நடுவராக நிதின் மேனனும், நான்காம் நடுவராக ராட் டக்கரும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், போட்டி நடுவராக ஜவகல் ஸ்ரீநாத் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் மும்பையில் நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டியின் கள நடுவர்களாக கிர்ஸ் கேஃப்னி மற்றும் அல்லாவுதீன் பலெக்கர் செயல்படவுள்ளனர். மேலும் மூன்றாம் நடுவராக ஆத்ரியன் ஹோல்ட்ஸ்டாக்கும், நான்காம் நடுவராக பால் ரைஃபலும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் இந்த போட்டியின் நடுவராக ஆண்டி பைக்ராஃப்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க

இந்த போட்டிகளின் முடிவுக்கு பின்னர், டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கான நடுவர் குழுவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து எதிர்வரும் அரையிறுதி போட்டிகளில் எந்தெந்த அணிகள் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்ற ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.