விழுப்புரம்: பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டதால், பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்க விழுப்புரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு அதிவேக ரயில் இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்பை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது. விழுப்புரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வண்டி எண்: 06105, மே 2 முதல் ஜூன் 30 வரை இயக்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் என வாரம் நான்கு முறை இந்த ரயில் இயக்கப்படுகிறது.
விழுப்புரத்தில் இருந்து காலை 4:15 மணிக்கு கிளம்பும் ரயில்,
- விருத்தாச்சலம் (4:50/4:52),
- ஸ்ரீரங்கம் (06:06/06.08),
- திருச்சிராப்பள்ளி (06:25/06:30),
- திண்டுக்கல் (07:33/07:35),
- மதுரை (09.00/09:10),
- மானாமதுரை (09:53/09:55),
- ராமநாதபுரம் (10:38/10:40),
வழியாக காலை 11:40 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.
மறுமார்க்கமாக, ராமேஸ்வரத்தில் இருந்து விழுப்புரம் வரும் சிறப்பு அதிவேக ரயில் திங்கள், செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பிற்பகல் 2.35 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
ராமேஸ்வரல் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பும் வண்டி எண். 06106,
- ராமநாதபுரம் (பகல் 03:18/03:20),
- மானாமதுரை (மாலை 04:13/04:15),
- மதுரை (05:15/05:25),
- திண்டுக்கல் (06:13/06:15),
- திருச்சிராப்பள்ளி (இரவு 07:35/07:40),
- ஸ்ரீரங்கம் (08:00/08.02),
- விருத்தாச்சலம் (09:20/09:22),
வழியாக இரவு 10:35 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும்.
இந்த ரயிலில் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டி ஒன்றும், இருக்கை வசதிகள் கொண்ட 13 பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 08.00 மணிக்குத் தொடங்கும் எனத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க |
கோடை கால விடுமுறையை ஒட்டி, சுற்றுலாத் தலங்களை இணைக்கும் ரயில்வே வழித்தடங்களில் அதிக ரயில்களை இயக்க பயணிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் பட்சத்தில், முன்பதிவு செய்யும் பயணிகளின் டிக்கெட்டுகள் அதிகளவு ரத்தாவது தடுக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இவற்றை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட தென்னக ரயில்வே நிர்வாகம் தொடர்ச்சியாக கோடை கால சிறப்பு ரயில்களை இயக்க அனுமதி வழங்கிவருகிறது. அந்தவகையில், தற்போது விழுப்புரம் - ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் அதிவேக சிறப்பு ரயில் சேவை தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.