ETV Bharat / state

''திருநங்கைகளுக்கு பட்டா வழங்கக் கூடாது" - பெட்ரோல் கேனுடன் கிராம மக்கள் போராட்டம்! - UPPARAPPALLI VILLAGE

திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோல் கேனுடன் கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பெட்ரோல் கேனுடன் கிராம மக்கள்
பெட்ரோல் கேனுடன் கிராம மக்கள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 19, 2025 at 7:29 PM IST

1 Min Read

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த உப்பரப்பள்ளி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பியே உள்ளனர்.

இதற்கிடையே உப்பரப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க கோரி வேண்டி பல முறை சம்பந்தப்பட்ட வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்து உள்ளதாகவும், ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் உப்பரப்பள்ளி கிராமத்தின் அருகே உள்ள வருவாய்த் துறைக்கு சொந்தமான இடத்தில் வெளி ஊர்களில் உள்ள திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதாக வருவாய் துறை மூலம் தகவல் வெளியானது.

இதை தொடர்ந்து உப்பரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெட்ரோல் கேனுடன் திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டா கொடுக்கும் இடத்தில் திடீரென குவிந்தனர்.

இதையும் படிங்க: இந்தியாவில் ஊழல் கொடி பறக்க யார் காரணம்? ஜெயக்குமார் பேச்சால் பரபரப்பு!

பின்னர், ''நாங்கள் வீட்டு மனை பட்டா கேட்டு விண்ணப்பித்து நீண்ட காலமாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அப்படி இருக்கும் போது எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்காமல் எங்கேயோ வசிக்கும் திருநங்கைகளுக்கு இங்கு வழங்கினால் எப்படி ஏற்க முடியும்? திருநங்கைகளுக்கு இங்கு வீட்டுமனைப் பட்டா வழங்கினால் தீக்குளிப்போம்'' என்று கூறியபடி பெட்ரோல் கேனுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது சம்பந்தமாக கிராம மக்கள் கூறும் போது, ''இந்த கிராமத்தில் உள்ள 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என பல முறை கோரிக்கை வைத்துள்ளோம். இந்த கிராமத்தில் உள்ள வீட்டு மனை இல்லாத பொது மக்களுக்கு முதலில் பட்டா வழங்கிய பின்னரே, மற்றவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.'' என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: பள்ளிகளில் நடைபெறும் கொடுமைகள் குறித்த நீதிபதி சந்துரு அறிக்கையை அமல்படுத்துக - காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் கோரிக்கை!

குடியாத்தம் அடுத்த உப்பரப்பள்ளி கிராமத்தில் திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கூடாது என்று கூறி பெட்ரோல் கேனுடன் கிராம மக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த உப்பரப்பள்ளி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பியே உள்ளனர்.

இதற்கிடையே உப்பரப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க கோரி வேண்டி பல முறை சம்பந்தப்பட்ட வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்து உள்ளதாகவும், ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் உப்பரப்பள்ளி கிராமத்தின் அருகே உள்ள வருவாய்த் துறைக்கு சொந்தமான இடத்தில் வெளி ஊர்களில் உள்ள திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதாக வருவாய் துறை மூலம் தகவல் வெளியானது.

இதை தொடர்ந்து உப்பரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெட்ரோல் கேனுடன் திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டா கொடுக்கும் இடத்தில் திடீரென குவிந்தனர்.

இதையும் படிங்க: இந்தியாவில் ஊழல் கொடி பறக்க யார் காரணம்? ஜெயக்குமார் பேச்சால் பரபரப்பு!

பின்னர், ''நாங்கள் வீட்டு மனை பட்டா கேட்டு விண்ணப்பித்து நீண்ட காலமாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அப்படி இருக்கும் போது எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்காமல் எங்கேயோ வசிக்கும் திருநங்கைகளுக்கு இங்கு வழங்கினால் எப்படி ஏற்க முடியும்? திருநங்கைகளுக்கு இங்கு வீட்டுமனைப் பட்டா வழங்கினால் தீக்குளிப்போம்'' என்று கூறியபடி பெட்ரோல் கேனுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது சம்பந்தமாக கிராம மக்கள் கூறும் போது, ''இந்த கிராமத்தில் உள்ள 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என பல முறை கோரிக்கை வைத்துள்ளோம். இந்த கிராமத்தில் உள்ள வீட்டு மனை இல்லாத பொது மக்களுக்கு முதலில் பட்டா வழங்கிய பின்னரே, மற்றவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.'' என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: பள்ளிகளில் நடைபெறும் கொடுமைகள் குறித்த நீதிபதி சந்துரு அறிக்கையை அமல்படுத்துக - காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் கோரிக்கை!

குடியாத்தம் அடுத்த உப்பரப்பள்ளி கிராமத்தில் திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கூடாது என்று கூறி பெட்ரோல் கேனுடன் கிராம மக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.