ETV Bharat / state

ரயில்வே பாதுகாப்பு படை கபடி போட்டி: மதுரை அணி 2வது இடம்.. அப்போ முதலிடம் யாரு? - SOUTHERN RAILWAY KABADDI TOURNAMENT

ரயில்வே பாதுகாப்பு படை சார்பாக நடைபெற்ற கபடி போட்டியில், திருச்சி அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

கபடி விளையாடும் ரயில்வே பாதுகாப்பு படை
கபடி விளையாடும் ரயில்வே பாதுகாப்பு படை (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 20, 2025 at 10:50 AM IST

1 Min Read

மதுரை: ரயில்வே பாதுகாப்பு படை சார்பாக, மண்டல அளவிலான 33-வது கபடி போட்டிகள் மதுரையில் நடைபெற்று வந்தது. அதில், திருச்சிராப்பள்ளி அணி சாம்பியன் பட்டம் பெற்ற நிலையில், போராடி இரண்டாம் இடத்தை வென்றுள்ளது மதுரை அணி.

ரயில்வே பாதுகாப்பு படையின் சார்பாக மண்டல அளவில் 33வது கபடி போட்டிகள் மதுரை ரெட் ஃபீல்ட் மைதானத்தில்‌ நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் நடைபெற்றது. இந்த போட்டியில் திருச்சிராப்பள்ளி (TPJ), சென்னை (MAS) மற்றும் சேலம் (SA) கோட்டங்களைச் சேர்ந்த அணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றது.

இதனை ஏப்ரல் 18ஆம் தேதி மதுரை‌ கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் எல். நாகேஸ்வர ராவ் தொடங்கி வைத்தார்.‌ அன்றைய தினம் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் மதுரை (MDU) மற்றும் திருச்சிராப்பள்ளி (TPJ) கோட்டங்கள் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன. மூன்றாம் இடம் பெற சென்னை (MAS) மற்றும் சேலம் (SA) அணிகளுக்கு இடையே போட்டி 19 ஏப்ரல் காலை நடைபெற்றது.

ரயில்வே பாதுகாப்பு படை கபடி போட்டி
ரயில்வே பாதுகாப்பு படை கபடி போட்டி (ETV Bharat Tamil Nadu)

அதனைத் தொடர்ந்து, மதுரை - திருச்சிராப்பள்ளி அணிகளுக்கு இடையே இறுதிப்போட்டி நேற்று மாலை 4 மணி அளவில் மதுரை ரெட் ஃபீல்ட் மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் திருச்சிராப்பள்ளி கோட்டம் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அதேசமயம் மதுரை கோட்டம் போராடி இரண்டாம் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து, போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளும், வெற்றிக் கோப்பையும் வழங்கப்பட்டது.

போட்டியில் வெற்றி பெற்ற அணிகள்
போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் (ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: லோகோ பைலட்கள் நலன் கருதி 90% ரயில் என்ஜின்களில் ஏசி வசதி - மதுரை ரயில்வே கோட்டம் பெருமிதம்!

இந்த நிகழ்ச்சியில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவாஸ்தவா, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மதுரை ரயில்வே பாதுகாப்பு படை உதவி பாதுகாப்பு ஆணையர் சிவதாஸ் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார. மேலும், ஆய்வாளர் சத்ரி மார்கூ, குற்றப்பிரிவு ஆய்வாளர் நிஷாந்த், மோகன் சிங் மீனா, மதுரை மண்டல தலைமையக ஆய்வாளர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் இணைப்பு
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் இணைப்பு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

மதுரை: ரயில்வே பாதுகாப்பு படை சார்பாக, மண்டல அளவிலான 33-வது கபடி போட்டிகள் மதுரையில் நடைபெற்று வந்தது. அதில், திருச்சிராப்பள்ளி அணி சாம்பியன் பட்டம் பெற்ற நிலையில், போராடி இரண்டாம் இடத்தை வென்றுள்ளது மதுரை அணி.

ரயில்வே பாதுகாப்பு படையின் சார்பாக மண்டல அளவில் 33வது கபடி போட்டிகள் மதுரை ரெட் ஃபீல்ட் மைதானத்தில்‌ நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் நடைபெற்றது. இந்த போட்டியில் திருச்சிராப்பள்ளி (TPJ), சென்னை (MAS) மற்றும் சேலம் (SA) கோட்டங்களைச் சேர்ந்த அணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றது.

இதனை ஏப்ரல் 18ஆம் தேதி மதுரை‌ கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் எல். நாகேஸ்வர ராவ் தொடங்கி வைத்தார்.‌ அன்றைய தினம் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் மதுரை (MDU) மற்றும் திருச்சிராப்பள்ளி (TPJ) கோட்டங்கள் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன. மூன்றாம் இடம் பெற சென்னை (MAS) மற்றும் சேலம் (SA) அணிகளுக்கு இடையே போட்டி 19 ஏப்ரல் காலை நடைபெற்றது.

ரயில்வே பாதுகாப்பு படை கபடி போட்டி
ரயில்வே பாதுகாப்பு படை கபடி போட்டி (ETV Bharat Tamil Nadu)

அதனைத் தொடர்ந்து, மதுரை - திருச்சிராப்பள்ளி அணிகளுக்கு இடையே இறுதிப்போட்டி நேற்று மாலை 4 மணி அளவில் மதுரை ரெட் ஃபீல்ட் மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் திருச்சிராப்பள்ளி கோட்டம் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அதேசமயம் மதுரை கோட்டம் போராடி இரண்டாம் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து, போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளும், வெற்றிக் கோப்பையும் வழங்கப்பட்டது.

போட்டியில் வெற்றி பெற்ற அணிகள்
போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் (ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: லோகோ பைலட்கள் நலன் கருதி 90% ரயில் என்ஜின்களில் ஏசி வசதி - மதுரை ரயில்வே கோட்டம் பெருமிதம்!

இந்த நிகழ்ச்சியில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவாஸ்தவா, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மதுரை ரயில்வே பாதுகாப்பு படை உதவி பாதுகாப்பு ஆணையர் சிவதாஸ் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார. மேலும், ஆய்வாளர் சத்ரி மார்கூ, குற்றப்பிரிவு ஆய்வாளர் நிஷாந்த், மோகன் சிங் மீனா, மதுரை மண்டல தலைமையக ஆய்வாளர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் இணைப்பு
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் இணைப்பு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.