ETV Bharat / state

சோரியாசிஸ் நோய்க்கு புதிய தீர்வு..தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாதனை! - New solution for psoriasis

New solution for psoriasis: தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சோரியாசிஸ் நோய்க்கு புதிய தீர்வை கண்டுபிடித்துள்ளனர்.

மருத்துவர் ததேயுஸ் செய்தியாளர் சந்திப்பு
மருத்துவர் ததேயுஸ் செய்தியாளர் சந்திப்பு (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 28, 2024 at 8:34 PM IST

2 Min Read
Choose ETV Bharat

தூத்துக்குடி: சோரியாசிஸ் என்பது பல காரணிகளால் ஏற்படும் அழற்சி தோல் நோயாகும். இது மொத்த மக்கள்தொகையில் 2-3 சதவிகிதம் பேரை பாதிக்கிறது. இவர்களில் சுமார் 20-30 சதவிகிதம் நோயாளிகள், மூட்டுகளையும் தாக்கும் சோரியாடிக் ஆர்த்ரைடிஸ் நோய் பாதிப்புக்குள்ளாகின்றனர். சோரியாசிஸ் நோய்க்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இன்னும் இதற்கான ஒரு முழு தீர்வு அளிக்கும் சிகிச்சை முறை எட்டப்படவில்லை.

நியூரீபிக்ஸ் பீட்டா குளுக்கான்களைப் பயன்படுத்தி நடத்திய முந்தைய மருத்துவ ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்ட, ஜப்பானிய விஞ்ஞானிகளின் அறிக்கைகளின் அடிப்படையில், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி தோல் மருத்துவத் துறை பேராசிரியர் டாக்டர் ஜே. ததேயுஸ் குழுவினர் நடத்திய மருத்துவ ஆராய்ச்சியின் முடிவுகள், ஜூன் 27-29ல் ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற சர்வதேச தடிப்புத் தோல் அழற்சி சங்கங்களின் 7வது உலக சோரியாசிஸ் மற்றும் சோரியாடிக் ஆர்த்ரிடிஸ் மாநாட்டில் பகிரப்பட்டது.

இதனையடுத்து, தூத்துக்குடி தோல் மருத்துவர் டாக்டர் ததேயுஸ் 20 நோயாளிகளுக்கு இந்த சோதனையை நடத்தியுள்ளார். அவர்களில் 10 பேர் வழக்கமான சிகிச்சைகளுடன் நியூ ரீபிக்ஸ் உட்கொண்டனர். ஆய்வில், நியூரீபிக்ஸ் உட்கொண்ட 80% நோயாளிகள் தங்கள் தோல் நிலையில் முன்னேற்றங்களை உணர்ந்துள்ளனர்.

தோலில் லிம்போசைட்டுகளின் ஊடுருவல், தோல் தடிமன், புண்களின் வீரியம், ஆகியவை வழக்கமான சிகிச்சையை மட்டுமே எடுத்துக்கொண்டவர்களைவிட, நியூ ரீபிக்ஸ் உட்கொண்டவர்களில் கணிசமாகக் குறைந்தது. சோரியாசிஸ் நோயின் தீவிரத்தை மதிப்பிடுவதற்கான PASI ஸ்கோரும் நியூரீபிக்ஸ் குழுவில் கணிசமாகக் குறைந்துள்ளது.

2009 இல் ஜப்பானில் தொடங்கிய, ஆரோபாசிடியம் புலுலன்ஸ் மூலம் தயாரிக்கப்படும் பீட்டா குளுக்கான் குறித்த ஆராய்ச்சி, KK-Ay எலிகள், SD எலிகள், NASH மற்றும் mdx எலிகளில் பாதுகாப்பை மட்டுமின்றி, நியூரீபிக்ஸ், நோயெதிர்ப்பு சக்தியை பயனுள்ள வகையில் மாற்றுகின்றதையும் உறுதிப்படுத்தியது.

இதைத்தொடர்ந்து ஆரோக்கியமான தன்னார்வலர்கள் மற்றும் டச்சேன் தசைநார் சிதைவு (டிஎம்டி- DMD) நோயாளிகளில் நடத்திய மருத்துவ ஆய்வுகள், நியூரீபிக்ஸ், குடல் நுண்ணுயிரிகளை மறுசீரமைப்பதன் மூலமும், பல நோயாளிகளுக்கு பலன் அளித்ததோடு இப்போது சோரியாசிஸ் நோயாளிகளுக்கும் ஒரு நம்பிக்கையாக உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தோல் பிரிவு மருத்துவர் ததேயுஸ் செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நியூரீபிக்ஸ் பீட்டா குளுக்கான்களைப் பயன்படுத்தி நடத்திய முந்தைய மருத்துவ ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்ட, ஜப்பானிய விஞ்ஞானிகளின் அறிக்கைகளின் அடிப்படையில், தூத்துக்குடி மருத்துவமனையில் 30 நோயாளிகளுக்கு இந்த சோதனையை நடத்தப்பட்டது.

அவர்களில் 20 பேர் வழக்கமான சிகிச்சைகளுடன் நியூ ரீபிக்ஸ் உட்கொண்டனர், மற்ற 10 பேர் வழக்கமான சிகிச்சைகளை மட்டுமே மேற்கொண்ட நிலையில் 2 பேர் முற்றிலுமாக குணமடைந்துள்ளர். இன்றுடன் 28 நாள்களாகிறது. நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. உணவு சம்பந்தப்பட்ட முறை என்பதால் எந்த பிரச்சினையும் இல்லை” என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க: அரசு காப்பீடு வாங்கித் தருவதாகக் கூறி மூதாட்டியிடம் செயின் பறிப்பு - சென்னையில் நடந்தது என்ன?