ETV Bharat / state

முடிவுக்கு வருமா கல் குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்? நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை! - STONE QUARRY CRUSHER STRIKE

சிறு கனிம நில வரி விதிப்பை கைவிடும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என தமிழ்நாடு கல் குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்

செய்தியாளர்களை சந்தித்த கல் குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள்
செய்தியாளர்களை சந்தித்த கல் குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 19, 2025 at 6:31 PM IST

1 Min Read

சென்னை: அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்ததாகவும், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஏப்ரல் 21-ம் தேதி நடைபெறும் என்றும் தமிழ்நாடு கல் குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 16 ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் தமிழ்நாடு கல் குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறு கனிம நில வரி விதிப்பை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், கட்டுமானப் பணிகளுக்கான எம்சாண்ட் மற்றும் ஜல்லி போன்றவற்றின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத் துறை மற்றும் கனிம வளத் துறை அமைச்சர் துரைமுருகனை சந்தித்து, தமிழ்நாடு கல் குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அமைச்சரை சந்தித்த கல் குவாரி, கிரஷர் உரிமையாளர்கள்
அமைச்சரை சந்தித்த கல் குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் (ETV Bharat Tamil Nadu)

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு கல் குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சின்னசாமி,
"சிறு கனிம நில வரி விதிப்பை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

நிலங்களில் வெட்டி எடுக்கும் கனிமங்களுக்கு கன மீட்டருக்கு 90 ரூபாய் ராயல்டி பெறப்பட்டு வந்தது. இந்நிலையில் வெட்டி எடுக்கப்படும் கனிமங்களுக்கு கன மீட்டரில் விதிக்கப்பட்டு வந்த ராயல்டி தற்போது டன் என்ற புதிய அளவில் விதிக்கப்படுகிறது. இதில் கன மீட்டருக்கு 90 ஆக இருந்த ராயல்டி தற்போது அளவு கோல் மாற்றப்பட்டதால் 165 ரூபாயாக உயர்ந்து விட்டது. இதனை குறைக்க வேண்டும்.

வரிகளை அதிகம் செலுத்தி தொழில் செய்ய முடியாத நிலையில் நாங்கள் உள்ளோம். வேறு மாநிலங்களில் விதிக்கப்படாத வரிகள் எல்லாம் இங்கே விதிக்கப்படுகிறது. அதிக வரி செலுத்தி தொழில் செய்ய முடியாது. அதிகமான ராயல்டி மற்றும் வரி செலுத்துவதன் காரணமாக ஜல்லி, எம் சாண்ட் ஆகிய கட்டுமானப் பொருள்களின் விலை உயரும்.

இந்த நிலையில் அமைச்சருடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. முதல்வருடன் கலந்து பேசி முடிவை அறிவிப்பதாக அமைச்சர் தெரிவித்தார். மீண்டும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமைச்சர் துரைமுருகன் எங்களை அழைத்துள்ளார். இறுதி முடிவு எட்டப்படும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும்" என்று கூறினார்.

சென்னை: அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்ததாகவும், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஏப்ரல் 21-ம் தேதி நடைபெறும் என்றும் தமிழ்நாடு கல் குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 16 ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் தமிழ்நாடு கல் குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறு கனிம நில வரி விதிப்பை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், கட்டுமானப் பணிகளுக்கான எம்சாண்ட் மற்றும் ஜல்லி போன்றவற்றின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத் துறை மற்றும் கனிம வளத் துறை அமைச்சர் துரைமுருகனை சந்தித்து, தமிழ்நாடு கல் குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அமைச்சரை சந்தித்த கல் குவாரி, கிரஷர் உரிமையாளர்கள்
அமைச்சரை சந்தித்த கல் குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் (ETV Bharat Tamil Nadu)

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு கல் குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சின்னசாமி,
"சிறு கனிம நில வரி விதிப்பை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

நிலங்களில் வெட்டி எடுக்கும் கனிமங்களுக்கு கன மீட்டருக்கு 90 ரூபாய் ராயல்டி பெறப்பட்டு வந்தது. இந்நிலையில் வெட்டி எடுக்கப்படும் கனிமங்களுக்கு கன மீட்டரில் விதிக்கப்பட்டு வந்த ராயல்டி தற்போது டன் என்ற புதிய அளவில் விதிக்கப்படுகிறது. இதில் கன மீட்டருக்கு 90 ஆக இருந்த ராயல்டி தற்போது அளவு கோல் மாற்றப்பட்டதால் 165 ரூபாயாக உயர்ந்து விட்டது. இதனை குறைக்க வேண்டும்.

வரிகளை அதிகம் செலுத்தி தொழில் செய்ய முடியாத நிலையில் நாங்கள் உள்ளோம். வேறு மாநிலங்களில் விதிக்கப்படாத வரிகள் எல்லாம் இங்கே விதிக்கப்படுகிறது. அதிக வரி செலுத்தி தொழில் செய்ய முடியாது. அதிகமான ராயல்டி மற்றும் வரி செலுத்துவதன் காரணமாக ஜல்லி, எம் சாண்ட் ஆகிய கட்டுமானப் பொருள்களின் விலை உயரும்.

இந்த நிலையில் அமைச்சருடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. முதல்வருடன் கலந்து பேசி முடிவை அறிவிப்பதாக அமைச்சர் தெரிவித்தார். மீண்டும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமைச்சர் துரைமுருகன் எங்களை அழைத்துள்ளார். இறுதி முடிவு எட்டப்படும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும்" என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.