ETV Bharat / state

"இரட்டை இலையுடன் தாமரை மலர்ந்தே தீரும்" - நயினார் நாகேந்திரன் பேச்சு! - NAYINAR REVEALS SECRET TO VICTORY

2026 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் தொகுதி அளவில் பாஜக நிர்வாகிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தல்கள் வழங்கி உள்ளார்

சேலம் மாவட்டம் ஓமலூரில் சேலம் பெருங்கோட்ட நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்
சேலம் மாவட்டம் ஓமலூரில் சேலம் பெருங்கோட்ட நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 19, 2025 at 5:51 PM IST

3 Min Read

சேலம்: ஓமலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் சேலம் பெருங்கோட்ட நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு மற்றும் சேலம் மாநகர், தருமபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு ஆகிய மாவட்டங்களின் மாவட்ட தலைவர்கள், மண்டல தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், "2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக, அதிமுக மற்றும் தோழமைக் கட்சிகள் அடங்கிய கூட்டணி வெற்றி பெறும் எழுச்சி இப்போதே கண்ணுக்குத் தெரிகிறது. தமிழ்நாட்டின் கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை எடுத்த முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும். சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற பாஜகவினர் கடுமையாக உழைக்க வேண்டும். சமூக வலைதளங்களில் பாஜக சார்பில் மீம்ஸ் போட்டால், உடனே இன்னொரு மீம்ஸ் வந்து விடுகிறது. இந்த விஷயத்தில் அகில இந்திய தலைமை சொன்னபடி, சமூக வலைத்தளங்களில் தமிழ்நாடு பாஜக முழுமையாக செயல்பட வேண்டும். நாம் மீம்ஸ் போட்டால் திமுக கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறை கைது செய்து விடுகிறது. சமூக வலைத்தளங்களில் இயங்கும் பாஜக நிர்வாகிகள் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்.

வேல் யாத்திரை மூலம் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தமிழ்நாடு முழுவதும் எழுச்சியை ஏற்படுத்தினார். சி.பி.ராதாகிருஷ்ணன் ரத யாத்திரை மூலம் கட்சியை வளர்த்தார். இப்போது தமிழ்நாடு மாநில தலைவர் பதவியை என்னை நம்பி கொடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் நம் கூட்டணி இறுதியான உறுதியான கூட்டணி என்பதை மறந்து விடக் கூடாது. அகில இந்திய தலைமை முடிவை மீறி கூட்டணி பற்றி விமர்சனம் செய்தால் வேறு மாதிரி போய்விடும்.

இரட்டை இலையுடன் தாமரை மலர்ந்தே தீரும். திமுக தலைமையில் அமைந்திருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி. நமது கூட்டணி நியாயமான, நேர்மையான, ஊழலற்ற கூட்டணியாகும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலர்வதற்கு தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும். பல தியாகங்களால் தான் பாஜக வளர்ந்துள்ளது. அந்த தியாகத்திற்கு பெருமை சேர்க்க அனைத்து நிர்வாகிகளும் ஒன்று பட்டு செயல்பட்டு, சட்டப் பேரவைத் தேர்தலுக்காக இப்போது இருந்தே பூத் அளவில் பணியைத் தொடங்க வேண்டும். பூத் அளவிலான கட்டமைப்பை மேம்படுத்தினால் சட்டப் பேரவைத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற முடியும்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் மீதான பாஜகவின் நோக்கம் இது தான்.... உடைத்துப் பேசிய திருமாவளவன்!

கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? எந்தெந்த தொகுதிகள்? என்பதை மத்திய அமைச்சர் அமித்ஷா, அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் ஆகியோர் தான் முடிவு செய்வார்கள். என்னைப் பொறுத்த வரை பாஜக தொண்டர்களை நிர்வகிப்பது மட்டும் தான். தமிழ்நாட்டில் மேலும் பாஜகவை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதும் என்னுடைய பணியாகும். கூட்டணி, தேர்தல் போன்ற விஷயங்களில் தேசிய தலைமை எடுக்கும் முடிவை ஏற்பது தான் கட்சி நிர்வாகிகளின் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

தமிழ்நாடு அரசுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும், அதிக நிதி கிடைக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. மற்ற மாநிலங்களை விடவும் தமிழ்நாட்டுக்கு அதிக நிதி வேண்டும் என்பது தான் எங்களுடைய கருத்தாகவும் இருக்கிறது. தமிழ்நாடு அரசு, மத்திய அரசோடு கலந்து பேசி நல்லுறவைப் பேணினால் மட்டுமே தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடைபெறும்.

ஆனால், பொதுமக்களின் எதிர்ப்பை திசை திருப்ப வேண்டும் என்பதற்காகவே திமுக அரசின் சார்பில் தீர்மானங்கள் போடப்படுகின்றன. நீட் தேர்வை யாராலும் ரத்து செய்ய முடியாது. ஆனால் அதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தீர்மானம் போடுகிறார்கள். கச்சத்தீவு மீண்டும் நமக்கு கிடைக்காது. இந்த விஷயத்தில் பிரதமர் நினைத்தால் மட்டுமே நமக்கு கச்சத்தீவு கிடைக்கும். எனவே, மத்திய அரசுடன் இணங்கிப் போக வேண்டும். வெறும் தீர்மானங்களை மட்டுமே போட்டால் கச்சத்தீவு கிடைத்து விடுமா?.

திமுக 18 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தது. அப்போதெல்லாம் பேசாமல் இருந்து விட்டு, இப்போது மாநில சுயாட்சி பற்றி திமுக பேசி வருகிறது. இதற்கெல்லாம் பதிலளிக்காமல் மக்களின் மனதை மடைமாற்றவே இதுபோன்ற தீர்மானங்கள் போடப்படுகின்றன. ஆனால் திமுக அரசு எதிர்பார்ப்பது போல மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு விட்டது. 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் மூலம் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. சிறு கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்,"என்றார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

சேலம்: ஓமலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் சேலம் பெருங்கோட்ட நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு மற்றும் சேலம் மாநகர், தருமபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு ஆகிய மாவட்டங்களின் மாவட்ட தலைவர்கள், மண்டல தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், "2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக, அதிமுக மற்றும் தோழமைக் கட்சிகள் அடங்கிய கூட்டணி வெற்றி பெறும் எழுச்சி இப்போதே கண்ணுக்குத் தெரிகிறது. தமிழ்நாட்டின் கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை எடுத்த முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும். சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற பாஜகவினர் கடுமையாக உழைக்க வேண்டும். சமூக வலைதளங்களில் பாஜக சார்பில் மீம்ஸ் போட்டால், உடனே இன்னொரு மீம்ஸ் வந்து விடுகிறது. இந்த விஷயத்தில் அகில இந்திய தலைமை சொன்னபடி, சமூக வலைத்தளங்களில் தமிழ்நாடு பாஜக முழுமையாக செயல்பட வேண்டும். நாம் மீம்ஸ் போட்டால் திமுக கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறை கைது செய்து விடுகிறது. சமூக வலைத்தளங்களில் இயங்கும் பாஜக நிர்வாகிகள் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்.

வேல் யாத்திரை மூலம் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தமிழ்நாடு முழுவதும் எழுச்சியை ஏற்படுத்தினார். சி.பி.ராதாகிருஷ்ணன் ரத யாத்திரை மூலம் கட்சியை வளர்த்தார். இப்போது தமிழ்நாடு மாநில தலைவர் பதவியை என்னை நம்பி கொடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் நம் கூட்டணி இறுதியான உறுதியான கூட்டணி என்பதை மறந்து விடக் கூடாது. அகில இந்திய தலைமை முடிவை மீறி கூட்டணி பற்றி விமர்சனம் செய்தால் வேறு மாதிரி போய்விடும்.

இரட்டை இலையுடன் தாமரை மலர்ந்தே தீரும். திமுக தலைமையில் அமைந்திருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி. நமது கூட்டணி நியாயமான, நேர்மையான, ஊழலற்ற கூட்டணியாகும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலர்வதற்கு தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும். பல தியாகங்களால் தான் பாஜக வளர்ந்துள்ளது. அந்த தியாகத்திற்கு பெருமை சேர்க்க அனைத்து நிர்வாகிகளும் ஒன்று பட்டு செயல்பட்டு, சட்டப் பேரவைத் தேர்தலுக்காக இப்போது இருந்தே பூத் அளவில் பணியைத் தொடங்க வேண்டும். பூத் அளவிலான கட்டமைப்பை மேம்படுத்தினால் சட்டப் பேரவைத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற முடியும்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் மீதான பாஜகவின் நோக்கம் இது தான்.... உடைத்துப் பேசிய திருமாவளவன்!

கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? எந்தெந்த தொகுதிகள்? என்பதை மத்திய அமைச்சர் அமித்ஷா, அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் ஆகியோர் தான் முடிவு செய்வார்கள். என்னைப் பொறுத்த வரை பாஜக தொண்டர்களை நிர்வகிப்பது மட்டும் தான். தமிழ்நாட்டில் மேலும் பாஜகவை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதும் என்னுடைய பணியாகும். கூட்டணி, தேர்தல் போன்ற விஷயங்களில் தேசிய தலைமை எடுக்கும் முடிவை ஏற்பது தான் கட்சி நிர்வாகிகளின் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

தமிழ்நாடு அரசுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும், அதிக நிதி கிடைக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. மற்ற மாநிலங்களை விடவும் தமிழ்நாட்டுக்கு அதிக நிதி வேண்டும் என்பது தான் எங்களுடைய கருத்தாகவும் இருக்கிறது. தமிழ்நாடு அரசு, மத்திய அரசோடு கலந்து பேசி நல்லுறவைப் பேணினால் மட்டுமே தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடைபெறும்.

ஆனால், பொதுமக்களின் எதிர்ப்பை திசை திருப்ப வேண்டும் என்பதற்காகவே திமுக அரசின் சார்பில் தீர்மானங்கள் போடப்படுகின்றன. நீட் தேர்வை யாராலும் ரத்து செய்ய முடியாது. ஆனால் அதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தீர்மானம் போடுகிறார்கள். கச்சத்தீவு மீண்டும் நமக்கு கிடைக்காது. இந்த விஷயத்தில் பிரதமர் நினைத்தால் மட்டுமே நமக்கு கச்சத்தீவு கிடைக்கும். எனவே, மத்திய அரசுடன் இணங்கிப் போக வேண்டும். வெறும் தீர்மானங்களை மட்டுமே போட்டால் கச்சத்தீவு கிடைத்து விடுமா?.

திமுக 18 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தது. அப்போதெல்லாம் பேசாமல் இருந்து விட்டு, இப்போது மாநில சுயாட்சி பற்றி திமுக பேசி வருகிறது. இதற்கெல்லாம் பதிலளிக்காமல் மக்களின் மனதை மடைமாற்றவே இதுபோன்ற தீர்மானங்கள் போடப்படுகின்றன. ஆனால் திமுக அரசு எதிர்பார்ப்பது போல மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு விட்டது. 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் மூலம் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. சிறு கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்,"என்றார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.