சென்னை: தமிழ்நாட்டில் பெரும்பாலான பள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்து கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் விடுமுறை நாட்களை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் ஏற்கனவே நடந்து முடித்து விட்டது. இந்த நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான இறுதி தேர்வு இன்றுடன் (ஏப்ரல் 17) நிறைவடைந்தது. 6ம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை நடக்கும் இறுதி தேர்வுகள் ஏப்ரல் 24 ஆம் தேதியோடு முடியும்.
இந்த நிலையில் பெரும்பாலான மாணவர்களுக்கு இறுதி தேர்வு நடந்து முடிந்து கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் மாணவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என்றும் மகிழ்ச்சியான மனதோடு அடுத்த வகுப்பிற்கு வாருங்கள் எனவும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: பள்ளிகளில் நடைபெறும் கொடுமைகள் குறித்த நீதிபதி சந்துரு அறிக்கையை அமல்படுத்துக - காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் கோரிக்கை!
இது குறித்து பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தமது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது;
'' பள்ளி மாணவர்களுக்கான இறுதித் தேர்வு இன்றுடன் நிறைவுற்று கோடை விடுமுறை தொடங்குகிறது. கோடை விடுமுறையை மாணவச் செல்வங்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும். தங்களின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
பள்ளி மாணவர்களுக்கான இறுதித் தேர்வு இன்றுடன் நிறைவுற்று கோடை விடுமுறை தொடங்குகிறது.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) April 17, 2025
கோடை விடுமுறையை மாணவச் செல்வங்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும். தங்களின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
💧 தண்ணீர் அதிகம் பருகுங்கள்.
📖 சிறுவர்களுக்கான புத்தகம் வாசியுங்கள்.…
- தண்ணீர் அதிகம் பருகுங்கள்.
- சிறுவர்களுக்கான புத்தகம் வாசியுங்கள்.
- பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுங்கள்.
- அருங்காட்சியகம், பூங்கா செல்லுங்கள்.
- திறமைகளுக்கு ஏற்ற பயிற்சி வகுப்புகளுக்கு செல்லுங்கள்.
- பெற்றோர்கள் அனுமதி இல்லாமல் ஆபத்தான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டுகிறேன். மகிழ்ச்சியான மனதோடு அடுத்த வகுப்பிற்கு வாருங்கள். உங்களை வரவேற்க காத்திருக்கிறோம்''.
என இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்