ETV Bharat / state

கும்பகோணம் புதிய மாவட்ட அறிவிப்பை 30-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்! அமைச்சர் கோவி செழியனுக்கு போராட்டக் குழு நெருக்கடி! - KUMBAKONAM DISTRICT ISSUE PROTEST

கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்ட அறிவிப்பை வரும் 30 ஆம் தேதிக்குள் வெளியிடாவிட்டால், அமைச்சர் கோவி. செழியன் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்குழு நெருக்கடி கொடுத்துள்ளது.

கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க கோரிக்கை
கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க கோரிக்கை (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 19, 2025 at 7:46 PM IST

1 Min Read

கும்பகோணம்: திமுக ஆட்சி அமைந்த 100 நாட்களில் கும்பகோணத்தை தலைமை இடமாக கொண்ட புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்ற 2021 தேர்தல் பரப்புரையின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என கும்பகோணம் புதிய மாவட்ட கோரிக்கை போராட்டக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

திமுக அளித்த வாக்குறுதி 1500 நாட்கள் கடந்த பிறகும் நிறைவேற்றப்படாத நிலையில் தமிழ்நாடு அரசை கண்டித்து இன்று ஒரே நாளில் கும்பகோணம் எம்எல்ஏ அலுவலகம், மாநிலங்களவை உறுப்பினர் (எம்.பி) அலுவலகம் மற்றும் திருவிடைமருதூரில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் அலுவலகம், திருவிடைமருதூர் எம்எல்ஏ அலுவலகம் ஆகிய இடங்களில் கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் போராட்டக்குழுவினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறை அனுமதியின்றி போராட்டம் நடைபெற்றதால் 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். கும்பகோணம் உழவர் சந்தை பகுதியில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ம.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அமமுக, தமாகா, தேமுதிக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் ஒன்று திரண்டு, கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: "நாட்டின் மிகப் பெரிய படை நாம் தான்" - வீடியோ வெளியிட்டு பேசிய விஜய்!

இதனைத் தொடர்ந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மூன்று வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற முற்றுகை போராட்டங்கள் காரணமாக கும்பகோணத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நேரிட்டது. போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ம.க. ஸ்டாலின், "பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ள கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும் என்று கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக வாக்குறுதி அளித்தது.

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் இதுவரை கும்பகோணம் மாவட்டம் அமைப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இப்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும். வரும் 30ஆம் தேதிக்குள் புதிய மாவட்ட அறிவிப்பு வெளியிடப்படாவிட்டால் அமைச்சர் கோவி.செழியன், எம்எல்ஏ ஆகியோர் ராஜிநாமா செய்ய வேண்டும். அதன் பின்னர் எங்களோடு இணைந்து அவர்கள் போராட்டம் நடத்த முன்வர வேண்டும்,"என்றார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

கும்பகோணம்: திமுக ஆட்சி அமைந்த 100 நாட்களில் கும்பகோணத்தை தலைமை இடமாக கொண்ட புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்ற 2021 தேர்தல் பரப்புரையின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என கும்பகோணம் புதிய மாவட்ட கோரிக்கை போராட்டக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

திமுக அளித்த வாக்குறுதி 1500 நாட்கள் கடந்த பிறகும் நிறைவேற்றப்படாத நிலையில் தமிழ்நாடு அரசை கண்டித்து இன்று ஒரே நாளில் கும்பகோணம் எம்எல்ஏ அலுவலகம், மாநிலங்களவை உறுப்பினர் (எம்.பி) அலுவலகம் மற்றும் திருவிடைமருதூரில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் அலுவலகம், திருவிடைமருதூர் எம்எல்ஏ அலுவலகம் ஆகிய இடங்களில் கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் போராட்டக்குழுவினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறை அனுமதியின்றி போராட்டம் நடைபெற்றதால் 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். கும்பகோணம் உழவர் சந்தை பகுதியில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ம.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அமமுக, தமாகா, தேமுதிக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் ஒன்று திரண்டு, கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: "நாட்டின் மிகப் பெரிய படை நாம் தான்" - வீடியோ வெளியிட்டு பேசிய விஜய்!

இதனைத் தொடர்ந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மூன்று வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற முற்றுகை போராட்டங்கள் காரணமாக கும்பகோணத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நேரிட்டது. போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ம.க. ஸ்டாலின், "பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ள கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும் என்று கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக வாக்குறுதி அளித்தது.

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் இதுவரை கும்பகோணம் மாவட்டம் அமைப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இப்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும். வரும் 30ஆம் தேதிக்குள் புதிய மாவட்ட அறிவிப்பு வெளியிடப்படாவிட்டால் அமைச்சர் கோவி.செழியன், எம்எல்ஏ ஆகியோர் ராஜிநாமா செய்ய வேண்டும். அதன் பின்னர் எங்களோடு இணைந்து அவர்கள் போராட்டம் நடத்த முன்வர வேண்டும்,"என்றார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.