ETV Bharat / state

இன்னைக்கு ஜில்லாக போகும் 7 மாவட்டங்கள்.. மழை வெளுக்க போகுது! - TAMILNADU RAIN TODAY

இந்தியாவின் பல மாநிலங்களில் இன்று அதிக அளவில் வெப்பநிலை வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில், தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை அப்டேட்டையும் வானிலை மையம் கொடுத்துள்ளது.

மழையில் செல்லும் மக்கள் (கோப்புப்படம்)
மழையில் செல்லும் மக்கள் (கோப்புப்படம்) (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 25, 2025 at 9:45 AM IST

1 Min Read

சென்னை: கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், இன்று தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இதுவரை இல்லாத அளவுக்கு உள்ளது. பல மாவட்டங்களில் காலை 9 மணிக்கு கூட வெளியே வர முடியாத வகையில் வெயில் கொளுத்தி வருகிறது. பிப்ரவரியில் இருந்தே கோடை வெயிலின் உக்கிரம் தொடங்கிய நிலையில், தற்போது ஏப்ரல் இறுதி நெருங்கிவிட்டதால் வெயிலின் கொடுமை உச்சக்கட்டத்தை நோக்கி நகர்கிறது. முதியவர்கள், பெண்கள் மட்டுமல்லாமல் இளைஞர்கள் கூட மதிய வேளைகளில் மயக்கமடைவதை பார்க்க முடிகிறது.

இருந்தபோதிலும், சில தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்து பூமியை குளிர்வித்து வருகிறது. நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்தது.

இதையும் படிங்க: எங்களுக்கே ஜெயில் தண்டனை கொடுக்குறியா? நீதிபதிக்கே கொலை மிரட்டல் விடுத்த 'கஞ்சா பிரதர்ஸ்'

இந்நிலையில், தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காலை 10 மணி வரை தேனி, திண்டுக்கல், கடலூர், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசனாது முதல் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல, வளிமண்டல கீழடுக்கு பகுதியில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதி காற்று சந்திக்கும் சூழல் நிலவுவதால் தமிழகத்திலும், புதுவையில் இன்று சில இடங்களில் லேசனாது முதல் மிதமான மழை பெய்யலாம் என்றும், ஒருசில இடங்களில் இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியாகவும் இருக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் குறைந்தபட்ச வெப்பநிலையில் நிலவலாம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல, நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்று அதிக அளவில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

சென்னை: கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், இன்று தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இதுவரை இல்லாத அளவுக்கு உள்ளது. பல மாவட்டங்களில் காலை 9 மணிக்கு கூட வெளியே வர முடியாத வகையில் வெயில் கொளுத்தி வருகிறது. பிப்ரவரியில் இருந்தே கோடை வெயிலின் உக்கிரம் தொடங்கிய நிலையில், தற்போது ஏப்ரல் இறுதி நெருங்கிவிட்டதால் வெயிலின் கொடுமை உச்சக்கட்டத்தை நோக்கி நகர்கிறது. முதியவர்கள், பெண்கள் மட்டுமல்லாமல் இளைஞர்கள் கூட மதிய வேளைகளில் மயக்கமடைவதை பார்க்க முடிகிறது.

இருந்தபோதிலும், சில தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்து பூமியை குளிர்வித்து வருகிறது. நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்தது.

இதையும் படிங்க: எங்களுக்கே ஜெயில் தண்டனை கொடுக்குறியா? நீதிபதிக்கே கொலை மிரட்டல் விடுத்த 'கஞ்சா பிரதர்ஸ்'

இந்நிலையில், தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காலை 10 மணி வரை தேனி, திண்டுக்கல், கடலூர், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசனாது முதல் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல, வளிமண்டல கீழடுக்கு பகுதியில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதி காற்று சந்திக்கும் சூழல் நிலவுவதால் தமிழகத்திலும், புதுவையில் இன்று சில இடங்களில் லேசனாது முதல் மிதமான மழை பெய்யலாம் என்றும், ஒருசில இடங்களில் இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியாகவும் இருக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் குறைந்தபட்ச வெப்பநிலையில் நிலவலாம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல, நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்று அதிக அளவில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.