ETV Bharat / state

நானோ ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்! ஆளுநர் ஆர்.என்.ரவி! - GOVERNOR RN RAVI

நானோ ரோபாட்டிக்ஸ் (Nanorobotics) தொழில் நுட்பத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டி தருனமாக இது உள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 26, 2025 at 8:30 PM IST

1 Min Read

நீலகிரி: கடந்த மூன்று ஆண்டுகளில் தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. திறன் வாய்ந்த, தரமானவர்களை கல்வித் துறையில் உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகை ராஜ் பவனில் துணைவேந்தர்கள் இரண்டு நாள் மாநாடு நேற்று (ஏப்ரல் 25) தொடங்கியது. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் அரசு பல்கலைக்கழங்களின் துணைவேந்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதனையடுத்து, துணைவேந்தர்களை காவல்துறை மூலம் தமிழ்நாடு அரசு மிரட்டியதாக ஆளுநர் ரவி குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

இந்த நிலையில், இரண்டாவது நாள் மாநாடு இன்று (ஏப்ரல் 26) நடைபெற்றது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசுகையில், “கடந்த ஆண்டு இந்த அரங்கம் முழுவதும் நிறைந்திருந்தது. இந்த ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தெரிந்த முகங்களாக, நல்ல சிந்தனைகளை கொண்டவர்களாக உள்ளனர்.

இதையும் படிங்க; வலுக்கட்டாயமாக கடனை வசூலித்தால் சிறை! சட்டப் பேரவையில் மசோதா தாக்கல்!

உலக அரங்கில் திறன் வாய்ந்த பட்டதாரிகளை உருவாக்கும் சாவால்களை நாம் எதிர்கொண்டுள்ளோம். வளர்ச்சி சார்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும், இன்னும் போதாததாக உள்ளது. அறிவியல் தொழில்நுட்பத்தில் தரம் வாய்த்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் நாம் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) பற்றி பேசவில்லை. இன்று ஒரு புதிய தொழில் நுட்பத்தை பற்றி விவாதித்துள்ளோம்.

3 ஆண்டுகளில் தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. திறன் வாய்ந்த, தரமானவர்களை கல்வித்துறையில் உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. கருத்தரங்கம் பயனுள்ளதாக இருந்தது என நீங்கள் தெரிவித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நானோ ரோபாட்டிக்ஸ் (Nanorobotics) தொழில் நுட்பத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டி தருணமாக இது உள்ளது.

கருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட புதிய கருத்துக்கள், பயனுள்ள தகவல்களை சரியான முறையில் பயன்படுத்துங்கள். 2047 ஆம் ஆண்டை கருத்தில் கொண்டு நாடு வேகமாக வளர்ந்து செல்ல வேண்டியுள்ளது. அதனை நோக்கி பயணியுங்கள்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

நீலகிரி: கடந்த மூன்று ஆண்டுகளில் தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. திறன் வாய்ந்த, தரமானவர்களை கல்வித் துறையில் உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகை ராஜ் பவனில் துணைவேந்தர்கள் இரண்டு நாள் மாநாடு நேற்று (ஏப்ரல் 25) தொடங்கியது. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் அரசு பல்கலைக்கழங்களின் துணைவேந்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதனையடுத்து, துணைவேந்தர்களை காவல்துறை மூலம் தமிழ்நாடு அரசு மிரட்டியதாக ஆளுநர் ரவி குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

இந்த நிலையில், இரண்டாவது நாள் மாநாடு இன்று (ஏப்ரல் 26) நடைபெற்றது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசுகையில், “கடந்த ஆண்டு இந்த அரங்கம் முழுவதும் நிறைந்திருந்தது. இந்த ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தெரிந்த முகங்களாக, நல்ல சிந்தனைகளை கொண்டவர்களாக உள்ளனர்.

இதையும் படிங்க; வலுக்கட்டாயமாக கடனை வசூலித்தால் சிறை! சட்டப் பேரவையில் மசோதா தாக்கல்!

உலக அரங்கில் திறன் வாய்ந்த பட்டதாரிகளை உருவாக்கும் சாவால்களை நாம் எதிர்கொண்டுள்ளோம். வளர்ச்சி சார்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும், இன்னும் போதாததாக உள்ளது. அறிவியல் தொழில்நுட்பத்தில் தரம் வாய்த்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் நாம் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) பற்றி பேசவில்லை. இன்று ஒரு புதிய தொழில் நுட்பத்தை பற்றி விவாதித்துள்ளோம்.

3 ஆண்டுகளில் தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. திறன் வாய்ந்த, தரமானவர்களை கல்வித்துறையில் உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. கருத்தரங்கம் பயனுள்ளதாக இருந்தது என நீங்கள் தெரிவித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நானோ ரோபாட்டிக்ஸ் (Nanorobotics) தொழில் நுட்பத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டி தருணமாக இது உள்ளது.

கருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட புதிய கருத்துக்கள், பயனுள்ள தகவல்களை சரியான முறையில் பயன்படுத்துங்கள். 2047 ஆம் ஆண்டை கருத்தில் கொண்டு நாடு வேகமாக வளர்ந்து செல்ல வேண்டியுள்ளது. அதனை நோக்கி பயணியுங்கள்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.