ETV Bharat / state

அமைச்சர் பதவியா, ஜாமீனா? - இரண்டில் ஒன்றுதான் உங்களுக்கான வாய்ப்பு: செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்! - SC TELLS TN MINISTER SENTHIL BALAJI

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி விலகாவிட்டால், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் கெடுவிதித்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி (ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 23, 2025 at 9:24 PM IST

3 Min Read

புதுடெல்லி: பணத்துக்கு வேலை என்ற முறைகேட்டில் தொடர்புடைய அமலாக்கத்துறையின் பண மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தகுதி அடிப்படையில் ஜாமீன் வழங்கப்படவில்லை என்றும், பிரிவு 21 மீதான விதிமுறை மீறலின் சாத்தியம் அடிப்படையிலேயே ஜாமீன் வழங்கப்பட்டது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் அமைச்சர் பதவியில் இருந்து விலகாவிட்டால் செந்தில்பாலாஜி ஜாமீன் ரத்து செய்யப்படும். அமைச்சர் பதவியா?ஜாமீனா? எது முக்கியம் என்பதை அமைச்சர் செந்தில் பாலாஜியே முடிவு செய்யட்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தகுதி அடிப்படையிலான ஜாமீன் அல்ல: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணத்துக்கு வேலை முறைகேட்டில் தொடர்புடைய பணமோசடி வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சாட்சிகள் மீது அவர் ஆதிக்கம் செலுத்தக் கூடும் என்பதால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, ஏஜி மாசிஹ் ஆகியோர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது செந்தில் பாலாஜியின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி, கபில் சிபல் ஆஜராகினர். அமலாக்கத்துறையின் சார்பில் அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜரானார்.

வழக்கு விசாரணையின் போது கருத்துத் தெரிவித்த நீதிபதி ஓகா, "நீங்கள் (செந்தில் பாலாஜி) தகுதியின் அடிப்படையில் ஜாமீன் பெறவில்லை. மிகவும் சிக்கலான குற்றத்தில் உங்கள் பங்கு இருப்பதாக இந்த வழக்கின் ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அமைச்சராக பதவி வகிக்கப்போகிறீர்கள். குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் உள்ளனர். சாட்சிகள் உள்ளனர். நாங்கள் என்ன மாதிரியான உத்தரவை போடுவது?. செந்தில் பாலாஜிக்கு வழக்கின் தகுதி அடிப்படையில் ஜாமீன் வழங்கப்படவில்லை. பிரிவு 21ன் கீழ் சாத்தியமுள்ள விதிமுறை மீறல் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டது. ஒருவேளை நாங்கள் ஜாமீன் வழங்கி இருக்காவிட்டால், தகுதி அடிப்படையில் உங்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.

இதையும் படிங்க: அமைச்சர் பொன்முடி இழிவு பேச்சை ஏற்றுக்கொள்ள முடியாது! நீதிமன்றத்தின் புதிய உத்தரவு என்ன?

செந்தில் பாலாஜி, சூழ்நிலைகள் மாறி இருக்கிறது என்று சொல்கிறார். நீண்டகாலமாக அமைச்சராக பதவி வகிக்கவில்லை. எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்கிறார். அப்போது அவர் உயர் நீதிமன்றத்தில் , சாட்சிகளை ஆதிக்கம் செலுத்தும் வகையிலான எந்த ஒரு பதவியிலும் இல்லை என்று கூறியிருக்கிறார். ஆனால், உச்ச நீதிமன்றத்தில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதும். அமைச்சராகப் பதவி ஏற்கிறார்,"என்றார்.

ஆதிக்கம் செலுத்தவில்லை: அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, "இது ஒரு சூழல் என்று உச்ச நீதிமன்றத்தின் முன்பு நான் வாதிடவில்லை. நான் ஒரு அமைச்சராக இல்லை. எனக்கு ஜாமீன் தாருங்கள் என்று ஒரு போதும் மனுவில் சொல்லவில்லை,"என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,"நீங்கள் வாதிடாமல் இருந்திருக்கலாம். மனுவின் அடிப்படையில் அந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற செயல்களை நாங்கள் பொறுத்துக் கொள்ள முடியாது,"என்று கூறினர்.

அப்போது குறுக்கிட்ட முகுல் ரோஹத்கி, "என்னுடைய கட்சிக்காரர்(செந்தில் பாலாஜி) சாட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்தவில்லை என்பதற்கான ஆதாரத்தை தர தயாராக இருக்கின்றேன்,"என்றார்.

இரண்டில் ஒன்று: அப்போது மூத்த வழக்கறிஞர் கபில் சிபலை பார்த்து பேசிய நீதிபதி ஓகா, "அதில் பெரிய விஷயங்கள் இருக்கின்றன. அவர் அமைச்சராக இருந்தபோது இந்த குற்றச்சாட்டுகள் எழுந்தன. நாங்கள் அவருக்கு ஜாமீன் வழங்கினோம். ஜாமீன் பெற்ற இரண்டு நாட்களுக்குள் அவர் அமைச்சர் ஆகிறார். இதனை நாங்கள் பொறுத்துக் கொள்ள முடியாது. உங்களிடம் இருப்பது ஒரே ஒரு விருப்பம்தான். ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுங்கள். மற்றபடி (செந்தில்பாலாஜி) இந்த செயல்பாட்டை அவர் ஏளனம் செய்கிறார்,"என்றார்.

அப்போது குறுக்கிட்ட வழக்கறிஞர் கபில் சிபல், "சிக்கலான இந்த வழக்கில் இந்த ஆண்டு டிசம்பரில் கூட சம்மன் அனுப்பலாம். யார் ஒருவர் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு ஏதும் இல்லை," என்றார்.

அப்போது நீதிபதி ஓகா, "நீங்கள் இந்த வசதியை தவறாகப் பயன்படுத்தி விட்டீர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் ஜாமீனை ரத்து செய்யவில்லை. உங்களுடைய ஆவணத்தின் அடிப்படையில், நீங்கள் தலையிடுவீர்கள் என்ற அச்சம் இருக்கிறது. சூழ்நிலை மாறியிருக்கிறது என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். நீங்கள் மிகவும் தைரியம் வாய்ந்தவர்களாக இருக்கலாம். நீங்கள் (உச்ச நீதிமன்றம்) ஜாமீன் வழங்கினால், நான் (அமைச்சர் செந்தில் பாலாஜி) மீண்டும் முந்தைய நிலைக்கு(அமைச்சர் பதவிக்கு) செல்லலாம். ஆனால், இது ஒரு நேர்மையற்ற செயல்,"என்றார்.

சாட்சிகளை தடுத்து விட்டீர்கள்:மேலும் பேசிய நீதிபதி ஓகா, உங்களுக்கு எதிரான தீர்ப்பு வழங்குவதை புறந்தள்ளிவிட்டோம். நாங்கள் ஒரு தவறு செய்து விட்டோம். இந்த உத்தரவில் அதனை நாங்கள் பதிவு செய்கின்றோம். அவர் அமைச்சராக நீண்டநாட்கள் நீடித்து நிலைத்திருக்க முடியாது என்பது குறித்து ஒட்டு மொத்த விசாரணையும் முன்னெடுக்கப்படுகிறது. நாங்கள் எங்களுடைய தவறை ஏற்றுக் கொள்கின்றோம்,"என்றார்.

அப்போது வாதிட்ட கபில் சிபல், "என்னுடைய கட்சிக்காரர் சாட்சிகள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவற்கு எந்த வித வாய்ப்பும் இல்லை. எந்த ஒரு சாட்சியும் இங்கு வந்து சாட்சி சொல்லவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி நாங்கள் தாக்கத்தை ஏற்படுத்துவோம்?"என்றார்.

கபில் சிபல் வாதத்தோடு முரண்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், "சாட்சிகள் இங்கு வருவதை நீங்கள் தடுக்கின்றீர்கள்,"என்றனர்.

விரிவான விசாரணைக்குப் பின்னர், இந்த விஷயத்தில் செந்தில் பாலாஜியிடம் உத்தரவுகளைப் பெற்று பதில் அளிப்பதற்கு அவகாசம் அளிக்கும்படி கபில் சிபல் கோரினார். அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை திங்கள் கிழமைக்கு தள்ளி வைத்தது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

புதுடெல்லி: பணத்துக்கு வேலை என்ற முறைகேட்டில் தொடர்புடைய அமலாக்கத்துறையின் பண மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தகுதி அடிப்படையில் ஜாமீன் வழங்கப்படவில்லை என்றும், பிரிவு 21 மீதான விதிமுறை மீறலின் சாத்தியம் அடிப்படையிலேயே ஜாமீன் வழங்கப்பட்டது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் அமைச்சர் பதவியில் இருந்து விலகாவிட்டால் செந்தில்பாலாஜி ஜாமீன் ரத்து செய்யப்படும். அமைச்சர் பதவியா?ஜாமீனா? எது முக்கியம் என்பதை அமைச்சர் செந்தில் பாலாஜியே முடிவு செய்யட்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தகுதி அடிப்படையிலான ஜாமீன் அல்ல: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணத்துக்கு வேலை முறைகேட்டில் தொடர்புடைய பணமோசடி வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சாட்சிகள் மீது அவர் ஆதிக்கம் செலுத்தக் கூடும் என்பதால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, ஏஜி மாசிஹ் ஆகியோர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது செந்தில் பாலாஜியின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி, கபில் சிபல் ஆஜராகினர். அமலாக்கத்துறையின் சார்பில் அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜரானார்.

வழக்கு விசாரணையின் போது கருத்துத் தெரிவித்த நீதிபதி ஓகா, "நீங்கள் (செந்தில் பாலாஜி) தகுதியின் அடிப்படையில் ஜாமீன் பெறவில்லை. மிகவும் சிக்கலான குற்றத்தில் உங்கள் பங்கு இருப்பதாக இந்த வழக்கின் ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அமைச்சராக பதவி வகிக்கப்போகிறீர்கள். குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் உள்ளனர். சாட்சிகள் உள்ளனர். நாங்கள் என்ன மாதிரியான உத்தரவை போடுவது?. செந்தில் பாலாஜிக்கு வழக்கின் தகுதி அடிப்படையில் ஜாமீன் வழங்கப்படவில்லை. பிரிவு 21ன் கீழ் சாத்தியமுள்ள விதிமுறை மீறல் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டது. ஒருவேளை நாங்கள் ஜாமீன் வழங்கி இருக்காவிட்டால், தகுதி அடிப்படையில் உங்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.

இதையும் படிங்க: அமைச்சர் பொன்முடி இழிவு பேச்சை ஏற்றுக்கொள்ள முடியாது! நீதிமன்றத்தின் புதிய உத்தரவு என்ன?

செந்தில் பாலாஜி, சூழ்நிலைகள் மாறி இருக்கிறது என்று சொல்கிறார். நீண்டகாலமாக அமைச்சராக பதவி வகிக்கவில்லை. எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்கிறார். அப்போது அவர் உயர் நீதிமன்றத்தில் , சாட்சிகளை ஆதிக்கம் செலுத்தும் வகையிலான எந்த ஒரு பதவியிலும் இல்லை என்று கூறியிருக்கிறார். ஆனால், உச்ச நீதிமன்றத்தில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதும். அமைச்சராகப் பதவி ஏற்கிறார்,"என்றார்.

ஆதிக்கம் செலுத்தவில்லை: அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, "இது ஒரு சூழல் என்று உச்ச நீதிமன்றத்தின் முன்பு நான் வாதிடவில்லை. நான் ஒரு அமைச்சராக இல்லை. எனக்கு ஜாமீன் தாருங்கள் என்று ஒரு போதும் மனுவில் சொல்லவில்லை,"என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,"நீங்கள் வாதிடாமல் இருந்திருக்கலாம். மனுவின் அடிப்படையில் அந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற செயல்களை நாங்கள் பொறுத்துக் கொள்ள முடியாது,"என்று கூறினர்.

அப்போது குறுக்கிட்ட முகுல் ரோஹத்கி, "என்னுடைய கட்சிக்காரர்(செந்தில் பாலாஜி) சாட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்தவில்லை என்பதற்கான ஆதாரத்தை தர தயாராக இருக்கின்றேன்,"என்றார்.

இரண்டில் ஒன்று: அப்போது மூத்த வழக்கறிஞர் கபில் சிபலை பார்த்து பேசிய நீதிபதி ஓகா, "அதில் பெரிய விஷயங்கள் இருக்கின்றன. அவர் அமைச்சராக இருந்தபோது இந்த குற்றச்சாட்டுகள் எழுந்தன. நாங்கள் அவருக்கு ஜாமீன் வழங்கினோம். ஜாமீன் பெற்ற இரண்டு நாட்களுக்குள் அவர் அமைச்சர் ஆகிறார். இதனை நாங்கள் பொறுத்துக் கொள்ள முடியாது. உங்களிடம் இருப்பது ஒரே ஒரு விருப்பம்தான். ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுங்கள். மற்றபடி (செந்தில்பாலாஜி) இந்த செயல்பாட்டை அவர் ஏளனம் செய்கிறார்,"என்றார்.

அப்போது குறுக்கிட்ட வழக்கறிஞர் கபில் சிபல், "சிக்கலான இந்த வழக்கில் இந்த ஆண்டு டிசம்பரில் கூட சம்மன் அனுப்பலாம். யார் ஒருவர் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு ஏதும் இல்லை," என்றார்.

அப்போது நீதிபதி ஓகா, "நீங்கள் இந்த வசதியை தவறாகப் பயன்படுத்தி விட்டீர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் ஜாமீனை ரத்து செய்யவில்லை. உங்களுடைய ஆவணத்தின் அடிப்படையில், நீங்கள் தலையிடுவீர்கள் என்ற அச்சம் இருக்கிறது. சூழ்நிலை மாறியிருக்கிறது என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். நீங்கள் மிகவும் தைரியம் வாய்ந்தவர்களாக இருக்கலாம். நீங்கள் (உச்ச நீதிமன்றம்) ஜாமீன் வழங்கினால், நான் (அமைச்சர் செந்தில் பாலாஜி) மீண்டும் முந்தைய நிலைக்கு(அமைச்சர் பதவிக்கு) செல்லலாம். ஆனால், இது ஒரு நேர்மையற்ற செயல்,"என்றார்.

சாட்சிகளை தடுத்து விட்டீர்கள்:மேலும் பேசிய நீதிபதி ஓகா, உங்களுக்கு எதிரான தீர்ப்பு வழங்குவதை புறந்தள்ளிவிட்டோம். நாங்கள் ஒரு தவறு செய்து விட்டோம். இந்த உத்தரவில் அதனை நாங்கள் பதிவு செய்கின்றோம். அவர் அமைச்சராக நீண்டநாட்கள் நீடித்து நிலைத்திருக்க முடியாது என்பது குறித்து ஒட்டு மொத்த விசாரணையும் முன்னெடுக்கப்படுகிறது. நாங்கள் எங்களுடைய தவறை ஏற்றுக் கொள்கின்றோம்,"என்றார்.

அப்போது வாதிட்ட கபில் சிபல், "என்னுடைய கட்சிக்காரர் சாட்சிகள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவற்கு எந்த வித வாய்ப்பும் இல்லை. எந்த ஒரு சாட்சியும் இங்கு வந்து சாட்சி சொல்லவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி நாங்கள் தாக்கத்தை ஏற்படுத்துவோம்?"என்றார்.

கபில் சிபல் வாதத்தோடு முரண்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், "சாட்சிகள் இங்கு வருவதை நீங்கள் தடுக்கின்றீர்கள்,"என்றனர்.

விரிவான விசாரணைக்குப் பின்னர், இந்த விஷயத்தில் செந்தில் பாலாஜியிடம் உத்தரவுகளைப் பெற்று பதில் அளிப்பதற்கு அவகாசம் அளிக்கும்படி கபில் சிபல் கோரினார். அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை திங்கள் கிழமைக்கு தள்ளி வைத்தது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.