ETV Bharat / state

இந்தியாவில் ஊழல் கொடி பறக்க யார் காரணம்? ஜெயக்குமார் பேச்சால் பரபரப்பு! - D JAYAKUMAR

ஊழலை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியதே கருணாநிதி தான் என்றும், இந்தியா முழுவதும் ஊழல் கொடி பறப்பதற்கு திமுக தான் காரணம் என்றும், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டி.ஜெயக்குமார்
டி.ஜெயக்குமார் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 19, 2025 at 5:57 PM IST

3 Min Read

சென்னை: டாக்டர் சிவந்தி ஆதித்தனார் 12 ஆவது நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

''ஊழல் நிறைந்தது தமிழ்நாடு'' - சீமான்!

இதன் பின்னர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து கூறும் போது, ''எல்லாவற்றையும் நீதிமன்றம் தான் முடிவெடுக்கும் என்றால் நாடாளுமன்றம், சட்டமன்றம் எதற்கு? என்று கேட்ட முதல் ஆள் நான் தான். தமிழர்களுக்கு தனி குணம் இருக்கின்றது‌. தமிழ்நாட்டிற்கு என்னென்ன தனிக்குணம் இருக்கிறது? இதை எப்படி முதலமைச்சர் சொல்கிறார். இந்தியை திணித்தவர்களுடன் கூட்டணி வைத்தது யார்? ஊழல் நிறைந்தது தமிழ்நாடு. நீதிபதியை பணியமர்த்துவது ஆட்சியாளர்கள். இஸ்லாமிய அறக்கட்டளை உருவாக்கியது இஸ்லாமிய மக்கள் தான். அதை அவர்கள் தான் நிர்வகிக்க வேண்டும்.

மத்திய அரசுக்கு தமிழகம் எப்போதும் அவுட் ஆப் கன்ரோல் தான் என்று முதலமைச்சர் கூறுவதாக சொல்கிறீர்கள். என்ன அவுட் ஆப் கண்ட்ரோல்? இது அவுட் ஆப் கண்ட்ரோல் இல்லை.. அன்டர் கண்ட்ரோல் தான். இது அதிகாரத்தின் ஆட்டம். அடிமைகள் நாம் தலையாட்டி கொண்டு இருக்க வேண்டும். சாட்டை துரைமுருகன் யூடியூப் சேனலில் வருவது அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள். அதை தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அறிக்கை வெளியிட்டேன்" என்று சீமான் கூறினார்.

''இன்னும் சில மாதங்களில் நாங்கள் ஆட்சிக்கு வருவோம்'' - தமிழிசை சௌந்தரராஜன்!

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து கூறும் போது, ''மோடி ஆட்சிக்கு வந்த பின் ஒலிம்பிக்கில் பல மெடல்களையும் நாம் வாங்குகிறோம். டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது தொடர்பாக கேட்கிறீர்கள். தமிழக மக்களின் அவுட் ஆஃப் கண்ட்ரோலாக அண்ணன் ஸ்டாலின் இன்னும் சில மாதங்களில் போக போகிறார். எதற்கு முதல்வருக்கு இவ்வளவு பதட்டம்? அதிமுக - பாஜக கூட்டணி அமைந்ததிலிருந்து ஸ்டாலின் மிகப் பதட்டத்துடன் காணப்படுகிறார்.

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது அடி பணிந்து தானே நீங்கள் தடுக்காமல் இருந்தீர்கள். டெல்லிக்கு அடி பணிந்து தானே மாநில சுயாட்சி குறித்து உங்கள் ஆட்சி இருந்தபோது பேசாமல் இருந்தீர்கள். நீங்கள் ஆட்சியில் இருந்தபோது டெல்லிக்கு அடி பணிந்து ஒற்றை வார்த்தை கூட பேசாமல் இருந்தீர்கள். தொகுதி மறுவரையறை தொடர்பாக அமித்ஷா பதிலளித்து விட்டார். உங்களுக்கு புரியவில்லை என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்?

இன்று முதலமைச்சர் மிகுந்த பதட்டத்துடன் இருக்கிறார். சில மாதம் பொறுத்திருங்கள் நாங்கள் ஆட்சிக்கு வருவோம். அதன் பிறகு என்னவெல்லாம் தமிழக மக்களுக்கு கொண்டு வர வேண்டுமோ அதை கொண்டு வருவோம்.

இவ்வளவு பேசும் நீங்கள் ஏன் நிதி ஆயோக் கூட்டத்திற்கு போகவில்லை? இத்தனை ஆண்டுகள் இல்லாமல் மோடி சில திட்டங்களை கொண்டு வந்த பிறகு கைவினை கலைஞர்களுக்கு திட்டங்களை கொண்டு வருகிறீர்கள். பிரதமர் மோடி தான் முதலமைச்சரை கைவினை கலைஞர் பற்றி சிந்திக்கவாவது தூண்டியிருக்கிறார். உங்களது கூட்டணிக்குள் இருக்கும் குழப்பங்களை முதலில் பாருங்கள்.

வருங்கால சந்தர்ப்பவாத கூட்டணி என்கிறார்கள். திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று சந்தர்ப்ப கூட்டணி. கொடி ஏற்ற முடியவில்லை என்று விசிக, சாம்சங் ஊழியர்களுக்கு ஆதரவாக போராடும் கம்யூனிஸ்ட் கட்சி, போஸ்டர் ஒட்ட முடியவில்லை என்று காங்கிரஸ் தொண்டர்கள் அழுகிறார்கள். உங்களுடைய கூட்டணியில் தான் குழப்பமே தவிர நாங்கள் ஏற்படுத்தி இருக்கக்கூடிய கூட்டணி பலமான கூட்டணி. இன்னும் பல பேர் சேருவார்கள். இன்னும் பலமாக 2026 தேர்தலை சந்திப்போம். கூட்டணியில் பல பேரை சேர்க்க அமித்ஷா செயல்படுவார்.

இன்று கல்லீரல் தினம். தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் ஒன்றரை கோடி பேர் மது அருந்துகிறார்கள். குடிப்பதற்காக மட்டும் ஒரு கணவன் தன் மனைவியிடம் இருந்து 6 ஆயிரம் ரூபாய் பிடுங்கிக்கொண்டு செல்கிறார்கள். குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து அவர்கள் கணவரிடமிருந்து 6 ஆயிரம் ரூபாய் பிடுங்க வைக்கிறீர்கள். தமிழ்நாட்டில் ஈரல் கெட்டு டாஸ்மாக் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

எப்போதும் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா பார்க்க சொல்கிறீர்கள். முதலில் தமிழகத்தை பாருங்கள். அதன் பிறகு மற்ற மாநிலங்களை பார்க்கலாம்.'' என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

இதையும் படிங்க: 'போதையில் பறந்து வந்த பிரபல நடிகரின் கார்' - பெண் உள்பட 3 பேர் படுகாயம்; சிக்கிய ஓட்டுநர்!

"ஊழலை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியதே கருணாநிதி" - டி.ஜெயக்குமார்!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, '' திமுகவை பொறுத்தவரை 2 ஜி ஸ்பெக்ட்ரம் முதல் தமிழன் வெட்கப்படும் வகையில் இமாலய ஊழல் நடத்தியது திமுக. மற்றவர்களை குறை சொல்வதற்கு முன்னால் தனது முதுகை பார்க்க வேண்டும். ஊழலின் ஊற்று அவர்கள்.

ஊழலை பற்றி பேச அவர்களுக்கு அருகதை இல்லை. ஊழலை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியதே கருணாநிதி தான். அவரது ஆட்சியிலும் சரி. ஸ்டாலின் ஆட்சியிலும் சரி. ஊழல் கொடி உச்ச பட்சத்தில் இருக்கும். தமிழகம் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் ஊழல் கொடி பறப்பதற்கு திமுக தான் காரணம். மற்ற கேள்விகளுக்கு நேற்று அறிக்கை படித்திருக்கிறீர்கள். அதனால் சிலவற்றை பேச முடியாது." என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

சென்னை: டாக்டர் சிவந்தி ஆதித்தனார் 12 ஆவது நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

''ஊழல் நிறைந்தது தமிழ்நாடு'' - சீமான்!

இதன் பின்னர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து கூறும் போது, ''எல்லாவற்றையும் நீதிமன்றம் தான் முடிவெடுக்கும் என்றால் நாடாளுமன்றம், சட்டமன்றம் எதற்கு? என்று கேட்ட முதல் ஆள் நான் தான். தமிழர்களுக்கு தனி குணம் இருக்கின்றது‌. தமிழ்நாட்டிற்கு என்னென்ன தனிக்குணம் இருக்கிறது? இதை எப்படி முதலமைச்சர் சொல்கிறார். இந்தியை திணித்தவர்களுடன் கூட்டணி வைத்தது யார்? ஊழல் நிறைந்தது தமிழ்நாடு. நீதிபதியை பணியமர்த்துவது ஆட்சியாளர்கள். இஸ்லாமிய அறக்கட்டளை உருவாக்கியது இஸ்லாமிய மக்கள் தான். அதை அவர்கள் தான் நிர்வகிக்க வேண்டும்.

மத்திய அரசுக்கு தமிழகம் எப்போதும் அவுட் ஆப் கன்ரோல் தான் என்று முதலமைச்சர் கூறுவதாக சொல்கிறீர்கள். என்ன அவுட் ஆப் கண்ட்ரோல்? இது அவுட் ஆப் கண்ட்ரோல் இல்லை.. அன்டர் கண்ட்ரோல் தான். இது அதிகாரத்தின் ஆட்டம். அடிமைகள் நாம் தலையாட்டி கொண்டு இருக்க வேண்டும். சாட்டை துரைமுருகன் யூடியூப் சேனலில் வருவது அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள். அதை தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அறிக்கை வெளியிட்டேன்" என்று சீமான் கூறினார்.

''இன்னும் சில மாதங்களில் நாங்கள் ஆட்சிக்கு வருவோம்'' - தமிழிசை சௌந்தரராஜன்!

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து கூறும் போது, ''மோடி ஆட்சிக்கு வந்த பின் ஒலிம்பிக்கில் பல மெடல்களையும் நாம் வாங்குகிறோம். டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது தொடர்பாக கேட்கிறீர்கள். தமிழக மக்களின் அவுட் ஆஃப் கண்ட்ரோலாக அண்ணன் ஸ்டாலின் இன்னும் சில மாதங்களில் போக போகிறார். எதற்கு முதல்வருக்கு இவ்வளவு பதட்டம்? அதிமுக - பாஜக கூட்டணி அமைந்ததிலிருந்து ஸ்டாலின் மிகப் பதட்டத்துடன் காணப்படுகிறார்.

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது அடி பணிந்து தானே நீங்கள் தடுக்காமல் இருந்தீர்கள். டெல்லிக்கு அடி பணிந்து தானே மாநில சுயாட்சி குறித்து உங்கள் ஆட்சி இருந்தபோது பேசாமல் இருந்தீர்கள். நீங்கள் ஆட்சியில் இருந்தபோது டெல்லிக்கு அடி பணிந்து ஒற்றை வார்த்தை கூட பேசாமல் இருந்தீர்கள். தொகுதி மறுவரையறை தொடர்பாக அமித்ஷா பதிலளித்து விட்டார். உங்களுக்கு புரியவில்லை என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்?

இன்று முதலமைச்சர் மிகுந்த பதட்டத்துடன் இருக்கிறார். சில மாதம் பொறுத்திருங்கள் நாங்கள் ஆட்சிக்கு வருவோம். அதன் பிறகு என்னவெல்லாம் தமிழக மக்களுக்கு கொண்டு வர வேண்டுமோ அதை கொண்டு வருவோம்.

இவ்வளவு பேசும் நீங்கள் ஏன் நிதி ஆயோக் கூட்டத்திற்கு போகவில்லை? இத்தனை ஆண்டுகள் இல்லாமல் மோடி சில திட்டங்களை கொண்டு வந்த பிறகு கைவினை கலைஞர்களுக்கு திட்டங்களை கொண்டு வருகிறீர்கள். பிரதமர் மோடி தான் முதலமைச்சரை கைவினை கலைஞர் பற்றி சிந்திக்கவாவது தூண்டியிருக்கிறார். உங்களது கூட்டணிக்குள் இருக்கும் குழப்பங்களை முதலில் பாருங்கள்.

வருங்கால சந்தர்ப்பவாத கூட்டணி என்கிறார்கள். திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று சந்தர்ப்ப கூட்டணி. கொடி ஏற்ற முடியவில்லை என்று விசிக, சாம்சங் ஊழியர்களுக்கு ஆதரவாக போராடும் கம்யூனிஸ்ட் கட்சி, போஸ்டர் ஒட்ட முடியவில்லை என்று காங்கிரஸ் தொண்டர்கள் அழுகிறார்கள். உங்களுடைய கூட்டணியில் தான் குழப்பமே தவிர நாங்கள் ஏற்படுத்தி இருக்கக்கூடிய கூட்டணி பலமான கூட்டணி. இன்னும் பல பேர் சேருவார்கள். இன்னும் பலமாக 2026 தேர்தலை சந்திப்போம். கூட்டணியில் பல பேரை சேர்க்க அமித்ஷா செயல்படுவார்.

இன்று கல்லீரல் தினம். தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் ஒன்றரை கோடி பேர் மது அருந்துகிறார்கள். குடிப்பதற்காக மட்டும் ஒரு கணவன் தன் மனைவியிடம் இருந்து 6 ஆயிரம் ரூபாய் பிடுங்கிக்கொண்டு செல்கிறார்கள். குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து அவர்கள் கணவரிடமிருந்து 6 ஆயிரம் ரூபாய் பிடுங்க வைக்கிறீர்கள். தமிழ்நாட்டில் ஈரல் கெட்டு டாஸ்மாக் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

எப்போதும் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா பார்க்க சொல்கிறீர்கள். முதலில் தமிழகத்தை பாருங்கள். அதன் பிறகு மற்ற மாநிலங்களை பார்க்கலாம்.'' என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

இதையும் படிங்க: 'போதையில் பறந்து வந்த பிரபல நடிகரின் கார்' - பெண் உள்பட 3 பேர் படுகாயம்; சிக்கிய ஓட்டுநர்!

"ஊழலை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியதே கருணாநிதி" - டி.ஜெயக்குமார்!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, '' திமுகவை பொறுத்தவரை 2 ஜி ஸ்பெக்ட்ரம் முதல் தமிழன் வெட்கப்படும் வகையில் இமாலய ஊழல் நடத்தியது திமுக. மற்றவர்களை குறை சொல்வதற்கு முன்னால் தனது முதுகை பார்க்க வேண்டும். ஊழலின் ஊற்று அவர்கள்.

ஊழலை பற்றி பேச அவர்களுக்கு அருகதை இல்லை. ஊழலை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியதே கருணாநிதி தான். அவரது ஆட்சியிலும் சரி. ஸ்டாலின் ஆட்சியிலும் சரி. ஊழல் கொடி உச்ச பட்சத்தில் இருக்கும். தமிழகம் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் ஊழல் கொடி பறப்பதற்கு திமுக தான் காரணம். மற்ற கேள்விகளுக்கு நேற்று அறிக்கை படித்திருக்கிறீர்கள். அதனால் சிலவற்றை பேச முடியாது." என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.