ETV Bharat / state

வக்ஃப் திருத்த சட்டத்தில் திமுக சுட்டிக்காட்டியது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது மகிழ்ச்சி - முதலமைச்சர் பெருமிதம்! - CM IS PROUD

வக்ஃப் திருத்த சட்டத்தில் திமுக சுட்டிக்காட்டிய பல்வேறு பிற்போக்கான பிரிவுகள் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது மகிழ்ச்சியளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 17, 2025 at 9:32 PM IST

2 Min Read

சென்னை: வக்ஃப் (திருத்த) சட்டம் 2025க்கு எதிராக தொடுக்கப்பட்ட திமுக உள்ளிட்ட ஐந்து மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த வழக்கில் இன்று இரண்டாவது நாளாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அதில் குறிப்பிட்டுள்ள பல்வேறு பிரிவுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இது குறித்து எக்ஸ் பதிவில் கருத்துத் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,"வக்ஃப் (திருத்த) சட்டம் 2025-க்கு எதிராக தொடரப்பட்ட திமுக சார்பில் தொடரப்பட்ட மனு உள்ளிட்ட மனுக்களை விசாரணைக்கு ஏற்றதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். இதன் தொடர்ச்சியாக வக்ஃப் சொத்துகள் பாதுகாக்கும் வகையிலும் மற்றும் வக்ஃப் கவுன்சில் மற்றும் வாரியங்களில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் நியமிக்க தடைவிதித்தும் உத்தரவிடப்ட்டுள்ளது.

இஸ்லாமியர்களின் அறக்கட்டளை அமைப்புகளின் நிர்வாகங்கள் மற்றும் முக்கியமான மத நடைமுறைகளில் தலையிடும் வகையில் இஸ்லாமிய சமூகத்தினரை குறிவைத்தே இந்த சட்டத்திருத்தத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றி உள்ளது. மேலும் திமுகவால் சுட்டிக்காட்டப்பட்ட பல்வேறு பிற்போக்குத்தனமான பிரிவுகள் குறித்து உச்ச நீதிமன்றமும் ஆய்வு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நமது சிறுபான்மையினத்தை சேர்ந்த சகோதரர்களுக்கான அரசியல் அமைப்பு சட்டத்தின் உரிமைகளை பாதுகாக்க எல்லாவித முயற்சிகளையும் நாங்கள் மேற்கொள்வோம்,"என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஆர்.பி.உதயகுமார் மீது அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் - சட்டப்பேரவையில் அதிமுக வெளிநடப்பு!

இந்த நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள தவெக தலைவரும், நடிகருமான விஜய்,"வக்ஃப் திருத்தச் சட்டப்படி எந்தப் புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளக் கூடாது என்றும், ஏற்கெனவே பதியப்பட்ட வக்ஃபு சொத்துகள் மீது எந்தப் புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இஸ்லாமியர்களின் உரிமையான வக்ஃப் வாரியம் தொடர்பாக ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.

இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நான் எப்போதும் துணை நிற்பேன், தமிழக வெற்றிக் கழகம் துணை நிற்கும் எனத் தீர்க்கமாகத் தெரிவித்துக்கொள்கிறேன். பாசிச அணுகுமுறைக்கு எதிராக நாம் தொடங்கிய சட்டப் போராட்டத்தில் நமக்குத் துணையாக இருந்து இந்த உத்தரவைப் பெற்றுத் தந்த மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி மற்றும் அவருடைய வழக்கறிஞர் குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்,"என்று கூறியுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

சென்னை: வக்ஃப் (திருத்த) சட்டம் 2025க்கு எதிராக தொடுக்கப்பட்ட திமுக உள்ளிட்ட ஐந்து மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த வழக்கில் இன்று இரண்டாவது நாளாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அதில் குறிப்பிட்டுள்ள பல்வேறு பிரிவுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இது குறித்து எக்ஸ் பதிவில் கருத்துத் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,"வக்ஃப் (திருத்த) சட்டம் 2025-க்கு எதிராக தொடரப்பட்ட திமுக சார்பில் தொடரப்பட்ட மனு உள்ளிட்ட மனுக்களை விசாரணைக்கு ஏற்றதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். இதன் தொடர்ச்சியாக வக்ஃப் சொத்துகள் பாதுகாக்கும் வகையிலும் மற்றும் வக்ஃப் கவுன்சில் மற்றும் வாரியங்களில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் நியமிக்க தடைவிதித்தும் உத்தரவிடப்ட்டுள்ளது.

இஸ்லாமியர்களின் அறக்கட்டளை அமைப்புகளின் நிர்வாகங்கள் மற்றும் முக்கியமான மத நடைமுறைகளில் தலையிடும் வகையில் இஸ்லாமிய சமூகத்தினரை குறிவைத்தே இந்த சட்டத்திருத்தத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றி உள்ளது. மேலும் திமுகவால் சுட்டிக்காட்டப்பட்ட பல்வேறு பிற்போக்குத்தனமான பிரிவுகள் குறித்து உச்ச நீதிமன்றமும் ஆய்வு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நமது சிறுபான்மையினத்தை சேர்ந்த சகோதரர்களுக்கான அரசியல் அமைப்பு சட்டத்தின் உரிமைகளை பாதுகாக்க எல்லாவித முயற்சிகளையும் நாங்கள் மேற்கொள்வோம்,"என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஆர்.பி.உதயகுமார் மீது அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் - சட்டப்பேரவையில் அதிமுக வெளிநடப்பு!

இந்த நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள தவெக தலைவரும், நடிகருமான விஜய்,"வக்ஃப் திருத்தச் சட்டப்படி எந்தப் புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளக் கூடாது என்றும், ஏற்கெனவே பதியப்பட்ட வக்ஃபு சொத்துகள் மீது எந்தப் புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இஸ்லாமியர்களின் உரிமையான வக்ஃப் வாரியம் தொடர்பாக ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.

இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நான் எப்போதும் துணை நிற்பேன், தமிழக வெற்றிக் கழகம் துணை நிற்கும் எனத் தீர்க்கமாகத் தெரிவித்துக்கொள்கிறேன். பாசிச அணுகுமுறைக்கு எதிராக நாம் தொடங்கிய சட்டப் போராட்டத்தில் நமக்குத் துணையாக இருந்து இந்த உத்தரவைப் பெற்றுத் தந்த மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி மற்றும் அவருடைய வழக்கறிஞர் குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்,"என்று கூறியுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.