ETV Bharat / state

முரசொலி செல்வத்தின் சிலையைத் திறந்து வைத்த முதல்வர்! 'சிலந்தி' கட்டுரைகளும் புத்தகமாக வெளியீடு! - MURASOLI SELVAM BIRTHDAY

முரசொலி செல்வத்தின் சிலையைத் திறந்து வைத்து அவருடைய புகைப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் முரசொலி செல்வம் எழுதிய கட்டுரைகள் நூலாக வெளியிடப்பட்டது.

முரசொலி செல்வம் எழுதிய கட்டுரைகள் நூலாக வெளியிடப்பட்டது
முரசொலி செல்வம் எழுதிய கட்டுரைகள் நூலாக வெளியிடப்பட்டது (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 24, 2025 at 9:16 PM IST

1 Min Read

சென்னை: திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'முரசொலி' நாளிதழில் நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றிய முரசொலி செல்வம் கடந்த அக்டோபர் மாதம் இயற்கை எய்தினார்.

இந்நிலையில், முரசொலி செல்வத்தின் பிறந்த நாளையொட்டி இன்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி பத்திரிகை அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முரசொலி செல்வத்தின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் முரசொலி செல்வம் முரசொலி நாளிதழில் 'சிலந்தி' என்ற பெயரில் எழுதிய கட்டுரைகளை, சிலந்தி கட்டுரைகள் என்ற நூலாகத் முத்தமிழறிஞர் பதிப்பகம் தொகுத்துள்ளது. அந்நூலை அமைச்சர் துரைமுருகன் வெளியிட, திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். மேலும், முரசொலி செல்வத்தின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இறுதியாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி உரையாற்றினார்.

இதையும் படிங்க: காஷ்மீரில் தாக்குதலில் காயம் அடைந்த தமிழ்நாடு மருத்துவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி! செல்போன் மூலம் விசாரித்த முதலமைச்சர்!

இந்த நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில், '' முத்தமிழறிஞர் கலைஞரின் கொள்கை வார்ப்பு!
முதலமைச்சரின் பாசத்துக்குரிய வழிகாட்டி! திராவிட இயக்கத்தின் கொள்கை சிங்கம் முரசொலி செல்வம் பிறந்த நாள் இன்று. இந்நாளில், செல்வம் மாமாவின் திருவுருவச்சிலையை முதலமைச்சர் , ‘முரசொலி’ அலுவலக வளாகத்தில் இன்று திறந்து வைத்த நிகழ்வில் பங்கேற்றோம்.

முரசொலியில் ‘சிலந்தி’ என்ற புனைப்பெயரில் செல்வம் எழுதிய கட்டுரைகளை, திமுக இளைஞரணியின் முத்தமிழறிஞர் பதிப்பகம் புத்தகமாக உருவாக்கியுள்ளது.

இதையும் படிங்க: பொன்முடிக்கு எதிரான வழக்கில் முதலமைச்சர் குறித்த கருத்துகளை நீக்க வேண்டும்! மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

இந்த சிறப்புக்குரிய புத்தகத்தை நீர்வளத்துறை அமைச்சர் – கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட, அதனை தி.க. தலைவர்
பெற்றுக் கொண்டார். ‘சிலந்தி’ கட்டுரைகள் புத்தகத்தை கொண்டு வந்ததில் இளைஞர் அணி பெருமை கொள்கிறது. முரசொலி செல்வம் எழுத்துக்கள் என்றென்றும் நமக்கு வழிகாட்டும். அவரது புகழ் ஓங்கட்டும்'' என குறிப்பிட்டு இருந்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

சென்னை: திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'முரசொலி' நாளிதழில் நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றிய முரசொலி செல்வம் கடந்த அக்டோபர் மாதம் இயற்கை எய்தினார்.

இந்நிலையில், முரசொலி செல்வத்தின் பிறந்த நாளையொட்டி இன்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி பத்திரிகை அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முரசொலி செல்வத்தின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் முரசொலி செல்வம் முரசொலி நாளிதழில் 'சிலந்தி' என்ற பெயரில் எழுதிய கட்டுரைகளை, சிலந்தி கட்டுரைகள் என்ற நூலாகத் முத்தமிழறிஞர் பதிப்பகம் தொகுத்துள்ளது. அந்நூலை அமைச்சர் துரைமுருகன் வெளியிட, திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். மேலும், முரசொலி செல்வத்தின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இறுதியாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி உரையாற்றினார்.

இதையும் படிங்க: காஷ்மீரில் தாக்குதலில் காயம் அடைந்த தமிழ்நாடு மருத்துவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி! செல்போன் மூலம் விசாரித்த முதலமைச்சர்!

இந்த நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில், '' முத்தமிழறிஞர் கலைஞரின் கொள்கை வார்ப்பு!
முதலமைச்சரின் பாசத்துக்குரிய வழிகாட்டி! திராவிட இயக்கத்தின் கொள்கை சிங்கம் முரசொலி செல்வம் பிறந்த நாள் இன்று. இந்நாளில், செல்வம் மாமாவின் திருவுருவச்சிலையை முதலமைச்சர் , ‘முரசொலி’ அலுவலக வளாகத்தில் இன்று திறந்து வைத்த நிகழ்வில் பங்கேற்றோம்.

முரசொலியில் ‘சிலந்தி’ என்ற புனைப்பெயரில் செல்வம் எழுதிய கட்டுரைகளை, திமுக இளைஞரணியின் முத்தமிழறிஞர் பதிப்பகம் புத்தகமாக உருவாக்கியுள்ளது.

இதையும் படிங்க: பொன்முடிக்கு எதிரான வழக்கில் முதலமைச்சர் குறித்த கருத்துகளை நீக்க வேண்டும்! மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

இந்த சிறப்புக்குரிய புத்தகத்தை நீர்வளத்துறை அமைச்சர் – கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட, அதனை தி.க. தலைவர்
பெற்றுக் கொண்டார். ‘சிலந்தி’ கட்டுரைகள் புத்தகத்தை கொண்டு வந்ததில் இளைஞர் அணி பெருமை கொள்கிறது. முரசொலி செல்வம் எழுத்துக்கள் என்றென்றும் நமக்கு வழிகாட்டும். அவரது புகழ் ஓங்கட்டும்'' என குறிப்பிட்டு இருந்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.