ETV Bharat / state

தமிழ்நாடு எப்போதுமே டெல்லிக்கு 'Out Of Control' தான்; முதலமைச்சர் கர்ஜனை! - CM MK STALIN SPEECH

ஆதிக்கத்தையும், ஆக்கிரமைப்பையும் எந்த காலத்திலும் அனுமதிக்காத மானமுள்ள தமிழ் மண்ணை அமித்ஷா அல்ல எந்த ஷா-வாக இருந்தாலும் ஆள முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 18, 2025 at 3:50 PM IST

2 Min Read

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், மொத்தம் ரூ.1166.32 கோடி மதிப்பிலான 6,760 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 7,369 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2,02,531 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார்.

அதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசியதாவது; ''தமிழ்நாட்டின் நுழைவு வாயிலும், புனித ஜார்ஜ் கோட்டைக்கு பாதை அமைத்த மாவட்டமுமான இந்த திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்டிருக்கக்கூடிய பொன்னேரியில் நடைபெறக் கூடிய அரசு விழாவில் பங்கெடுத்து உரையாற்றுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த விழாவில், எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவது என்ன தெரியுமா? பல ஆண்டுகளாக இருந்த பிரச்சனை. அதை தீர்த்து அதிகமான
அளவில் இன்றைக்கு மக்கள் பயனடைகின்ற வகையில் பட்டா வழங்குவது தான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும், எவ்வளவு பேருக்கு இன்றைக்கு வழங்கப் போகிறேன் தெரியுமா? 63,124 பேருக்கு பட்டா வழங்கப் போகிறோம்.

திருவள்ளூர் வந்த பிறகு வந்த பிறகு உங்களுடைய உங்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யாமல் போகமுடியுமா? அதனால் புதிதாக 5 அறிவிப்புகளை நான் இந்த விழாவில் வெளிடப் போகிறேன்.

முதல் அறிவிப்பு

கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், தண்டலம் - கசவநல்லாத்தூர் சாலையில், கூவம் ஆற்றின் குறுக்கே 20 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலம் அமைக்கப்படும்.

இரண்டாவது அறிவிப்பு

திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம், மணவூர் - லட்சுமி விலாசபுரம் சாலையில், கொசஸ்தலையாறு ஆற்றின் குறுக்கே, 23 கோடியே 47 லட்சம்
ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.

மூன்றாவது அறிவிப்பு

திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், காக்களூர் ஊராட்சியில், தாமரைக்குளம் மேம்படுத்தும் பணிகள், காக்களூர் ஏரி மேம்படுத்தும் பணிகள் 2 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் "நமக்கு நாமே” திட்டத்தின் கீழ் அது மேற்கொள்ளப்படும்.

நான்காவது அறிவிப்பு

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய உப்புத்தர நில ஏரியான பழவேற்காடு ஏரி, பறவைகளுக்கான முக்கிய வாழ்விடமாகவும், சுற்றுலாத்
தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த ஏரிப் பகுதியில், சூழலியல் சுற்றுலா வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும், இங்கே இருக்கின்ற வைரவன்குப்பம் மீனவ கிராமத்தில், மீனவர்களின் பயன்பாட்டுக்காக வலை பின்னும் கூடம் அமைத்துத் தரப்படும்.

மிக முக்கியமான ஐந்தாவது அறிவிப்பு

வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கின்ற திருமழிசை ஊத்துக்கோட்டை சாலையில், 51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும்.

இந்தியாவில் எந்த மாநில அரசும் செய்யாத வகையில், நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில், மாநில சுயாட்சிக் குழுவை அமைத்திருக்கிறோம். எப்படி தலைவர் கலைஞர் ஆகஸ்ட் 15 விடுதலை நாளன்று மாநில முதலமைச்சர்கள் எல்லாம் தேசிய கொடியை ஏற்றுகின்ற உரிமையை அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் பெற்றுத் தந்தாரோ, அதுபோல, இந்த குழுவின் குழுவின் மூலமாக அனைத்து மாநிலங்களின் நியாயமான உரிமையையும் நாங்கள் பெற்றுத் தருவோம்.

இதையும் படிங்க: ஆன்மிகத்துடன் கூடிய கோடைச் சுற்றுலா போகணுமா? அழகர்மலையை 'மிஸ்' பண்ணாதீங்க!

தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் நம்பர்-1 மாநிலமாக மாற்றுவதற்கு நாங்கள் உழைத்துக் கொண்டே தான் இருப்போம். ஒன்றிய
உள்துறை அமைச்சர் அமித்ஷா 2026-ல் நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என்று நாடாளுமன்றத்தில் பேசுகிறார். தமிழ்நாட்டிற்கு வந்து அதை
சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். நான் அவருக்கு சவாலாக ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்குமே அடிபணியாது. அப்படி ஒரு தனி குணம், ஒரு தனித் தன்மை கொண்டவர்கள் நாங்கள். எங்களுடைய தமிழ்நாடு எப்போதுமே டெல்லிக்கு out of control தான். இங்கே இருக்கக்கூடியவர்கள் சிலரை மிரட்டி, கூட்டணி வைத்துக் கொண்ட நீங்கள் ஜெயிக்க முடியுமா? உங்கள் பரிவாரங்கள் எல்லோரையும் சேர்த்துக் கொண்டு வாருங்கள். ஒரு கை பார்ப்போம்.

ஆதிக்கத்தையும், ஆக்கிரமைப்பையும் எந்த காலத்திலும் அனுமதிக்காத மானமுள்ள மண் இந்த தமிழ் மண். தேர்தலுக்குள் அடுத்த ஓராண்டில் நீங்கள் எப்படியெல்லாம் ஏவல் அமைப்புகளை வைத்து மிரட்டுவீர்கள் என்று எங்களுக்கு தெரியும். ஏன் நாட்டு மக்களுக்கே நன்றாக தெரியும். நாங்கள் இந்த உருட்டல், மிரட்டல்களுக்க எல்லாம் அடிபணிகின்ற அடிமைகள் அல்ல. அமித்ஷா அல்ல எந்த ஷா-வாக இருந்தாலும் சொல்கிறேன் இங்கே ஆள முடியாது. இது தமிழ்நாடு. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும் வரை உங்கள் திட்டம் பலிக்காது'' என இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், மொத்தம் ரூ.1166.32 கோடி மதிப்பிலான 6,760 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 7,369 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2,02,531 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார்.

அதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசியதாவது; ''தமிழ்நாட்டின் நுழைவு வாயிலும், புனித ஜார்ஜ் கோட்டைக்கு பாதை அமைத்த மாவட்டமுமான இந்த திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்டிருக்கக்கூடிய பொன்னேரியில் நடைபெறக் கூடிய அரசு விழாவில் பங்கெடுத்து உரையாற்றுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த விழாவில், எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவது என்ன தெரியுமா? பல ஆண்டுகளாக இருந்த பிரச்சனை. அதை தீர்த்து அதிகமான
அளவில் இன்றைக்கு மக்கள் பயனடைகின்ற வகையில் பட்டா வழங்குவது தான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும், எவ்வளவு பேருக்கு இன்றைக்கு வழங்கப் போகிறேன் தெரியுமா? 63,124 பேருக்கு பட்டா வழங்கப் போகிறோம்.

திருவள்ளூர் வந்த பிறகு வந்த பிறகு உங்களுடைய உங்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யாமல் போகமுடியுமா? அதனால் புதிதாக 5 அறிவிப்புகளை நான் இந்த விழாவில் வெளிடப் போகிறேன்.

முதல் அறிவிப்பு

கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், தண்டலம் - கசவநல்லாத்தூர் சாலையில், கூவம் ஆற்றின் குறுக்கே 20 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலம் அமைக்கப்படும்.

இரண்டாவது அறிவிப்பு

திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம், மணவூர் - லட்சுமி விலாசபுரம் சாலையில், கொசஸ்தலையாறு ஆற்றின் குறுக்கே, 23 கோடியே 47 லட்சம்
ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.

மூன்றாவது அறிவிப்பு

திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், காக்களூர் ஊராட்சியில், தாமரைக்குளம் மேம்படுத்தும் பணிகள், காக்களூர் ஏரி மேம்படுத்தும் பணிகள் 2 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் "நமக்கு நாமே” திட்டத்தின் கீழ் அது மேற்கொள்ளப்படும்.

நான்காவது அறிவிப்பு

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய உப்புத்தர நில ஏரியான பழவேற்காடு ஏரி, பறவைகளுக்கான முக்கிய வாழ்விடமாகவும், சுற்றுலாத்
தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த ஏரிப் பகுதியில், சூழலியல் சுற்றுலா வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும், இங்கே இருக்கின்ற வைரவன்குப்பம் மீனவ கிராமத்தில், மீனவர்களின் பயன்பாட்டுக்காக வலை பின்னும் கூடம் அமைத்துத் தரப்படும்.

மிக முக்கியமான ஐந்தாவது அறிவிப்பு

வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கின்ற திருமழிசை ஊத்துக்கோட்டை சாலையில், 51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும்.

இந்தியாவில் எந்த மாநில அரசும் செய்யாத வகையில், நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில், மாநில சுயாட்சிக் குழுவை அமைத்திருக்கிறோம். எப்படி தலைவர் கலைஞர் ஆகஸ்ட் 15 விடுதலை நாளன்று மாநில முதலமைச்சர்கள் எல்லாம் தேசிய கொடியை ஏற்றுகின்ற உரிமையை அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் பெற்றுத் தந்தாரோ, அதுபோல, இந்த குழுவின் குழுவின் மூலமாக அனைத்து மாநிலங்களின் நியாயமான உரிமையையும் நாங்கள் பெற்றுத் தருவோம்.

இதையும் படிங்க: ஆன்மிகத்துடன் கூடிய கோடைச் சுற்றுலா போகணுமா? அழகர்மலையை 'மிஸ்' பண்ணாதீங்க!

தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் நம்பர்-1 மாநிலமாக மாற்றுவதற்கு நாங்கள் உழைத்துக் கொண்டே தான் இருப்போம். ஒன்றிய
உள்துறை அமைச்சர் அமித்ஷா 2026-ல் நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என்று நாடாளுமன்றத்தில் பேசுகிறார். தமிழ்நாட்டிற்கு வந்து அதை
சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். நான் அவருக்கு சவாலாக ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்குமே அடிபணியாது. அப்படி ஒரு தனி குணம், ஒரு தனித் தன்மை கொண்டவர்கள் நாங்கள். எங்களுடைய தமிழ்நாடு எப்போதுமே டெல்லிக்கு out of control தான். இங்கே இருக்கக்கூடியவர்கள் சிலரை மிரட்டி, கூட்டணி வைத்துக் கொண்ட நீங்கள் ஜெயிக்க முடியுமா? உங்கள் பரிவாரங்கள் எல்லோரையும் சேர்த்துக் கொண்டு வாருங்கள். ஒரு கை பார்ப்போம்.

ஆதிக்கத்தையும், ஆக்கிரமைப்பையும் எந்த காலத்திலும் அனுமதிக்காத மானமுள்ள மண் இந்த தமிழ் மண். தேர்தலுக்குள் அடுத்த ஓராண்டில் நீங்கள் எப்படியெல்லாம் ஏவல் அமைப்புகளை வைத்து மிரட்டுவீர்கள் என்று எங்களுக்கு தெரியும். ஏன் நாட்டு மக்களுக்கே நன்றாக தெரியும். நாங்கள் இந்த உருட்டல், மிரட்டல்களுக்க எல்லாம் அடிபணிகின்ற அடிமைகள் அல்ல. அமித்ஷா அல்ல எந்த ஷா-வாக இருந்தாலும் சொல்கிறேன் இங்கே ஆள முடியாது. இது தமிழ்நாடு. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும் வரை உங்கள் திட்டம் பலிக்காது'' என இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.