ETV Bharat / state

கோபத்தில் சென்றார்.. சடலமாக வந்தார்..! ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் மனைவிக்கு இப்படியா நடக்கணும்? - WOMAN FOUND DEAD IN BESANT BEACH

கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் மனைவி, கடலில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சங்கர் நகர் காவல் நிலையம்
சங்கர் நகர் காவல் நிலையம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 25, 2025 at 11:39 AM IST

Updated : April 25, 2025 at 12:49 PM IST

2 Min Read

சென்னை: மகனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வீட்டை விட்டுச் சென்ற பொழிச்சலூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் மனைவி, கடலில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் பிரேம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவர் பொழிச்சலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி டெய்சி ராணி (48). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், ஏப்ரல் 21 ஆம் தேதி வீட்டிலிருந்த தனது இளைய மகனை், டெய்சி ராணி படிக்கும்படி கூறியுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, டெய்சி ராணி, தனது கைப்பேசியை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

இதனால் பதற்றமான கணவர் மற்றும் இரண்டு மகன்கள் டெய்சி ராணியை, உறவினர் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால், அவர் அங்கும் கிடைக்காததால், இதுகுறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், நேற்று வெளியான நாளிதழ்களிலும் அவர்கள் காணவில்லை என விளம்பரம் கொடுத்திருந்தனர். இதன்பேரில், முதல் கட்ட விசாரணைக்காக அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில், டெய்சி ராணி பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே ஆட்டோவில் ஏறிச் சென்றது தெரிய வந்தது. அதன் பின்னர், அவர் எங்கே சென்றார்? எனத் தெரியவில்லை. இந்நிலையில், இன்று (ஏப்ரல் 25) காலை சென்னை பெசன்ட் நகர் கடலில் பெண் ஒருவரின் சடலம் மிதந்து கொண்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெசன்ட் நகர் போலீசார் இறந்த பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றினர். பின்னர், அவர் பொழிச்சலூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ஜோசப் மனைவி டெய்சி ராணி என உறுதிப்படுத்தப்பட்டது.

இதையும் படிங்க: எங்களுக்கே ஜெயில் தண்டனை கொடுக்குறியா? நீதிபதிக்கே கொலை மிரட்டல் விடுத்த 'கஞ்சா பிரதர்ஸ்'

இதனைத் தொடர்ந்து, அவரது சடலத்தை மீட்டு போலீசார் பிரேதப் பரிசோதனைக்காகச் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இது கொலையா? அல்லது தற்கொலையா? அல்லது கடலில் தவறி விழுந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

சென்னை: மகனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வீட்டை விட்டுச் சென்ற பொழிச்சலூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் மனைவி, கடலில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் பிரேம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவர் பொழிச்சலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி டெய்சி ராணி (48). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், ஏப்ரல் 21 ஆம் தேதி வீட்டிலிருந்த தனது இளைய மகனை், டெய்சி ராணி படிக்கும்படி கூறியுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, டெய்சி ராணி, தனது கைப்பேசியை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

இதனால் பதற்றமான கணவர் மற்றும் இரண்டு மகன்கள் டெய்சி ராணியை, உறவினர் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால், அவர் அங்கும் கிடைக்காததால், இதுகுறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், நேற்று வெளியான நாளிதழ்களிலும் அவர்கள் காணவில்லை என விளம்பரம் கொடுத்திருந்தனர். இதன்பேரில், முதல் கட்ட விசாரணைக்காக அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில், டெய்சி ராணி பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே ஆட்டோவில் ஏறிச் சென்றது தெரிய வந்தது. அதன் பின்னர், அவர் எங்கே சென்றார்? எனத் தெரியவில்லை. இந்நிலையில், இன்று (ஏப்ரல் 25) காலை சென்னை பெசன்ட் நகர் கடலில் பெண் ஒருவரின் சடலம் மிதந்து கொண்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெசன்ட் நகர் போலீசார் இறந்த பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றினர். பின்னர், அவர் பொழிச்சலூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ஜோசப் மனைவி டெய்சி ராணி என உறுதிப்படுத்தப்பட்டது.

இதையும் படிங்க: எங்களுக்கே ஜெயில் தண்டனை கொடுக்குறியா? நீதிபதிக்கே கொலை மிரட்டல் விடுத்த 'கஞ்சா பிரதர்ஸ்'

இதனைத் தொடர்ந்து, அவரது சடலத்தை மீட்டு போலீசார் பிரேதப் பரிசோதனைக்காகச் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இது கொலையா? அல்லது தற்கொலையா? அல்லது கடலில் தவறி விழுந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

Last Updated : April 25, 2025 at 12:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.