ETV Bharat / state

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தினால் இலவச மின்சாரம் 'கட்'! எச்சரிக்கும் மின் ஊழியர்கள்! - SMART METERS IN TAMIL NADU

ஸ்மார்ட் மீட்டரை கொண்டு வந்தால் மின்சாரம் சந்தைப் பொருளாக மாறி பணம் படைத்தவருக்கு தான் மின்சாரம் என்ற நிலை வரும் என தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு எச்சரித்துள்ளது.

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன்
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 17, 2025 at 8:19 PM IST

3 Min Read

சென்னை: தமிழ்நாட்டில் தனியார் மூலம் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தினால் விவசாய மின் இணைப்புகளுக்கும் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு எச்சரித்துள்ளது.

சென்னை அண்ணா சாலை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் ஈடிவி பாரத் தமிழ்நாட்டிற்கு சிறப்புப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ''தமிழ்நாடு மின் வாரியத்தில் உள்ள மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் நடவடிக்கையை மத்திய அரசு நிர்பந்தத்தால் தமிழக அரசு அதை மேற்கொள்ள உள்ளது. மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதாவில் கூறப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட விநியோக சேவை (Revamped Distribution Service Sector) அடிப்படையில், மாநில மின் வாரியங்களுக்கு சொந்தமான மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

துல்லியமான கணக்கீடு என்பதற்காக இதை மேற்கொள்ளப் போவதாக மத்திய அரசு சொல்கிறது. மின்சார வாரியம் கொண்டுவரப்பட்டதில் இருந்து இன்று வரை பயன்பாடுகளை சரியாக மின் ஊழியர்கள் குறித்து வந்தனர். எலெக்ட்ரோ மீட்டர் முதலில் இருந்தது. அதை 1997-98 இல் கண்ணாடி மீட்டராக மாற்றினார்கள். பின் 2014 ஆம் ஆண்டில் ஸ்டாட்டிக் மீட்டராக மாற்றினார்கள்.

'ஃபெனால்டி அதிகமாகலாம்'

தற்போது ஸ்மார்ட் மீட்டரை நாங்கள் ஏன் வேண்டாம் என்று சொல்கிறோம் என்றால், ஒருபுறம் தொழில்நுட்ப வளர்ச்சி தேவை தான். அதில் நுகர்வோருக்கு ஒரு புறம் நன்மை உள்ளது. மாதந்தோறும் மின் கணக்கீடு செய்ய நாங்கள் அவர்கள் வீட்டிற்கு போக வேண்டிய தேவை இருக்காது. அதே நேரத்தில் சாதாரண மக்கள் மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால் அலுவலகத்திற்கு வந்து ஃபெனால்டி உடன் ஒரு தொகையை கட்டி சரி செய்வர். ஸ்மார்ட் மீட்டர் வந்தால் மின் மறு அமைப்பு செய்ய தோராயமாக ரூ.350 முதல் ரூ.400 வரை கட்ட வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி பராமரிக்கும் பணியை டெண்டர் எடுக்கும் தனியார் நிறுவனம் தான் செய்யும்.

மின்சார வாரிய ஊழியர்களுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பணிக்கும் சம்பந்தம் இல்லை. இதனால் மின் கணக்கீட்டாளர், கணக்கிட்டு மேற்பார்வையாளர், வருவாய் மேம்பாட்டாளர் பணிகள் கேள்விக்குறியாக மாறும். அவர்கள் வேறு பணிக்கு மாற்றப்படுவார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

'பீக் அவர் சார்ஜ்'

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொறுத்த 475 கோடி ரூபாய் செலவாகும். 53 கோடி மத்திய அரசு தரும். மீதம் மாநில அரசு தான் செய்ய வேண்டும். பீக் அவர் சார்ஜ் கணக்கீடு செய்ய வேண்டும் என்று சொல்கின்றனர். மின் வாரியத்தில் வணிக பெரு நிறுவனங்களுக்கு மாலை 6 மணி முதல் 9 மணி வரை கூடுதல், உயரழுத்த மின் வசூல் இருக்கும். ஆனால் ஸ்மார்ட் மீட்டர் வந்தால் எல்லா நிறுவனங்களுக்கும் பீக் அவர் சார்ஜஸ் இருக்கும்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, அதே போல மாலை 6 மணி முதல் 10 மணி வரை கூடுதல் 25 சதவீதம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை வரும். காலை 5 மணி முதல் 6 மணி வரை, இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை 5 ரூபாய் மின் கட்டணம் இருக்கும். இதனால் பொது மக்களின் வாழ்க்கை முறையிலும் மாற்றம் வரும். மின்சார வாரியத்தில் 83 காலகட்டத்தில் மீட்டர் கட்டணம் ஒழிக்கப்பட்டது. மீட்டருக்கான கட்டணம் தற்போது இல்லை. ஸ்மார்ட் மீட்டரில் அது இருக்கும். ஆனால் அதை மின்சார வாரியம் தனி நபருக்கு செலுத்தும் என்கின்றனர். ஒரு நிலையில் தனி நபர் கொடுக்க வேண்டும் என்று கூட சொல்லலாம்.

தமிழகத்தில் உள்ள 22 லட்சம் பம்பு செட்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த வேண்டும் என்கின்றனர். இதற்கான மானியத்தை நேரடியாக, நேரடி பலன் பரிமாற்றம் (Direct benefit transfer method) மூலம் வங்கி கணக்கில் கொடுப்போம் என்கின்றனர். இதனால் விவசாயிகள் மின் கட்டணம் செலுத்த வேண்டும்.

இலவச திட்டத்தில் 82 லட்சம் வீடுகள் 100 யூனிட் இலவசம் மின்சாரத்தில் பயன் அடைந்து வருகின்றன. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் வந்தால் பாதிக்கப்படுவர். கேரளாவில் இந்த திட்டத்தை ஏற்க மாட்டோம் என்று சொல்லி விட்டனர். கேரளாவில் மீட்டரை வாங்கிக் கொடுங்கள் நாங்கள் பொருத்திக் கொள்கிறோம் என்றனர். இதே போல் தமிழகத்திலும் செய்ய வேண்டும்.

தர்ணா போராட்டம்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த விடப்பட்டுள்ள குளோபல் டெண்டரை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தின் அத்தனை தெருக்களிலும் 1 லட்சம் நோட்டீஸ்கள் கொடுக்க உள்ளோம். சட்டமன்றத்தில் 22 ஆம் தேதி மின்சார வாரிய மானியக் கோரிக்கை வர உள்ளது. அதற்கு முன்பு அனைத்து மின்வாரிய மேற்பார்வை அலுவலகம் முன்பு ஏப்ரல் 21 ஆம் தேதி எங்கள் கோரிக்கைகளை வைத்து மாலை நேர தர்ணா போராட்டம் செய்ய உள்ளோம்.

ஸ்மார்ட் மீட்டர் திட்டம் ஏற்கனவே பல மாநிலங்களில் தோல்வியடைந்த திட்டம். இதை நீண்ட செயல்பாடாக செய்ய வேண்டும். அதுவும் தனியாரிடம் போகக் கூடாது. எதிர்காலத்தில் ப்ரீ பெய்டு திட்டமாக மாற வாய்ப்புள்ளது.

'23 ஆயிரம் கள உதவியாளர் பதவிகள் காலி'

தமிழ்நாட்டுக்கு இப்போதைக்கு ஸ்மார்ட் மீட்டர் திட்டம் தேவையில்லை. ஏற்கனவே இருக்கும் மீட்டரில் தேவையான தொழில்நுட்பத்தை பொருத்தி செயல்படுத்தலாம். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டால் 50 சதவீதம் தனியாரிடம் போய் விடும். ஒன்றரை கோடி மக்கள் மின்வாரியத்தில் மானியம் பெறுகின்றனர். ஸ்மார்ட் மீட்டர் வந்தால் மானியம் இல்லாமல் போகும்'' என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் இணைப்பு
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் இணைப்பு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

சென்னை: தமிழ்நாட்டில் தனியார் மூலம் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தினால் விவசாய மின் இணைப்புகளுக்கும் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு எச்சரித்துள்ளது.

சென்னை அண்ணா சாலை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் ஈடிவி பாரத் தமிழ்நாட்டிற்கு சிறப்புப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ''தமிழ்நாடு மின் வாரியத்தில் உள்ள மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் நடவடிக்கையை மத்திய அரசு நிர்பந்தத்தால் தமிழக அரசு அதை மேற்கொள்ள உள்ளது. மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதாவில் கூறப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட விநியோக சேவை (Revamped Distribution Service Sector) அடிப்படையில், மாநில மின் வாரியங்களுக்கு சொந்தமான மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

துல்லியமான கணக்கீடு என்பதற்காக இதை மேற்கொள்ளப் போவதாக மத்திய அரசு சொல்கிறது. மின்சார வாரியம் கொண்டுவரப்பட்டதில் இருந்து இன்று வரை பயன்பாடுகளை சரியாக மின் ஊழியர்கள் குறித்து வந்தனர். எலெக்ட்ரோ மீட்டர் முதலில் இருந்தது. அதை 1997-98 இல் கண்ணாடி மீட்டராக மாற்றினார்கள். பின் 2014 ஆம் ஆண்டில் ஸ்டாட்டிக் மீட்டராக மாற்றினார்கள்.

'ஃபெனால்டி அதிகமாகலாம்'

தற்போது ஸ்மார்ட் மீட்டரை நாங்கள் ஏன் வேண்டாம் என்று சொல்கிறோம் என்றால், ஒருபுறம் தொழில்நுட்ப வளர்ச்சி தேவை தான். அதில் நுகர்வோருக்கு ஒரு புறம் நன்மை உள்ளது. மாதந்தோறும் மின் கணக்கீடு செய்ய நாங்கள் அவர்கள் வீட்டிற்கு போக வேண்டிய தேவை இருக்காது. அதே நேரத்தில் சாதாரண மக்கள் மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால் அலுவலகத்திற்கு வந்து ஃபெனால்டி உடன் ஒரு தொகையை கட்டி சரி செய்வர். ஸ்மார்ட் மீட்டர் வந்தால் மின் மறு அமைப்பு செய்ய தோராயமாக ரூ.350 முதல் ரூ.400 வரை கட்ட வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி பராமரிக்கும் பணியை டெண்டர் எடுக்கும் தனியார் நிறுவனம் தான் செய்யும்.

மின்சார வாரிய ஊழியர்களுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பணிக்கும் சம்பந்தம் இல்லை. இதனால் மின் கணக்கீட்டாளர், கணக்கிட்டு மேற்பார்வையாளர், வருவாய் மேம்பாட்டாளர் பணிகள் கேள்விக்குறியாக மாறும். அவர்கள் வேறு பணிக்கு மாற்றப்படுவார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

'பீக் அவர் சார்ஜ்'

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொறுத்த 475 கோடி ரூபாய் செலவாகும். 53 கோடி மத்திய அரசு தரும். மீதம் மாநில அரசு தான் செய்ய வேண்டும். பீக் அவர் சார்ஜ் கணக்கீடு செய்ய வேண்டும் என்று சொல்கின்றனர். மின் வாரியத்தில் வணிக பெரு நிறுவனங்களுக்கு மாலை 6 மணி முதல் 9 மணி வரை கூடுதல், உயரழுத்த மின் வசூல் இருக்கும். ஆனால் ஸ்மார்ட் மீட்டர் வந்தால் எல்லா நிறுவனங்களுக்கும் பீக் அவர் சார்ஜஸ் இருக்கும்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, அதே போல மாலை 6 மணி முதல் 10 மணி வரை கூடுதல் 25 சதவீதம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை வரும். காலை 5 மணி முதல் 6 மணி வரை, இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை 5 ரூபாய் மின் கட்டணம் இருக்கும். இதனால் பொது மக்களின் வாழ்க்கை முறையிலும் மாற்றம் வரும். மின்சார வாரியத்தில் 83 காலகட்டத்தில் மீட்டர் கட்டணம் ஒழிக்கப்பட்டது. மீட்டருக்கான கட்டணம் தற்போது இல்லை. ஸ்மார்ட் மீட்டரில் அது இருக்கும். ஆனால் அதை மின்சார வாரியம் தனி நபருக்கு செலுத்தும் என்கின்றனர். ஒரு நிலையில் தனி நபர் கொடுக்க வேண்டும் என்று கூட சொல்லலாம்.

தமிழகத்தில் உள்ள 22 லட்சம் பம்பு செட்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த வேண்டும் என்கின்றனர். இதற்கான மானியத்தை நேரடியாக, நேரடி பலன் பரிமாற்றம் (Direct benefit transfer method) மூலம் வங்கி கணக்கில் கொடுப்போம் என்கின்றனர். இதனால் விவசாயிகள் மின் கட்டணம் செலுத்த வேண்டும்.

இலவச திட்டத்தில் 82 லட்சம் வீடுகள் 100 யூனிட் இலவசம் மின்சாரத்தில் பயன் அடைந்து வருகின்றன. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் வந்தால் பாதிக்கப்படுவர். கேரளாவில் இந்த திட்டத்தை ஏற்க மாட்டோம் என்று சொல்லி விட்டனர். கேரளாவில் மீட்டரை வாங்கிக் கொடுங்கள் நாங்கள் பொருத்திக் கொள்கிறோம் என்றனர். இதே போல் தமிழகத்திலும் செய்ய வேண்டும்.

தர்ணா போராட்டம்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த விடப்பட்டுள்ள குளோபல் டெண்டரை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தின் அத்தனை தெருக்களிலும் 1 லட்சம் நோட்டீஸ்கள் கொடுக்க உள்ளோம். சட்டமன்றத்தில் 22 ஆம் தேதி மின்சார வாரிய மானியக் கோரிக்கை வர உள்ளது. அதற்கு முன்பு அனைத்து மின்வாரிய மேற்பார்வை அலுவலகம் முன்பு ஏப்ரல் 21 ஆம் தேதி எங்கள் கோரிக்கைகளை வைத்து மாலை நேர தர்ணா போராட்டம் செய்ய உள்ளோம்.

ஸ்மார்ட் மீட்டர் திட்டம் ஏற்கனவே பல மாநிலங்களில் தோல்வியடைந்த திட்டம். இதை நீண்ட செயல்பாடாக செய்ய வேண்டும். அதுவும் தனியாரிடம் போகக் கூடாது. எதிர்காலத்தில் ப்ரீ பெய்டு திட்டமாக மாற வாய்ப்புள்ளது.

'23 ஆயிரம் கள உதவியாளர் பதவிகள் காலி'

தமிழ்நாட்டுக்கு இப்போதைக்கு ஸ்மார்ட் மீட்டர் திட்டம் தேவையில்லை. ஏற்கனவே இருக்கும் மீட்டரில் தேவையான தொழில்நுட்பத்தை பொருத்தி செயல்படுத்தலாம். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டால் 50 சதவீதம் தனியாரிடம் போய் விடும். ஒன்றரை கோடி மக்கள் மின்வாரியத்தில் மானியம் பெறுகின்றனர். ஸ்மார்ட் மீட்டர் வந்தால் மானியம் இல்லாமல் போகும்'' என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் இணைப்பு
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் இணைப்பு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.