பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 9.30 மணிக்கு பெங்களூரு-பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.
2025ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனின் 34 ஆவது போட்டி பெங்களூருவில் சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 9.30க்கு தொடங்கியது. பெங்களூருவில் மழை பெய்ததன் காரணமாக போட்டி நடைபெறும் சின்னச்சாமி மைதானத்தில் மழை நீர் தேங்கியது. எனவே, இரவு 7.30க்கு தொடங்க வேண்டிய போட்டி தாமதமானது. மைதானத்தில் தேங்கியிருந்த மழை நீர் அகற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து 14 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீசத் தீர்மானித்தது. எனவே பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய பிலிப் சால்ட் நான்கு பந்துகளில் வெறும் நான்கு ரன்கள் எடுத்த நிலையில் அர்ஸ்தீப் சிங் பந்தில் அவுட் ஆனார். தொடக்க ஆட்டக்கார ருடன் ஜோடி சேர்ந்து ஆடிய விராட் கோலியும் மூன்று பந்துகளில் ஒரே ஒரு ரன்மட்டும் எடுத்து வந்த வேகத்தில் திரும்பினார். மூன்றாவதாக களம் இறங்கிய ரஜத் படிதார் நிதானமாக விளையாடி 18 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
நான்காவதாக வந்த லியாம் லிவிங் ஸ்டோன், ஐந்தாவதாக களம் இறங்கிய ஜித்தேஷ் சர்மா இருவரும் முறையே 4, 2 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து அவுட் ஆகினர். 6ஆவதாக விளையாட வந்த குருணால் பாண்டியா 2 பந்துகளில் ஒரே ஒரு ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 7 ஆவதாக களம் இறங்கிய டிம் டேவிட் அபாரமாக விளையாடி 26 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்தார்.
8ஆவதாக களம் இறங்கிய மனோஜ் பன்டேஜ் நான்கு பந்துகளில் ஒரே ஒரு ரன்மட்டும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 9ஆவதாக விளையாட வந்த புவனேஸ்வர் குமார் 13 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். 10 ஆவது வீரராக களம் இறங்கிய யாஸ் தயாள் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹேசில்வுட் ஒரு ரன்கூட எடுக்கவில்லை. நிர்ணயிக்கப்பட்ட 14 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து பெங்களூரு அணி 95 ரன்களை எடுத்திருந்தது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்