ETV Bharat / lifestyle

வீட்ல மைதா மாவு சும்மாவே இருக்கா? இந்த மாதிரி குலாப் ஜாமுன் ட்ரை பண்ணிப் பாருங்க! - SOFT GULAB JAMUN

மைதா மாவு, தயிர் வைத்து செய்யக்கூடிய குலாப் ஜாமுன் ரெசிபி. இந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் செய்து அசத்துங்க...

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : March 22, 2025 at 7:27 AM IST

1 Min Read

பெரும்பாலோனோருக்கு பிடித்த இனிப்பு வகையில் முதல் இடத்தில் இருப்பது குலாப் ஜாமுன் தான். ஏன், இனிப்பே பிடிக்காது என்பவர்கள் கூட, குலாப் ஜாமுனை பார்த்தால் 'லபக் லப்க்' என இரண்டு உருண்டைகளை உள்ளே தள்ளுவார்கள். தின்ன தின்ன திகட்டாமல், வாயில் வைத்ததும் கரையும் குலாப் ஜாமுனை நினைத்தாலே எச்சில் ஊறும். இப்படி அனைவரும் விரும்பி உண்ணும் குலாப் ஜாமுனை வீட்டில் செய்ய வேண்டும் என்றாலே பயம் வந்துவிடுகிறது. கடையில் இருந்து ஆசை ஆசையாக மாவு பாக்கெட் வாங்கி செய்யும் போது சில சொதப்பல்கள் நடந்துவிடுகிறது. இந்நிலையில், எந்த சிக்கலும் இல்லாமல் வீட்டில் இருக்கும் பொருளை வைத்து செய்யக்கூடிய இந்த தயிர் குலாப் ஜாமுனை ஒரு முறை செஞ்சி பாருங்க. கண்டிப்பா சுவையாக வரும்.அப்புறம் என்ன யோசனை செய்யலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • தயிர் - 1/2 கப்
  • சர்க்கரை - 1 1/2 கப்
  • மைதா - 1 கப்
  • பால்பவுடர் - 3 கப்
  • சமையல் சோடா - 1 டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர் - 4 கப்
  • நெய்/ எண்ணெய் - தேவையான அளவு

குலாப் ஜாமுன் செய்முறை:

  • கடாயை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பின்னர் சர்க்கரையை சேர்த்து பாகு காய்ச்சவும். கம்பி பதம் வந்ததும் அடுப்பை அனைத்து தனியாக வைக்கவும்.
  • இப்போது, ஒரு அகல பாத்திரத்தில் மைதா, பால் பவுடர், தயிர் மற்றும் சமையல் சோடாவை சேர்க்கவும். தேவைக்கேற்ப, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நைசாக பிசையவும். பின்னர், கையில் கொஞ்சமாக நெய் தடவி, உங்கள் விருப்பத்திற்கேற்ப சின்ன உருண்டைகளாக உருட்டவும்.
  • இப்போது, வாணலியை அடுப்பில் வைத்து, நெய் அல்லது எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், உருண்டைகளைப் போட்டு பொரித்து எடுக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து பொரிக்க வேண்டும்.
  • பொரித்த உருண்டைகளை, ஏற்கனவே தயாரித்த சர்க்கரைப் பாகில் போட்டு நன்றாக ஊறவைக்கவும். பாகில் குலாப் ஜாமுன் நன்கு ஊறி உப்பி வந்ததும் எடுத்தால் தயிர் குலாப் ஜாமுன் தயார். இது வழக்கமான குலாப் ஜாமுனை விட வித்தியாசமான சுவையுடன் நன்றாக இருக்கும். ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!

இதையும் படிங்க:

பெரும்பாலோனோருக்கு பிடித்த இனிப்பு வகையில் முதல் இடத்தில் இருப்பது குலாப் ஜாமுன் தான். ஏன், இனிப்பே பிடிக்காது என்பவர்கள் கூட, குலாப் ஜாமுனை பார்த்தால் 'லபக் லப்க்' என இரண்டு உருண்டைகளை உள்ளே தள்ளுவார்கள். தின்ன தின்ன திகட்டாமல், வாயில் வைத்ததும் கரையும் குலாப் ஜாமுனை நினைத்தாலே எச்சில் ஊறும். இப்படி அனைவரும் விரும்பி உண்ணும் குலாப் ஜாமுனை வீட்டில் செய்ய வேண்டும் என்றாலே பயம் வந்துவிடுகிறது. கடையில் இருந்து ஆசை ஆசையாக மாவு பாக்கெட் வாங்கி செய்யும் போது சில சொதப்பல்கள் நடந்துவிடுகிறது. இந்நிலையில், எந்த சிக்கலும் இல்லாமல் வீட்டில் இருக்கும் பொருளை வைத்து செய்யக்கூடிய இந்த தயிர் குலாப் ஜாமுனை ஒரு முறை செஞ்சி பாருங்க. கண்டிப்பா சுவையாக வரும்.அப்புறம் என்ன யோசனை செய்யலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • தயிர் - 1/2 கப்
  • சர்க்கரை - 1 1/2 கப்
  • மைதா - 1 கப்
  • பால்பவுடர் - 3 கப்
  • சமையல் சோடா - 1 டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர் - 4 கப்
  • நெய்/ எண்ணெய் - தேவையான அளவு

குலாப் ஜாமுன் செய்முறை:

  • கடாயை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பின்னர் சர்க்கரையை சேர்த்து பாகு காய்ச்சவும். கம்பி பதம் வந்ததும் அடுப்பை அனைத்து தனியாக வைக்கவும்.
  • இப்போது, ஒரு அகல பாத்திரத்தில் மைதா, பால் பவுடர், தயிர் மற்றும் சமையல் சோடாவை சேர்க்கவும். தேவைக்கேற்ப, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நைசாக பிசையவும். பின்னர், கையில் கொஞ்சமாக நெய் தடவி, உங்கள் விருப்பத்திற்கேற்ப சின்ன உருண்டைகளாக உருட்டவும்.
  • இப்போது, வாணலியை அடுப்பில் வைத்து, நெய் அல்லது எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், உருண்டைகளைப் போட்டு பொரித்து எடுக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து பொரிக்க வேண்டும்.
  • பொரித்த உருண்டைகளை, ஏற்கனவே தயாரித்த சர்க்கரைப் பாகில் போட்டு நன்றாக ஊறவைக்கவும். பாகில் குலாப் ஜாமுன் நன்கு ஊறி உப்பி வந்ததும் எடுத்தால் தயிர் குலாப் ஜாமுன் தயார். இது வழக்கமான குலாப் ஜாமுனை விட வித்தியாசமான சுவையுடன் நன்றாக இருக்கும். ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!

இதையும் படிங்க:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.