ETV Bharat / international

டிரம்பின் வர்த்தக போருக்கு இடையே இந்தியா வரும் அமெரிக்க துணை அதிபர் - எகிறும் எதிர்பார்ப்பு! - US VP VANCE

அமெரிக்க துணை அதிபராக தேர்வான பிறகு முதல்முறையாக இந்தியா வரும் ஜே.டி.வான்ஸ்க்கு மத்திய அரசு சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் (கோப்புப்படம் )
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் (கோப்புப்படம் ) (AP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 20, 2025 at 6:09 PM IST

1 Min Read

புதுதில்லி: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் 4 நாள் பயணமாக தனது குடுபத்தினருடன் நாளை இந்தியா வரவுள்ளார்.

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தேர்தல் வெற்றிக்குப்ி றகு பல்வேறு நாடுகளுக்கு அரசு முறை பயணமாக செல்ல இருப்பதாக கூறியிருந்தார். அதன்படி இந்தியாவுக்கு நாளை வரும் அவர், 24ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.

அவருடன் அமெரிக்காவின் 2-வது பெண்மணியான அவருடைய மனைவி உஷா வான்ஸ் மற்றும் அவரின் 3 குழந்தைகளும் வருகிறார்கள். அது தவிர அமெரிக்க அரசின் முக்கிய நிர்வாகிகளும் அவருடன் இந்தியா வருகிறார்கள். நாளை மாலை பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேச உள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளிக்க உள்ளார்.

தொடர்ந்து இந்தியாவின் பாரம்பரிய சுற்றுலா இடங்களுக்கு சுற்றிப்பார்க்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக ஜெய்ப்பூர் அரண்மனை மற்றும் ஆக்ராவிலுள்ள தாஜ்மகால் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உஷா வான்ஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதால், அவர்களின் இந்திய பயணம் முக்கியத்தும் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: மருத்துவமனைக்குச் செல்லும் டொனால்டு டிரம்ப்: ஆவலுடன் காத்திருக்கும் அமெரிக்கா!

அமெரிக்க தேர்தலில் ட்ரம்ப் வெற்றிபெற்றதை தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கு இறங்குமதி வரி முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகம் விதிக்கப்பட்டது. இது உலக நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து சீனாவின் மீது விதிக்கப்பட்ட வரி விதிப்பை மட்டும் 90 நாள்களுக்கு ட்ரம்ப் நிறுத்தி வைத்துள்ளார்.

வரி விதிப்பால் இந்திய பொருட்கள் அமெரிக்காவில் இறக்குமதி ஆவதில் சிக்கல் எழுந்துள்ளதால், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு ஜே.டி.வான்ஸிடம் பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வர்த்தகம், கட்டணங்கள், பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட இருதரப்பு உறவை வலுப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அமெரிக்கா உடனான ராஜாங்க உறவு இந்த சந்திப்பின் மூலம் மேம்படும் என்ற கருத்தும் நிலவுகிறது. மத்திய அரசு அதற்கான முயற்சியில் ஈடுபட்டு, அதை அமெரிக்க அரசு ஏற்றுக்கொண்டால் வரி விதிப்பு பிரச்சனைகள் தீர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்க துணை அதிபரின் இந்த பயணத்தை முன்னிட்டு தாஜ்மஹால், ஜெய்ப்பூர் அரண்மனை மற்றும் அவர் தங்கும் நட்சத்திர விடுதிகளில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

புதுதில்லி: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் 4 நாள் பயணமாக தனது குடுபத்தினருடன் நாளை இந்தியா வரவுள்ளார்.

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தேர்தல் வெற்றிக்குப்ி றகு பல்வேறு நாடுகளுக்கு அரசு முறை பயணமாக செல்ல இருப்பதாக கூறியிருந்தார். அதன்படி இந்தியாவுக்கு நாளை வரும் அவர், 24ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.

அவருடன் அமெரிக்காவின் 2-வது பெண்மணியான அவருடைய மனைவி உஷா வான்ஸ் மற்றும் அவரின் 3 குழந்தைகளும் வருகிறார்கள். அது தவிர அமெரிக்க அரசின் முக்கிய நிர்வாகிகளும் அவருடன் இந்தியா வருகிறார்கள். நாளை மாலை பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேச உள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளிக்க உள்ளார்.

தொடர்ந்து இந்தியாவின் பாரம்பரிய சுற்றுலா இடங்களுக்கு சுற்றிப்பார்க்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக ஜெய்ப்பூர் அரண்மனை மற்றும் ஆக்ராவிலுள்ள தாஜ்மகால் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உஷா வான்ஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதால், அவர்களின் இந்திய பயணம் முக்கியத்தும் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: மருத்துவமனைக்குச் செல்லும் டொனால்டு டிரம்ப்: ஆவலுடன் காத்திருக்கும் அமெரிக்கா!

அமெரிக்க தேர்தலில் ட்ரம்ப் வெற்றிபெற்றதை தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கு இறங்குமதி வரி முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகம் விதிக்கப்பட்டது. இது உலக நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து சீனாவின் மீது விதிக்கப்பட்ட வரி விதிப்பை மட்டும் 90 நாள்களுக்கு ட்ரம்ப் நிறுத்தி வைத்துள்ளார்.

வரி விதிப்பால் இந்திய பொருட்கள் அமெரிக்காவில் இறக்குமதி ஆவதில் சிக்கல் எழுந்துள்ளதால், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு ஜே.டி.வான்ஸிடம் பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வர்த்தகம், கட்டணங்கள், பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட இருதரப்பு உறவை வலுப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அமெரிக்கா உடனான ராஜாங்க உறவு இந்த சந்திப்பின் மூலம் மேம்படும் என்ற கருத்தும் நிலவுகிறது. மத்திய அரசு அதற்கான முயற்சியில் ஈடுபட்டு, அதை அமெரிக்க அரசு ஏற்றுக்கொண்டால் வரி விதிப்பு பிரச்சனைகள் தீர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்க துணை அதிபரின் இந்த பயணத்தை முன்னிட்டு தாஜ்மஹால், ஜெய்ப்பூர் அரண்மனை மற்றும் அவர் தங்கும் நட்சத்திர விடுதிகளில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.