வாடிகன்: மறைந்த போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ் கடந்த 21 ஆம் தேதி காலமானார். அவரது உடலுக்கு கடந்த 5 நாட்களாக உலகத் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வந்தனர். அவரது இறுதிச் சடங்குகள் இன்று செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றன. இதில் லட்சக்கணக்கான மக்கள் நேரில் கலந்து கொண்டு மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இந்ந நிகழ்ச்சியில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பிடன், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் அவரது மனைவி விக்டோரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, தமிழக அரசு சார்பாக அமைச்சர் ஆவடி நாசர் மற்றும் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த இறுதி சடங்கு நிகழ்ச்சி இத்தாலி நாட்டை சேர்ந்த கார்டினல் ஜியோவன்னி தலைமையில் நடைபெற்றது. இதில், 220 கார்டினல்கள் மற்றும் 750 ஆயர்கள் கலந்து கொண்டு இறுதிச் சடங்கு திருபலியை செய்தார்கள். இதைத் தொடர்ந்து போப் பிரான்சிஸ் உடல் மத்திய ரோம் பகுதியில் உள்ள மரியா மாகியோர் பலிசிக்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேலும், போப் பிரான்சிஸ் தனிப்பட்ட முறையில் அடக்கம் செய்யப்படுள்ளதாகவும், அவரது கல்லறை நாளை முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும் எனவும் வாடிகன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:போப் பிரான்சிஸ் மறைவு: புதிய போப் எப்படி தேர்வு செய்யப்படுவார்? வியூப்பூட்டும் நடைமுறைகள்! |
போப் ஆக பதவி வகித்தவர்கள் மரணடைந்தால், அவர்களின் இறுதிச்சடங்கும், இறுதி ஊர்வலமும் மிக பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். இதற்காக கோடிக்கணக்கான திருச்சபை பணம் செலவிடப்படும். ஆனால், இதனை விரும்பாத போப் பிரான்சிஸ், தான் இறந்தால் தனது இறுதிச் சடங்கு மிக மிக எளிமையாக நடைபெற வேண்டும் என தனது திருச்சபை அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார். ஒரு சாதாரண மர சவப்பெட்டியில் தான் தனது உடலை வைக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வாழும் காலம் வரை எளிமையாக வாழ்ந்து மறைந்த போப் பிரான்சிஸ், தான் மரணித்த பிறகும் எளிமையாக தனது இறுதிப் பயணம் இருக்க வேண்டும் என விரும்பினார். அந்த எளிமையும், கருணையும் மட்டுமே வாடிகன் நகரை நோக்கி சுமார் 2 லட்சம் பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக செல்ல காரணமாக இருந்தது என்றால் அது மிகையல்ல.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.