ETV Bharat / health

கொளுத்தும் வெப்பம்; செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும் என்ன? - HEAT WAVE SAFETY TIPS

தமிழ்நாட்டில் வெப்ப நிலை அதிகரித்து வருவதால் காபி மற்றும் செயற்கை குளிர்பானங்களை அருந்துவதை தவிர்க்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty images)
author img

By ETV Bharat Health Team

Published : March 24, 2025 at 11:46 AM IST

Updated : March 24, 2025 at 1:57 PM IST

1 Min Read

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக தமிழகத்தில் வரும் நாட்களில் 4 டிகிரி செல்சியல் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் உயர் வெப்ப நிலையிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பின்வரும் நடவடிக்கைகளை கடைப்பிடிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

வெப்பம் சார்ந்த நோய்களுக்கான அறிகுறிகள்:

  • சூடான, வறட்சியான சிவந்த சருமம்
  • உடல் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸிற்கு அதிகமாக இருப்பது அல்லது 104 டிகிரி பாரன்ஹீட் இருப்பது
  • குமட்டல் மற்றும் வாந்தி
  • கடுமையான தலைவலி
  • சோர்வு மற்றும் கால் பிடிப்பு
  • மூச்சு திணறல், நெஞ்சு படபடப்பு
  • தலைசுற்றல், மயக்கம், பதற்றம்

என்ன செய்வது?

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty images)
  • அடிக்கடி தண்ணீர் அருந்தவும்
  • வெப்ப அலைகளில் இருந்து பாதுகாக்க குடைகள் தொப்பிகள் பயன்படுத்தவும்
  • நேரடி சூரிய ஒளியை தவிர்க்கவும்
  • நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வீட்டிற்குள்ளேயே இருக்கவும்
  • நிழலான பகுதியில் இருக்கவும். ஓய்வு எடுக்கவும்
  • குளிர்ந்த நீரில் குளிக்கவும்

மோசமான நிலை என்ன?:

  • ஒரு மணி நேரத்திற்கு மேலாக கால் சதைப்பிடிப்பு நீடிப்பது
  • மயக்க நிலை
  • உடல் வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸிற்கு அதிகமாக இருப்பது
இதையும் படிங்க: உயிரிழப்பை ஏற்படுத்தும் 'ஹீட் ஸ்ட்ரோக்'; தற்காத்துக் கொள்ள என்ன வழி?

செயக்கூடாதவை?:

  • நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும்
  • நண்பகலில் சமைப்பதை தவிர்க்கவும்
  • செயற்கை குளிர் பானங்கள், காபி, டீ, மது அருந்துவதை தவிர்க்கவும்
  • வெயில் காலங்களில் காலணிகள் இல்லாமல் வெறும் காலில் நடப்பதை தவிர்க்கவும்
  • மதிய வேளையில் நிறுத்தப்பட்ட வாகனங்களில் குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளை விட்டுச் செல்வதை தவிர்க்கவும்

வெயிலில் இருந்து தற்காக்க என்ன செய்வது?:

  • காபி மற்றும் செயற்கை குளிர்பானங்களை அருந்துவதை தவிர்க்கவும்
  • அதிக புரதச்சத்து உணவு மற்றும் காலாவதியான உணவுகளை தவிர்க்கவும்
  • நண்பகலில் கடுமையான பணிகள் செய்வதை தவிர்க்கவும்

கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எவ்வாறு உதவலாம்?:

  • பாதிக்கப்பட்ட நபரை குளிர்ந்த நிழல் உள்ள காற்றோட்டமான இடத்தில் படுக்க வைக்கவும்
  • பாதிக்கப்பட்டவரின் உடைகளின் மேல் குளிர்ந்த நீரை ஊற்றவும்
  • குளிர்ந்த குடிநீரை பருக வழங்கவும்
  • வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு விசிறி விடவும்
  • பாதிக்கப்பட்ட இடத்தில் ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்கவும்.
இதையும் படிங்க: அதிகரிக்கும் வெப்பம்; 12 மணி முதல் 3 மணி வரை வெளியே வராதீங்க! சுகாதாரத்துறை அட்வைஸ்!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக தமிழகத்தில் வரும் நாட்களில் 4 டிகிரி செல்சியல் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் உயர் வெப்ப நிலையிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பின்வரும் நடவடிக்கைகளை கடைப்பிடிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

வெப்பம் சார்ந்த நோய்களுக்கான அறிகுறிகள்:

  • சூடான, வறட்சியான சிவந்த சருமம்
  • உடல் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸிற்கு அதிகமாக இருப்பது அல்லது 104 டிகிரி பாரன்ஹீட் இருப்பது
  • குமட்டல் மற்றும் வாந்தி
  • கடுமையான தலைவலி
  • சோர்வு மற்றும் கால் பிடிப்பு
  • மூச்சு திணறல், நெஞ்சு படபடப்பு
  • தலைசுற்றல், மயக்கம், பதற்றம்

என்ன செய்வது?

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty images)
  • அடிக்கடி தண்ணீர் அருந்தவும்
  • வெப்ப அலைகளில் இருந்து பாதுகாக்க குடைகள் தொப்பிகள் பயன்படுத்தவும்
  • நேரடி சூரிய ஒளியை தவிர்க்கவும்
  • நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வீட்டிற்குள்ளேயே இருக்கவும்
  • நிழலான பகுதியில் இருக்கவும். ஓய்வு எடுக்கவும்
  • குளிர்ந்த நீரில் குளிக்கவும்

மோசமான நிலை என்ன?:

  • ஒரு மணி நேரத்திற்கு மேலாக கால் சதைப்பிடிப்பு நீடிப்பது
  • மயக்க நிலை
  • உடல் வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸிற்கு அதிகமாக இருப்பது
இதையும் படிங்க: உயிரிழப்பை ஏற்படுத்தும் 'ஹீட் ஸ்ட்ரோக்'; தற்காத்துக் கொள்ள என்ன வழி?

செயக்கூடாதவை?:

  • நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும்
  • நண்பகலில் சமைப்பதை தவிர்க்கவும்
  • செயற்கை குளிர் பானங்கள், காபி, டீ, மது அருந்துவதை தவிர்க்கவும்
  • வெயில் காலங்களில் காலணிகள் இல்லாமல் வெறும் காலில் நடப்பதை தவிர்க்கவும்
  • மதிய வேளையில் நிறுத்தப்பட்ட வாகனங்களில் குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளை விட்டுச் செல்வதை தவிர்க்கவும்

வெயிலில் இருந்து தற்காக்க என்ன செய்வது?:

  • காபி மற்றும் செயற்கை குளிர்பானங்களை அருந்துவதை தவிர்க்கவும்
  • அதிக புரதச்சத்து உணவு மற்றும் காலாவதியான உணவுகளை தவிர்க்கவும்
  • நண்பகலில் கடுமையான பணிகள் செய்வதை தவிர்க்கவும்

கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எவ்வாறு உதவலாம்?:

  • பாதிக்கப்பட்ட நபரை குளிர்ந்த நிழல் உள்ள காற்றோட்டமான இடத்தில் படுக்க வைக்கவும்
  • பாதிக்கப்பட்டவரின் உடைகளின் மேல் குளிர்ந்த நீரை ஊற்றவும்
  • குளிர்ந்த குடிநீரை பருக வழங்கவும்
  • வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு விசிறி விடவும்
  • பாதிக்கப்பட்ட இடத்தில் ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்கவும்.
இதையும் படிங்க: அதிகரிக்கும் வெப்பம்; 12 மணி முதல் 3 மணி வரை வெளியே வராதீங்க! சுகாதாரத்துறை அட்வைஸ்!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

Last Updated : March 24, 2025 at 1:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.