ETV Bharat / health

''ஓஆர்எஸ் குடிப்பவரா நீங்கள்?" - தமிழ்நாடு சுகாதாரத்துறை சொல்வதை அவசியம் படிங்க! - ORS

பொது மக்கள் 'ஓஆர்எஸ்' எனப்படும் உப்பு சர்க்கரை கரைசல் குடிப்பது தொடர்பாக தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

பிரதிநிதித்துவ படம்
பிரதிநிதித்துவ படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 29, 2025 at 9:57 PM IST

2 Min Read

சென்னை: சென்னை சந்தையில் வணிக ரீதியில் பல்வேறு பெயர்களில் விற்பனை செய்யப்படும் திரவ உப்பு சர்க்கரை கரைசல் (Liquid form of ORS) அல்லது நீர்ச்சத்து பானங்கள் ஆற்றல் மேம்படுத்தக்கூடிய திரவங்களாக மட்டுமே பயன்படுகிறது என்றும் இதை பருகுவதால் மருத்துவ ரீதியாக வயிற்றுப்போக்கினால் ஏற்படும் நீரிழப்பை சரி செய்ய இயலாது என்றும், தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''உப்பு சர்க்கரை கரைசல் (ORS) வயிற்றுப்போக்கு நோய்களுக்கான சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கிறது. வயிற்றுப்போக்கினால் உடலில் இருந்து நீர்ச்சத்து மற்றும் அத்தியாவசிய உப்புகள் (electrolyte) கணிசமாக இழக்க நேரிடுகிறது.

வயிற்றுப்போக்கிற்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் கடுமையான நீரிழப்பு மற்றும் மரணம் கூட ஏற்படலாம். உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) அங்கீகரிக்கப்பட்ட உப்பு சர்க்கரை பொட்டலம் (ORS Powder) பயன்படுத்துவதன் மூலம் வயிற்றுப்போக்கினால் ஏற்படும் நீரிழப்பை தவிர்க்க முடியும்.

உப்பு சர்க்கரை கரைசல் தயாரிக்கும் முறை:

ஒரு உப்பு சர்க்கரை பொட்டலத்தின் மொத்த எடையில் (20.5 கிராம்) 2.6 கிராம் சோடியம் குளோரைடு, 13.5 கிராம் குளுக்கோஸ், 1.5 கிராம் பொட்டாசியம் குளோரைடு மற்றும் 2.9 கிராம் ட்ரைசோடியம் சிட்ரேட் ஆகியவை உள்ளன. இந்த உப்பு சர்க்கரை கரைசல் (ORS) பொட்டலங்கள் பொடி வடிவில் (Powder formulation) வழங்கப்படுகின்றன. இதை ஒரு லிட்டர் நன்கு கொதிக்க வைத்து ஆறிய நீரில் கரைக்க வேண்டும். கரைக்கப்பட்ட உப்பு சர்க்கரை கரைசலை (ORS) 24 மணி நேரத்திற்குள் பருக வேண்டும்.

இந்த நிலையில் திரவ உப்பு சர்க்கரை கரைசல் (Liquid form of ORS) என்று சந்தையில் வணிக ரீதியில் பல்வேறு பெயர்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த திரவ உப்பு சர்க்கரை கரைசல் (Liquid form of ORS) அல்லது நீர்ச்சத்து பானங்கள் என்று பெரும்பாலும் சந்தையில் விளம்பரப்படுத்தப்படும் பானங்கள் ஆற்றல் மேம்படுத்தக்கூடிய திரவங்களாக மட்டுமே பயன்படுகிறது.

இந்த விதமான பானங்களை பருகுவதால் மருத்துவ ரீதியாக வயிற்றுப்போக்கினால் ஏற்படும் நீரிழப்பை சரி செய்ய இயலாது. இந்த தயாரிப்புகளில் பொதுவாக தாது உப்புக்கள், குளுக்கோஸ் மற்றும் அதன் அளவுகள் உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவுறுத்தும் நிலையில் இல்லை. மேலும், இது வயிற்றுப்போக்கை அதிகப்படுத்தவும், நீரிழப்பை அதிகரிக்கவும் செய்யும்.

இதையும் படிங்க: ''அவருக்கு வேற வேலையே இல்லை" - முதல்வர் ஸ்டாலின் யாரை சொன்னார் தெரியுமா?

உலக சுகாதார நிறுவனம் (WHO) அங்கீகரித்துள்ள உப்பு சர்க்கரை கரைசல் (ORS) பொட்டலங்கள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் மற்றும் விற்பனைக்காக மருந்தகம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கின்றன. எந்தவொரு உப்பு சர்க்கரை பொட்டலங்களை (ORS) பயன்படுத்துவதற்கு முன்பாக அதன் உட்பொருட்கள் உலக சுகாதார நிறுவனம் (WHO) தரநிலைகளுக்கு இணங்குவதாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

எனவே பொது மக்கள் உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரைத்து உள்ள உப்பு சர்க்கரை கரைசல் (ORS) பொட்டலங்களை மட்டுமே பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏதேனும் விபரங்கள் தேவைப்படின் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகள் மற்றும் 104 இலவச தொலைபேசியை தொடர்பு கொள்ளலாம்.'' என, தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் இணைப்பு
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் இணைப்பு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

சென்னை: சென்னை சந்தையில் வணிக ரீதியில் பல்வேறு பெயர்களில் விற்பனை செய்யப்படும் திரவ உப்பு சர்க்கரை கரைசல் (Liquid form of ORS) அல்லது நீர்ச்சத்து பானங்கள் ஆற்றல் மேம்படுத்தக்கூடிய திரவங்களாக மட்டுமே பயன்படுகிறது என்றும் இதை பருகுவதால் மருத்துவ ரீதியாக வயிற்றுப்போக்கினால் ஏற்படும் நீரிழப்பை சரி செய்ய இயலாது என்றும், தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''உப்பு சர்க்கரை கரைசல் (ORS) வயிற்றுப்போக்கு நோய்களுக்கான சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கிறது. வயிற்றுப்போக்கினால் உடலில் இருந்து நீர்ச்சத்து மற்றும் அத்தியாவசிய உப்புகள் (electrolyte) கணிசமாக இழக்க நேரிடுகிறது.

வயிற்றுப்போக்கிற்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் கடுமையான நீரிழப்பு மற்றும் மரணம் கூட ஏற்படலாம். உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) அங்கீகரிக்கப்பட்ட உப்பு சர்க்கரை பொட்டலம் (ORS Powder) பயன்படுத்துவதன் மூலம் வயிற்றுப்போக்கினால் ஏற்படும் நீரிழப்பை தவிர்க்க முடியும்.

உப்பு சர்க்கரை கரைசல் தயாரிக்கும் முறை:

ஒரு உப்பு சர்க்கரை பொட்டலத்தின் மொத்த எடையில் (20.5 கிராம்) 2.6 கிராம் சோடியம் குளோரைடு, 13.5 கிராம் குளுக்கோஸ், 1.5 கிராம் பொட்டாசியம் குளோரைடு மற்றும் 2.9 கிராம் ட்ரைசோடியம் சிட்ரேட் ஆகியவை உள்ளன. இந்த உப்பு சர்க்கரை கரைசல் (ORS) பொட்டலங்கள் பொடி வடிவில் (Powder formulation) வழங்கப்படுகின்றன. இதை ஒரு லிட்டர் நன்கு கொதிக்க வைத்து ஆறிய நீரில் கரைக்க வேண்டும். கரைக்கப்பட்ட உப்பு சர்க்கரை கரைசலை (ORS) 24 மணி நேரத்திற்குள் பருக வேண்டும்.

இந்த நிலையில் திரவ உப்பு சர்க்கரை கரைசல் (Liquid form of ORS) என்று சந்தையில் வணிக ரீதியில் பல்வேறு பெயர்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த திரவ உப்பு சர்க்கரை கரைசல் (Liquid form of ORS) அல்லது நீர்ச்சத்து பானங்கள் என்று பெரும்பாலும் சந்தையில் விளம்பரப்படுத்தப்படும் பானங்கள் ஆற்றல் மேம்படுத்தக்கூடிய திரவங்களாக மட்டுமே பயன்படுகிறது.

இந்த விதமான பானங்களை பருகுவதால் மருத்துவ ரீதியாக வயிற்றுப்போக்கினால் ஏற்படும் நீரிழப்பை சரி செய்ய இயலாது. இந்த தயாரிப்புகளில் பொதுவாக தாது உப்புக்கள், குளுக்கோஸ் மற்றும் அதன் அளவுகள் உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவுறுத்தும் நிலையில் இல்லை. மேலும், இது வயிற்றுப்போக்கை அதிகப்படுத்தவும், நீரிழப்பை அதிகரிக்கவும் செய்யும்.

இதையும் படிங்க: ''அவருக்கு வேற வேலையே இல்லை" - முதல்வர் ஸ்டாலின் யாரை சொன்னார் தெரியுமா?

உலக சுகாதார நிறுவனம் (WHO) அங்கீகரித்துள்ள உப்பு சர்க்கரை கரைசல் (ORS) பொட்டலங்கள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் மற்றும் விற்பனைக்காக மருந்தகம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கின்றன. எந்தவொரு உப்பு சர்க்கரை பொட்டலங்களை (ORS) பயன்படுத்துவதற்கு முன்பாக அதன் உட்பொருட்கள் உலக சுகாதார நிறுவனம் (WHO) தரநிலைகளுக்கு இணங்குவதாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

எனவே பொது மக்கள் உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரைத்து உள்ள உப்பு சர்க்கரை கரைசல் (ORS) பொட்டலங்களை மட்டுமே பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏதேனும் விபரங்கள் தேவைப்படின் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகள் மற்றும் 104 இலவச தொலைபேசியை தொடர்பு கொள்ளலாம்.'' என, தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் இணைப்பு
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் இணைப்பு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.