திருநெல்வேலி: நடிகர்கள் தம்பி ராமையா, அப்புகுட்டி, ஆனந்த் பாண்டி உள்ளிட்டோர் நடித்த ’யாதும் அறியான்’ திரைப்படத்தின் போஸ்டர் திருநெவேலியில் வெளியிடப்பட்டது. இப்படத்தில் திருநெல்வேலியை சேர்ந்த தினேஷ் என்பவர் புதுமுக நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார் இந்த படத்தில் நாயகியாக பிராண நடித்திருக்கிறார்.
இந்த படத்தை இயக்குனர் எம் கோபி இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தி இதுவரை யாரும் பார்க்காத புதிய யுக்தி கையாளப்பட்டுள்ளது. படம் முழுவதும் 5 கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் திலநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை குரு பிலிம்ஸ் உரிமையாளரும் பிரபல திரைப்பட விநியோகஸ்தருமான விவேகானந்தர் வெளியிட நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து படத்தின் கதாநாயகன் இயக்குனர் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் இணைந்து கேக் வெட்டி புதிய பஸ் லுக் போஸ்டர் வெளியீட்டை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவரும் முன்னாள் நெல்லை சட்டமன்ற உறுப்பினர் மாலை ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.