சென்னை: இந்திய திரையுலகம் மொத்தத்தையும் திரும்பி பார்க்க வைத்தது மட்டுமல்லாமல், ‘பாகுபலியை கட்டப்பா எதற்காக கொன்றார்?’ என்ற ஒற்றை கேள்வியால் பார்வையாளர்கள் அனைவரையும் கட்டிப் போட்ட திரைப்படம் ’பாகுபலி’. இரண்டு பாகங்களாக வெளியான இத்திரைப்படம் தான், இப்போது இருக்கக்கூடிய பான் இந்திய திரைப்பட கலச்சாரத்திற்கு புள்ளி வைத்து தொடங்கியது.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ரண, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் மற்றும் தமன்னா என பலரும் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். 2015ஆம் ஆண்டு பாகுபலி திரைப்படத்தின் முதல் பாகமும் 2017ஆம் ஆண்டு பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.
And on this special day, I am thrilled to inform you all that we are planning an Indian and international re-release of @BaahubaliMovie in October this year. It won't just be a re-release, it will be a year of celebration for our beloved fans! Expect nostalgia, new reveals, and… https://t.co/9q5e2haQ6r
— Shobu Yarlagadda (@Shobu_) April 28, 2025
இந்திய சினிமாவை உலகளவில் கொண்டு சேர்த்த திரைப்படமாக பாகுபலி மாறியது. இத்தகைய பெருமைகள் அடங்கிய பாகுபலி திரைப்படம், வருகிற அக்டோபரில் பிரமாண்டமாக மறுவெளியீடு செய்யப்பட இருப்பதாக அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஷோபி யர்லகட்டா (Shobu Yarlagadda) நேற்று (ஏப்ரல் 28) அறிவித்துள்ளார்.
பாகுபலி முதல் பாகம் வெளியாகி பத்து ஆண்டுகள் நிறைவடைய இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்ததுள்ளது. மறுவெளியீடு குறித்து ஷோபி யர்லகட்டா பதிவில், “இந்திய மற்றும் சர்வதேச அளவில் பாகுபலி திரைப்படத்தின் மறுவெளியீட்டை நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த ஆண்டு வருகிற அக்டோபர் மாதம் பாகுபலி மறுவெளியீடு செய்யப்படவிருக்கிறது. இது வெறும் மறுவெளியீடாக இருக்காது, அன்பான ரசிகர்களுக்கான கொண்டாட்டமாக இருக்கும். நாஸ்டால்ஜியாவுடன் சில அற்புதமான ஆச்சரியங்களும் காத்திருக்கின்றன” என தெரிவித்துள்ளார்.
Baahubali is coming back to the BIG SCREENS….
— Arka Mediaworks (@arkamediaworks) April 28, 2025
This October, let’s celebrate even bigger! #BaahubaliReturns
Jai Maahishmathi…. ✊🏻 pic.twitter.com/4dCbcHKuse
இதையும் படிங்க: வாழ்த்துகளுக்கு மத்தியில் பெஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பத்ம பூஷன் அஜித்!
முதல் பாகமான ‘பாகுபலி: தி பிகினிங்’ கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகமான ’பாகுபலி: தி கன்க்லுஷன்’ அதுவரை இருந்த சாதனைகளையும் முறியடித்து, உலகளவில் சுமார் 1,800 கோடி ரூபாய் வரை வசூலித்தது.
வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் இரண்டு பாகங்களுமே தேசிய விருதுகளையும் வென்றன. அக்டோபரில் ரீ ரிலீஸாக இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கின்றனர். தமிழ்நாட்டில் ஏற்கனவே நிறைய திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. மக்களும் அதற்கான ஆதரவை கொடுத்து வருகின்றனர் சமீபத்தில் கூட விஜய்யின் ’சச்சின்’ திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.