ETV Bharat / entertainment

சாய் சுதர்சன் ஆட்டத்தை புகழ்ந்து தள்ளிய சிவகார்த்திகேயன்! - SK WISHES SAI SUDHARSHAN

Sivakarthikeyan congaratulate Sai Sudharshan: நடிகர் சிவகார்த்திகேயன் கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன், கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன்
நடிகர் சிவகார்த்திகேயன், கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் (@Siva_Kartikeyan X Account, ANI)
author img

By ETV Bharat Entertainment Team

Published : April 22, 2025 at 1:43 PM IST

Updated : April 22, 2025 at 4:52 PM IST

1 Min Read

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸின் ’மதராஸி’, சுதா கொங்கராவின் ’பராசக்தி’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். ’மதராஸி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் 39-வது போட்டி நேற்று (ஏப்ரல் 21) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகள் இடையே நடைபெற்றது. இதில் முதலாவதாக பேட் செய்த குஜராத் அணி 198 ரன்கள் குவித்தது. இதற்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சாய் சுதர்சனின் அரை சதமும் சுப்மன் கில்லின் 90 ரன்களும் மிக முக்கியமாக உதவி செய்தது.

அடுத்ததாக ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 159 ரன்கள் மட்டுமே சேர்த்து 39 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைத் தக்க வைத்துள்ளது குஜராத் டைட்டன்ஸ். நேற்றையப் போட்டியில் குஜராத் அணி வீரர் சாய் சுதர்சன் இந்த தொடரில் தனது ஐந்தாவது அரை சதத்தை நிறைவு செய்தார்.

இதன் மூலம் இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவிக்கும் வீரருக்கான ஆரஞ்சு கேப் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். மேலும் இந்த தொடரில் முதல் முறையாக 400 ரன்களைத் தாண்டிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன்பு லக்னோ அணியின் நிக்கோலஸ் பூரான் 368 ரன்கள் உடன் முன்னிலை வகித்து வந்தார்.

இதையும் படிங்க: அறிவிப்பில்லாமல் அடுத்தடுத்து வீடியோ பாடல்களை வெளியிட்ட அஜித்தின் ’குட் பேட் அக்லி’ படக்குகு!

சாய் சுதர்சனின் இத்தகைய சிறப்பான ஆட்டத்திற்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தளத்தில் சாய் சுதர்சனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், “நீங்கள் விளையாடும் விதம் மிகவும் பிடித்திருக்கிறது. தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள். உங்களது திறமையை இந்திய அணியின் ஜெர்சியில் பார்க்க ஆவலாக உள்ளேன்” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த சாய் சுதர்சன் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அணிக்காக ஆடி வருகிறார். அதன்பிறகு 2022ஆம் ஆண்டு முதல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி வருகிறார் சாய் சுதர்சன்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸின் ’மதராஸி’, சுதா கொங்கராவின் ’பராசக்தி’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். ’மதராஸி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் 39-வது போட்டி நேற்று (ஏப்ரல் 21) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகள் இடையே நடைபெற்றது. இதில் முதலாவதாக பேட் செய்த குஜராத் அணி 198 ரன்கள் குவித்தது. இதற்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சாய் சுதர்சனின் அரை சதமும் சுப்மன் கில்லின் 90 ரன்களும் மிக முக்கியமாக உதவி செய்தது.

அடுத்ததாக ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 159 ரன்கள் மட்டுமே சேர்த்து 39 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைத் தக்க வைத்துள்ளது குஜராத் டைட்டன்ஸ். நேற்றையப் போட்டியில் குஜராத் அணி வீரர் சாய் சுதர்சன் இந்த தொடரில் தனது ஐந்தாவது அரை சதத்தை நிறைவு செய்தார்.

இதன் மூலம் இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவிக்கும் வீரருக்கான ஆரஞ்சு கேப் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். மேலும் இந்த தொடரில் முதல் முறையாக 400 ரன்களைத் தாண்டிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன்பு லக்னோ அணியின் நிக்கோலஸ் பூரான் 368 ரன்கள் உடன் முன்னிலை வகித்து வந்தார்.

இதையும் படிங்க: அறிவிப்பில்லாமல் அடுத்தடுத்து வீடியோ பாடல்களை வெளியிட்ட அஜித்தின் ’குட் பேட் அக்லி’ படக்குகு!

சாய் சுதர்சனின் இத்தகைய சிறப்பான ஆட்டத்திற்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தளத்தில் சாய் சுதர்சனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், “நீங்கள் விளையாடும் விதம் மிகவும் பிடித்திருக்கிறது. தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள். உங்களது திறமையை இந்திய அணியின் ஜெர்சியில் பார்க்க ஆவலாக உள்ளேன்” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த சாய் சுதர்சன் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அணிக்காக ஆடி வருகிறார். அதன்பிறகு 2022ஆம் ஆண்டு முதல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி வருகிறார் சாய் சுதர்சன்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

Last Updated : April 22, 2025 at 4:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.