ETV Bharat / entertainment

பிரசாந்த் நீல் - ஜூனியர் என்டிஆர் கூட்டணியின் பிரம்மாண்ட அப்டேட்! - NTR NEEL MOVIE RELEASE DATE

NTR Neel Movie Release Date Announced: பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இயக்குநர் பிரசாந்த் நீல் மற்றும் நடிகர் ஜூனியர் என்டிஆர்
இயக்குநர் பிரசாந்த் நீல் மற்றும் நடிகர் ஜூனியர் என்டிஆர் (@NTRNeelFilm X Account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : April 29, 2025 at 4:31 PM IST

1 Min Read

சென்னை: இந்திய திரையுலகையே பாக்ஸ் ஆபிஸில் அதிர்வலைகளை ஏற்படுத்திய திரைப்படம் ’கே.ஜி.எஃப்’. இரண்டு பாகங்களாக வெளிவந்த இந்த கன்னட திரைப்படத்தை இயக்கிய பிரசாந்த் நீல், அதன் பிறகு இந்தியா முழுக்க தேடப்படும் இயக்குநராக மாறினார். தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கக்கூடிய படத்தை இயக்கி வருகிறார் பிரசாந்த் நீல்.

தற்காலிகமாக இப்படத்திற்கு ’என்.டி.ஆர் நீல்’ (NTR Neel) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் குறித்த அறிவிப்பு கடந்த 2022ஆம் ஆண்டு வெளியானது. அப்போதிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் பிரம்மாண்டமாக தொடங்கியது. இது தொடர்பான போட்டோ ஒன்றை படக்குழுவினர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.

ஏறக்குறைய ஒன்றரை வருடங்கள் கழித்து ஒரு படத்தை இயக்குகிறார் பிரசாந்த் நீல். கடந்த வாரத்திலிருந்து ஜூனியர் என்.டி.ஆர் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார். தற்போது விறுவிறுப்பாகப் படப்பிடிப்பு நடைபெற்று வரும் இந்த படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

பிரசாந்த் நீல் பாணியில் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி வரும் இத்திரைப்படம், உலகம் முழுவதும் திரையரங்குகளில் 2026ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர். ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் ருக்மணி வசந்த், டொவினோ தாமஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை இன்னும் படக்குழு அறிவிக்கவில்லை.

இதையும் படிங்க: தெலுங்கு திரையுலகிலும் உருவாகும் ரீ-ரிலீஸ் கலாச்சாரம்... மீண்டும் திரைக்கு வரும் ’பாகுபலி’!

அதேபோன்று இப்படத்தின் தலைப்பிற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் முதல் அறிவிப்பை வெளியிட்ட போதும் தற்போது படப்பிடிப்பு போட்டோவிலும் மண் குறித்த வாசகங்கள் இடம்பெற்று கொண்டிருக்கின்றன. மண்ணில் சிந்தும் இரத்தம் வன்முறை என இந்த படமும் பிரசாந்த் நீலின் தனித்துவ பாணியில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் பீரியட் மூவியாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தப் படத்தினை முடித்துவிட்டு தான் ‘சலார் 2’ படத்தை இயக்கவுள்ளார் பிரசாந்த் நீல் என தெரியவருகிறது. இதற்கு முன்னதாக ஜூனியர் என்.டி.ஆர் நடித்த ’தேவரா' கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

சென்னை: இந்திய திரையுலகையே பாக்ஸ் ஆபிஸில் அதிர்வலைகளை ஏற்படுத்திய திரைப்படம் ’கே.ஜி.எஃப்’. இரண்டு பாகங்களாக வெளிவந்த இந்த கன்னட திரைப்படத்தை இயக்கிய பிரசாந்த் நீல், அதன் பிறகு இந்தியா முழுக்க தேடப்படும் இயக்குநராக மாறினார். தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கக்கூடிய படத்தை இயக்கி வருகிறார் பிரசாந்த் நீல்.

தற்காலிகமாக இப்படத்திற்கு ’என்.டி.ஆர் நீல்’ (NTR Neel) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் குறித்த அறிவிப்பு கடந்த 2022ஆம் ஆண்டு வெளியானது. அப்போதிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் பிரம்மாண்டமாக தொடங்கியது. இது தொடர்பான போட்டோ ஒன்றை படக்குழுவினர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.

ஏறக்குறைய ஒன்றரை வருடங்கள் கழித்து ஒரு படத்தை இயக்குகிறார் பிரசாந்த் நீல். கடந்த வாரத்திலிருந்து ஜூனியர் என்.டி.ஆர் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார். தற்போது விறுவிறுப்பாகப் படப்பிடிப்பு நடைபெற்று வரும் இந்த படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

பிரசாந்த் நீல் பாணியில் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி வரும் இத்திரைப்படம், உலகம் முழுவதும் திரையரங்குகளில் 2026ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர். ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் ருக்மணி வசந்த், டொவினோ தாமஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை இன்னும் படக்குழு அறிவிக்கவில்லை.

இதையும் படிங்க: தெலுங்கு திரையுலகிலும் உருவாகும் ரீ-ரிலீஸ் கலாச்சாரம்... மீண்டும் திரைக்கு வரும் ’பாகுபலி’!

அதேபோன்று இப்படத்தின் தலைப்பிற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் முதல் அறிவிப்பை வெளியிட்ட போதும் தற்போது படப்பிடிப்பு போட்டோவிலும் மண் குறித்த வாசகங்கள் இடம்பெற்று கொண்டிருக்கின்றன. மண்ணில் சிந்தும் இரத்தம் வன்முறை என இந்த படமும் பிரசாந்த் நீலின் தனித்துவ பாணியில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் பீரியட் மூவியாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தப் படத்தினை முடித்துவிட்டு தான் ‘சலார் 2’ படத்தை இயக்கவுள்ளார் பிரசாந்த் நீல் என தெரியவருகிறது. இதற்கு முன்னதாக ஜூனியர் என்.டி.ஆர் நடித்த ’தேவரா' கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.