ETV Bharat / entertainment

”திறமையான பாடகர்கள் இருக்கும்போது எதற்கு ஏஐ பாடகர்கள்”... ஹாரிஸ் ஜெயராஜ் பேச்சு! - HARRIS JAYARAJ MUSIC CONCERT

HARRIS JAYARAJ MUSIC CONCERT: சேலத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் இசை நிகழ்ச்சி ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : April 12, 2025 at 5:36 PM IST

3 Min Read

சேலம்: தமிழ் சினிமாவில் உள்ள இசையமைப்பாளர்கள் பலரும் இசை நிகழ்ச்சி நடத்துவது கடந்த சில ஆண்டுகளாக ட்ரெண்டாக மாறி வருகிறது. சென்னை, கோவை போன்ற நகரங்களில் மட்டுமே இசை நிகழ்ச்சி நடைபெற்று வந்த நிலையில் அடுத்த கட்ட நகரங்களிலும் இசை நிகழ்ச்சிகள் நடக்க ஆரம்பித்துள்ளன.

அந்த வரிசையில் சேலம் 3 ரோடு சந்திப்பு பகுதியில் வருகின்ற 13ஆம் தேதி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்சி தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், “300 ஸ்பீக்கர்களை வைத்து இந்த இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளோம்.

மூன்று நான்கு கிலோ மீட்டருக்கு பாடலை கேட்கலாம். டிக்கெட் வாங்கியும் வாங்காமலும் இந்த இசை நிகழ்ச்சியை பார்க்கலாம். இந்த நிகழ்ச்சிகள் எங்கள் பாடகர்கள் பாடிக்கொண்டே நடனமாடவும் இருக்கிறார்கள். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் போன்ற நகரங்களில் நடக்கூடிய நிகழ்ச்சிகளைப் போல இங்கும் செய்கிறோம்.

இந்த இசை நிகழ்ச்சியில் மொத்தமாக 32 பாடல்கள் வரை பாடவிருக்கிறோம். 120 ஹிட் பாடல்களில் இருந்து இந்த 32 பாடல்களை தேர்ந்தெடுத்துள்ளோம். மொத்தம் மூன்று மணி நேரம் இசை நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் பேச்சே இருக்காது. இசை மட்டும் தான். அடுத்தடுத்து தொடர்ந்து பாடல்கள் இடம்பெறும்.

1950, 60 காலகட்டங்களில் சேலம் தான் சினிமா நகரமாக இருந்தது. அதன் பின்னர் தான் சினிமா சென்னைக்கு சென்றது. அப்படிப்பட்ட சரித்திர புகழ்பெற்ற சேலத்தில் இசை நிகழ்ச்சி நடத்துவது தனக்கு பெருமையாக உள்ளது” என்று பேசினார்.

சமூக வலைதளங்களில் இசையமைத்து பிரபலமாவதை குறித்த கேள்விக்கு, ”சினிமாவில் வாய்ப்பு தேடி கிடைத்தால் மட்டுமே இசையமைக்க முடியும் என்ற நிலை மாறி, இப்போது எங்கு இருந்தாலும் திறமை இருந்தால் பாடல்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு புகழ் பெறலாம் என்பது அருமையான ஒரு முன்னேற்றம்” என பதிலளித்தார்.

மேலும் அவர், “இந்த இசை நிகழ்ச்சியை பார்த்து பத்து பேர் இசைக் கலைஞர்கல் உருவானால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். நானும் சிறிய வயதில் இசை நிகழ்ச்சிக்கு சென்று அதை பார்த்த தான் இசையமைப்பாளராக மாறியுள்ளேன். அதனால்தான் இன்று இசையமைப்பாளராக உங்கள் முன் அமர்ந்திருக்கிறேன்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இசை நிகழ்ச்சியை பார்த்த ஒருவர் இசையமைப்பாளராக உருவெடுத்தால் மகிழ்ச்சி. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு படிப்பை மட்டும் சொல்லிக் கொடுக்காமல் இது போன்ற இன்ஸ்பிரேஷனையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்” என்று பேசினார்.

இளையராஜாவிற்கு அரசு விழா எடுப்பது குறித்த கேள்விக்கு, ”இசையமைப்பாளராக மிகவும் பெருமையாக மகிழ்ச்சியாக உள்ளது. எல்லா இசையமைப்பாளருக்கும் சந்தோசமாக இருக்கும். ஒரு மூத்த இசையமைப்பாளருக்கு அங்கீகாரம் கிடைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. புகழப்பட வேண்டும். அதுவும் கலைஞர்க நம்முடன் இருக்கும்போதே புகழப்பட வேண்டும்” என பதிலளித்தார்.

மேலும், “வாழ்க்கை என்பது சுவாரசியமான பரிசு. அந்த நிகழ்வு நடக்கும் போது அது நடக்கும். ஆயிரக்கணக்கான மக்களை பார்ப்பது என்பது பல்வேறு விருதுகளை விட பெரியது. நீங்களே இசை நிகழ்ச்சியில் அதை பார்ப்பீர்கள். இசைக்கு எந்த மொழியும் கிடையாது.

சமூக வலைதளங்களில் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு மொழியில் உள்ள பாடல்கள் பிரபலமடைகிறது. அது மக்களின் ரசனையை பொறுத்தது. ரசனையை நாம் குறை சொல்ல முடியாது. சமூக வலைதளங்களில் ஹாரிஸ் மாம்ஸ் என்று ரசிகர்கள் அன்பாக அழைப்பது சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறேன்.

எனது மகனிடம் நான்கு இயக்குனர்கள் கதை சொல்லி இருக்கிறார்கள். அது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை. சமீபத்தில் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது அவருடைய தனிப்பட்ட விருப்பம். அவரது பாதையை நாம் மாற்றக்கூடாது. அவரது பாதையில் அழகாக பயணம் செய்து கொண்டிருக்கிறார். அது ரொம்ப பெருமையாக இருக்கிறது” என்று பேசினார்.

ஹாரிஸ் சிம்பொனியின் எப்போது என்ற கேள்விக்கு, ”நான் சினிமாவிற்கு வந்தது ஒரு விபத்து. என்னுடைய 14 வயதிலேயே டிரினிட்டி கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்றேன். சிறிய வயதில் கிளாசிக் கிட்டாரில் எட்டாவது கிரேட் பெற்றேன். ஆசியாவிலேயே இளம் வயதில் இந்த பெருமையை நான் தான் பெற்றுள்ளேன்.

ஆனால் ஒரு சினிமா இசையமைப்பாள்ராக மாறுவேன் என நான் எதிர்பார்க்கவில்லை. நான் எது செய்தாலும் அதை மகிழ்ச்சியாக செய்கிறேன். அனைவரும் நம் செய்யும் வேலையை அனுபவித்து செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் ஏஐ குறித்த கேள்விக்கு, “ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவை நான் இதுவரை பயன்படுத்தவில்லை. பாடகர்கள் யாரும் இல்லை என்றால் அதைப் பற்றி யோசிக்கலாம். பல பாடகர்கள் இங்கே வாய்ப்பு கிடைக்காமல் இருக்கின்றார்கள். திறமையான பாடகர்கள் பலர் இருக்கின்றனர்.

இதையும் படிங்க: பலத்த எதிர்ப்பினால் தள்ளிப்போன ரிலீஸ்... இந்திய மகாத்மாவின் சுயசரிதை திரைப்படம்!

அவர்களை பயன்படுத்தாமல் இறந்த பாடகர்களை ஏன் பயன்படுத்த வேண்டும். அந்த பாடகர்கள் எல்லாம் கொண்டாடப்பட்டு நல்ல இசையை மக்களுக்கு கொடுத்த பின்பே இறந்துள்ளனர். அவர்களது குரலை செயற்கை நுண்ணறிவு மூலமாக கொண்டு வராமல் அவர்களது பிள்ளைகளுக்கு வாய்ப்பு கொடுத்தால் அவர்களே மகிழ்ச்சியாக இருப்பார்கள்” என்றார்.

இறுதியாக அவர், “சினிமாவை விட இசை நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுக்கிறார்கள். கடந்த இரண்டு வருடங்களில் இதை தெரிந்து கொண்டுள்ளேன். உலகளவில் இந்த இசை நிகழ்ச்சிகளை நடத்த ஆசைப்படுகிறேன்” என்று கூறி முடித்தார்.

சேலம்: தமிழ் சினிமாவில் உள்ள இசையமைப்பாளர்கள் பலரும் இசை நிகழ்ச்சி நடத்துவது கடந்த சில ஆண்டுகளாக ட்ரெண்டாக மாறி வருகிறது. சென்னை, கோவை போன்ற நகரங்களில் மட்டுமே இசை நிகழ்ச்சி நடைபெற்று வந்த நிலையில் அடுத்த கட்ட நகரங்களிலும் இசை நிகழ்ச்சிகள் நடக்க ஆரம்பித்துள்ளன.

அந்த வரிசையில் சேலம் 3 ரோடு சந்திப்பு பகுதியில் வருகின்ற 13ஆம் தேதி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்சி தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், “300 ஸ்பீக்கர்களை வைத்து இந்த இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளோம்.

மூன்று நான்கு கிலோ மீட்டருக்கு பாடலை கேட்கலாம். டிக்கெட் வாங்கியும் வாங்காமலும் இந்த இசை நிகழ்ச்சியை பார்க்கலாம். இந்த நிகழ்ச்சிகள் எங்கள் பாடகர்கள் பாடிக்கொண்டே நடனமாடவும் இருக்கிறார்கள். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் போன்ற நகரங்களில் நடக்கூடிய நிகழ்ச்சிகளைப் போல இங்கும் செய்கிறோம்.

இந்த இசை நிகழ்ச்சியில் மொத்தமாக 32 பாடல்கள் வரை பாடவிருக்கிறோம். 120 ஹிட் பாடல்களில் இருந்து இந்த 32 பாடல்களை தேர்ந்தெடுத்துள்ளோம். மொத்தம் மூன்று மணி நேரம் இசை நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் பேச்சே இருக்காது. இசை மட்டும் தான். அடுத்தடுத்து தொடர்ந்து பாடல்கள் இடம்பெறும்.

1950, 60 காலகட்டங்களில் சேலம் தான் சினிமா நகரமாக இருந்தது. அதன் பின்னர் தான் சினிமா சென்னைக்கு சென்றது. அப்படிப்பட்ட சரித்திர புகழ்பெற்ற சேலத்தில் இசை நிகழ்ச்சி நடத்துவது தனக்கு பெருமையாக உள்ளது” என்று பேசினார்.

சமூக வலைதளங்களில் இசையமைத்து பிரபலமாவதை குறித்த கேள்விக்கு, ”சினிமாவில் வாய்ப்பு தேடி கிடைத்தால் மட்டுமே இசையமைக்க முடியும் என்ற நிலை மாறி, இப்போது எங்கு இருந்தாலும் திறமை இருந்தால் பாடல்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு புகழ் பெறலாம் என்பது அருமையான ஒரு முன்னேற்றம்” என பதிலளித்தார்.

மேலும் அவர், “இந்த இசை நிகழ்ச்சியை பார்த்து பத்து பேர் இசைக் கலைஞர்கல் உருவானால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். நானும் சிறிய வயதில் இசை நிகழ்ச்சிக்கு சென்று அதை பார்த்த தான் இசையமைப்பாளராக மாறியுள்ளேன். அதனால்தான் இன்று இசையமைப்பாளராக உங்கள் முன் அமர்ந்திருக்கிறேன்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இசை நிகழ்ச்சியை பார்த்த ஒருவர் இசையமைப்பாளராக உருவெடுத்தால் மகிழ்ச்சி. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு படிப்பை மட்டும் சொல்லிக் கொடுக்காமல் இது போன்ற இன்ஸ்பிரேஷனையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்” என்று பேசினார்.

இளையராஜாவிற்கு அரசு விழா எடுப்பது குறித்த கேள்விக்கு, ”இசையமைப்பாளராக மிகவும் பெருமையாக மகிழ்ச்சியாக உள்ளது. எல்லா இசையமைப்பாளருக்கும் சந்தோசமாக இருக்கும். ஒரு மூத்த இசையமைப்பாளருக்கு அங்கீகாரம் கிடைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. புகழப்பட வேண்டும். அதுவும் கலைஞர்க நம்முடன் இருக்கும்போதே புகழப்பட வேண்டும்” என பதிலளித்தார்.

மேலும், “வாழ்க்கை என்பது சுவாரசியமான பரிசு. அந்த நிகழ்வு நடக்கும் போது அது நடக்கும். ஆயிரக்கணக்கான மக்களை பார்ப்பது என்பது பல்வேறு விருதுகளை விட பெரியது. நீங்களே இசை நிகழ்ச்சியில் அதை பார்ப்பீர்கள். இசைக்கு எந்த மொழியும் கிடையாது.

சமூக வலைதளங்களில் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு மொழியில் உள்ள பாடல்கள் பிரபலமடைகிறது. அது மக்களின் ரசனையை பொறுத்தது. ரசனையை நாம் குறை சொல்ல முடியாது. சமூக வலைதளங்களில் ஹாரிஸ் மாம்ஸ் என்று ரசிகர்கள் அன்பாக அழைப்பது சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறேன்.

எனது மகனிடம் நான்கு இயக்குனர்கள் கதை சொல்லி இருக்கிறார்கள். அது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை. சமீபத்தில் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது அவருடைய தனிப்பட்ட விருப்பம். அவரது பாதையை நாம் மாற்றக்கூடாது. அவரது பாதையில் அழகாக பயணம் செய்து கொண்டிருக்கிறார். அது ரொம்ப பெருமையாக இருக்கிறது” என்று பேசினார்.

ஹாரிஸ் சிம்பொனியின் எப்போது என்ற கேள்விக்கு, ”நான் சினிமாவிற்கு வந்தது ஒரு விபத்து. என்னுடைய 14 வயதிலேயே டிரினிட்டி கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்றேன். சிறிய வயதில் கிளாசிக் கிட்டாரில் எட்டாவது கிரேட் பெற்றேன். ஆசியாவிலேயே இளம் வயதில் இந்த பெருமையை நான் தான் பெற்றுள்ளேன்.

ஆனால் ஒரு சினிமா இசையமைப்பாள்ராக மாறுவேன் என நான் எதிர்பார்க்கவில்லை. நான் எது செய்தாலும் அதை மகிழ்ச்சியாக செய்கிறேன். அனைவரும் நம் செய்யும் வேலையை அனுபவித்து செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் ஏஐ குறித்த கேள்விக்கு, “ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவை நான் இதுவரை பயன்படுத்தவில்லை. பாடகர்கள் யாரும் இல்லை என்றால் அதைப் பற்றி யோசிக்கலாம். பல பாடகர்கள் இங்கே வாய்ப்பு கிடைக்காமல் இருக்கின்றார்கள். திறமையான பாடகர்கள் பலர் இருக்கின்றனர்.

இதையும் படிங்க: பலத்த எதிர்ப்பினால் தள்ளிப்போன ரிலீஸ்... இந்திய மகாத்மாவின் சுயசரிதை திரைப்படம்!

அவர்களை பயன்படுத்தாமல் இறந்த பாடகர்களை ஏன் பயன்படுத்த வேண்டும். அந்த பாடகர்கள் எல்லாம் கொண்டாடப்பட்டு நல்ல இசையை மக்களுக்கு கொடுத்த பின்பே இறந்துள்ளனர். அவர்களது குரலை செயற்கை நுண்ணறிவு மூலமாக கொண்டு வராமல் அவர்களது பிள்ளைகளுக்கு வாய்ப்பு கொடுத்தால் அவர்களே மகிழ்ச்சியாக இருப்பார்கள்” என்றார்.

இறுதியாக அவர், “சினிமாவை விட இசை நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுக்கிறார்கள். கடந்த இரண்டு வருடங்களில் இதை தெரிந்து கொண்டுள்ளேன். உலகளவில் இந்த இசை நிகழ்ச்சிகளை நடத்த ஆசைப்படுகிறேன்” என்று கூறி முடித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.