சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாகவுள்ள 3,935 இடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
2018 முதல் 2025 வரை தொடர்ந்து 8 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப்-4 பணிகளுக்கான அறிவிப்பு தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக, இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), வனக்காவலர், பில் கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், இளநிலை நிர்வாகி, கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாகவுள்ள 3,935 இடங்களை நிரப்புவதற்காக குரூப்-4 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
வி.ஏ.ஓ: 215
இளநிலை உதவியாளர்: 1678
இளநிலை வருவாய் ஆய்வாளர்: 239
இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்: 01
தட்டச்சர் (டைப்பிஸ்ட்) : 1099
வனக்காப்பாளர் : 62
என 25 வகையான பணிகளில் உள்ள 3,935 காலிப்பணியிடங்களை நிரப்ப இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
இன்று முதல் வரும் மே 24ம் தேதி வரை ஆன்லைன் வழியாக இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வு 12.07.2025 காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி: தேர்வு கட்டணங்களை செலுத்த புதிய வசதி அறிமுகம்! |
தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கு https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வளவு தானா? அல்லது டிஎன்பிஎஸ்சி குறைவான இடங்களுக்கு மட்டுமே தற்போதை நிலையில் தேர்வு நடத்துகிறதா என்ற கேள்வியும் அவர்கள் எழுப்பியுள்ளனர்.
தற்போது உள்ள காலிப்பணியிடங்கள் கலந்தாய்விற்கு முன்பாக மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.