ETV Bharat / business

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வு! சென்னையில் விலை எவ்வளவு? - PETROL DIESEL EXCISE DUTY HIKE

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு தலா 2 ரூபாய் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் (ஏப்ரல் 8) அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்
கோப்புப் படம் (PTI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 7, 2025 at 4:02 PM IST

Updated : April 7, 2025 at 4:07 PM IST

1 Min Read

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு தலா 2 ரூபாய் உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரத்தை பொறுத்து பெட்ரோல், டீசல் விலையை பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் அன்றாடம் மாற்றி அமைத்து வருகின்றன. அத்துடன் இந்த எரிபொருட்களின் மேல் பல்வேறு வரிகளையும் மத்திய, மாநில அரசுகள் விதித்து வருகின்றன.

இந்த நிலையில் பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரியை ஒரு லிட்டருக்கு தலா 2 ரூபாய் உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என்றும் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க: தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை; இன்றைய விலை என்ன?

இதையடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை உயரும் என்றும், அதன் விளைவாக காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையில் ஏற்றம் இருக்கும் எனவும் பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

பொதுமக்களின் இந்த அச்சத்தைப் போக்கும் விதமாக ஒரு தகவல் வெளியானது. அதாவது எரிபொருட்கள் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிகரித்துள்ளதன் விளைவாக பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை விலை அதிகரிக்காது என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அதேசமயம், கலால் வரி உயர்வை அடுத்து, பெட்ரோல் மீதான இந்த வரி 13 ரூபாயாகவும், டீசல் மீதான வரி 10 ரூபாயாகவும் இருக்கும். இந்த வரி உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்றைய விலை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.93-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.52-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு தலா 2 ரூபாய் உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரத்தை பொறுத்து பெட்ரோல், டீசல் விலையை பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் அன்றாடம் மாற்றி அமைத்து வருகின்றன. அத்துடன் இந்த எரிபொருட்களின் மேல் பல்வேறு வரிகளையும் மத்திய, மாநில அரசுகள் விதித்து வருகின்றன.

இந்த நிலையில் பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரியை ஒரு லிட்டருக்கு தலா 2 ரூபாய் உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என்றும் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க: தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை; இன்றைய விலை என்ன?

இதையடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை உயரும் என்றும், அதன் விளைவாக காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையில் ஏற்றம் இருக்கும் எனவும் பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

பொதுமக்களின் இந்த அச்சத்தைப் போக்கும் விதமாக ஒரு தகவல் வெளியானது. அதாவது எரிபொருட்கள் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிகரித்துள்ளதன் விளைவாக பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை விலை அதிகரிக்காது என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அதேசமயம், கலால் வரி உயர்வை அடுத்து, பெட்ரோல் மீதான இந்த வரி 13 ரூபாயாகவும், டீசல் மீதான வரி 10 ரூபாயாகவும் இருக்கும். இந்த வரி உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்றைய விலை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.93-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.52-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : April 7, 2025 at 4:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.