ETV Bharat / bharat

'சௌரிய சக்ரா' விருது பெற்றவரின் தாய் நாடு கடத்தப்படுவதாக வெளியான செய்தி! காவல் துறை விளக்கம்! - MOTHER OF SHAURYA CHAKRA AWARDEE

ஜம்மு காஷ்மீர் பெஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து நாடு கடத்தப்படவுள்ள 60 பாகிஸ்தானியர்களில் 'சௌரிய சக்ரா' விருது பெற்றவரின் தாயும் ஒருவர் என வைரலாக பரவும் செய்தியை காவல்துறை மறுத்துள்ளது.

ஷமீமா அக்தரிடம் ஜனாதிபதி திரௌபதி முர்மு சௌர்ய சக்ரா விருதை வழங்கினார்
ஷமீமா அக்தரிடம் ஜனாதிபதி திரௌபதி முர்மு சௌர்ய சக்ரா விருதை வழங்கினார் (ETV Bharat via PIB)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 29, 2025 at 11:39 PM IST

3 Min Read

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் பெஹல்காமில் கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 25 பேர் மற்றும் சையத் ஆதில் என்ற குதிரை சவாரி வழிகாட்டி ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

60 பேர் அனுப்பப்படுவதாக தகவல்: இந்த சம்பவத்திற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்ததோடு இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு ஆதரவும் தெரிவித்துள்ளன. மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தான் அரசுடனான சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்த மத்திய அரசு, இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேறவும் உத்தரவிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, ஜம்மு காஷ்மீரில் தங்கியிருந்த பாகிஸ்தானியர்கள் கண்டறியப்பட்டு பேருந்துகளில் பஞ்சாப் அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் வாஹா எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள். நாடு கடத்தப்படும் 60 பேரில் முன்னாள் தீவிரவாதிகளின் மனைவிகள், குழந்தைகள் அடங்குவர்.

இவர்கள் கடந்த 2010 ஆம் ஆண்டு முன்னாள் தீவிரவாதிகளுக்கான மறுவாழ்வு கொள்கையின்கீழ் ஜம்மு காஷ்மீர் திரும்பியவர்கள். இவர்களில் 36 பேர் ஸ்ரீநகர், தலா 9 பேர் பாரமுல்லா மற்றும் குப்வாரா, 4 பேர் புட்காம் மற்றும் 2 பேர் ஷோபியன் மாவட்டங்களில் வசித்து வந்தவர்கள்.

காவல்துறை விளக்கம்: இந்நிலையில் பெஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சௌரிய சக்ரா விருது பெற்ற காவலர் முதாசிர் அகமது ஷேக் தாயார் ஷமீமா அக்தர் திருப்பி அனுப்பப்பட இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. இது குறித்து பிடிஐ நிறுவனமும் செய்தி வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த தகவலை பாரமுல்லா மாவட்ட காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், அத்தகைய தகவல்கள் "தவறானவை மற்றும் ஆதாரமற்றவை" என்று கூறியுள்ளது.

இதுகுறித்து பாரமுல்லா காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "பணியின் போது தனது உயிரை தியாகம் செய்து மரணத்திற்கு பிறகு சௌர்ய சக்ரா விருது பெற்ற தியாகி கான்ஸ்டபிள் முதாசிர் அகமது ஷேக்கின் தியாக உணர்வை ஜம்மு காஷ்மீர் காவல்துறை அங்கீகரிக்கிறது. அவரது தியாகம் ஜம்மு காஷ்மீர் காவல்துறைக்கும், ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை சேர்க்கும் விஷயம்.

தவறான தகவல்களை பரப்புவதை தவிர்க்குமாறு பொதுமக்களையும் ஊடகங்களையும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை கேட்டுக்கொள்கிறது. அனைத்து ஊடக தளங்கள், செய்தி நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக பயனர்கள் பொது மேடையில் எந்தவொரு தகவலையும் பகிரும் போது மிகுந்த பொறுப்புடன் செயல்பட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பொது அலுவலகங்களின் நடவடிக்கை சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளிலும், சரிபார்க்கப்பட்ட தகவல்கள் மட்டுமே வெளியிடப்படும் வகையில் சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையைப் பெற வேண்டும்." என கூறப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில் விருது: முன்னதாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட தியாகி கான்ஸ்டபிள் முதாசிர் அகமதுவின் தாயார் ஷமீமா அக்தர், அதிகாரிகளால் நாடு கடத்தப்படும் 60 பாகிஸ்தானியர்களில் ஒருவர் என்று PTI செய்தி நிறுவனம் தெரிவித்தது.

கடந்த மே 2022 இல் பயங்கரவாதிகளுடன் சண்டையிடும் போது வீர மரணம் அடைந்தவர் காவலர் முதாசிர் அகமது ஷேக். வெளிநாட்டு பயங்கரவாதிகளின் குழுவைத் தடுத்து நிறுத்திய ஜம்மு காஷ்மீர் காவல் துறையின் ரகசிய நடவடிக்கைக் குழுவில் முதாசிர் ஒருவராக இருந்தார். முதாசிர் அகமது ஷேக் மரணத்திற்கு பின்னர் 'சௌர்ய சக்ரா விருது' வழங்கப்பட்டது. ஷமீமா, தனது கணவருடன் மே 2023 இல் டெல்லியில் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடமிருந்து இந்த விருதை பெற்றார்.

ஷமீமா அக்தர் நாடு கடத்தப்படுவதாக செய்திகள் பரவிய நிலையில் முதாசிர் அகமது ஷேக்கின் உறவினர் முகமது யூனுஸ் செய்தியாளர்களிடம் கூறும் போது, "எனது உறவினர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர். அது எங்கள் பிரதேசம். பாகிஸ்தானியர்கள் மட்டுமே நாடு கடத்தப்பட்டிருக்க வேண்டும். முதாசிர் மரணத்திற்கு பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குடும்பத்தை பார்வையிட்டார். லெப்டினன்ட் கவர்னரும் இரண்டு முறை சந்தித்தார்.

ஷமீமா அக்தர் இங்கு வந்த போது 20 வயது, தற்போது அவர் 45 ஆண்டுகளாக இங்கேயே வசித்து வருகிறார். பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவிடம் வைக்கும் எனது வேண்டுகோள் என்னவென்றால், அவர்கள் இதை செய்யக்கூடாது.'' என்று முதாசிரின் மாமா முகமது யூனுஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த 1990 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் வெடிப்பதற்கு முன்பு ஷமீமா ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான முகமது மக்சூத்தை மணந்தார். அந்த காவலரின் நினைவாக பாரமுல்லா நகர சதுக்கத்திற்கு 'ஷாஹீத் முதாசிர் சௌக்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ''ஓஆர்எஸ் குடிப்பவரா நீங்கள்?" - தமிழ்நாடு சுகாதாரத்துறை சொல்வதை அவசியம் படிங்க!

இந்நிலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) ஜவானை மணந்த பாகிஸ்தானியர் மினல் கான், ஜம்மு காஷ்மீரிலிருந்து அவரது சொந்த நாட்டிற்கு நாடு கடத்தப்படுவதற்காக திருப்பி அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கரோட்டாவில் வசிக்கும் தனது கணவர் முனீர் கானுடன் மினல் கான் ஜம்மு காஷ்மீரிலிருந்து வாஹா எல்லைக்குப் புறப்பட்டார். அப்போது அவர் முனீர் கானை ஆன்லைனில் திருமணம் செய்து கொண்டதாகக் கூறினர். தற்போது கணவர் மற்றும் குழந்தைகளிடமிருந்து தன்னை பிரிக்க வேண்டாம் என்றும் அவர் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டார்.

இது குறித்து மினல் கான் கூறும் போது, "நாங்கள் குடும்பத்துடன் தங்க அனுமதிக்கப்பட வேண்டும். ஆனாலும் தாக்குதலில் அப்பாவிகள் கொல்லப்பட்டதை நாங்கள் கண்டிக்கிறோம். அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்" என்று கூறினார்.

பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் சிறப்பு பிரிவுகளின் கீழ் சிலவற்றை தவிர ஏப்ரல் 27 அன்று ரத்து செய்யப்படும் என்றும், அவர்கள் ஏப்ரல் 29 ஆம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் இந்தியா கடந்த வாரம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் இணைப்பு
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் இணைப்பு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் பெஹல்காமில் கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 25 பேர் மற்றும் சையத் ஆதில் என்ற குதிரை சவாரி வழிகாட்டி ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

60 பேர் அனுப்பப்படுவதாக தகவல்: இந்த சம்பவத்திற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்ததோடு இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு ஆதரவும் தெரிவித்துள்ளன. மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தான் அரசுடனான சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்த மத்திய அரசு, இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேறவும் உத்தரவிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, ஜம்மு காஷ்மீரில் தங்கியிருந்த பாகிஸ்தானியர்கள் கண்டறியப்பட்டு பேருந்துகளில் பஞ்சாப் அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் வாஹா எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள். நாடு கடத்தப்படும் 60 பேரில் முன்னாள் தீவிரவாதிகளின் மனைவிகள், குழந்தைகள் அடங்குவர்.

இவர்கள் கடந்த 2010 ஆம் ஆண்டு முன்னாள் தீவிரவாதிகளுக்கான மறுவாழ்வு கொள்கையின்கீழ் ஜம்மு காஷ்மீர் திரும்பியவர்கள். இவர்களில் 36 பேர் ஸ்ரீநகர், தலா 9 பேர் பாரமுல்லா மற்றும் குப்வாரா, 4 பேர் புட்காம் மற்றும் 2 பேர் ஷோபியன் மாவட்டங்களில் வசித்து வந்தவர்கள்.

காவல்துறை விளக்கம்: இந்நிலையில் பெஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சௌரிய சக்ரா விருது பெற்ற காவலர் முதாசிர் அகமது ஷேக் தாயார் ஷமீமா அக்தர் திருப்பி அனுப்பப்பட இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. இது குறித்து பிடிஐ நிறுவனமும் செய்தி வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த தகவலை பாரமுல்லா மாவட்ட காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், அத்தகைய தகவல்கள் "தவறானவை மற்றும் ஆதாரமற்றவை" என்று கூறியுள்ளது.

இதுகுறித்து பாரமுல்லா காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "பணியின் போது தனது உயிரை தியாகம் செய்து மரணத்திற்கு பிறகு சௌர்ய சக்ரா விருது பெற்ற தியாகி கான்ஸ்டபிள் முதாசிர் அகமது ஷேக்கின் தியாக உணர்வை ஜம்மு காஷ்மீர் காவல்துறை அங்கீகரிக்கிறது. அவரது தியாகம் ஜம்மு காஷ்மீர் காவல்துறைக்கும், ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை சேர்க்கும் விஷயம்.

தவறான தகவல்களை பரப்புவதை தவிர்க்குமாறு பொதுமக்களையும் ஊடகங்களையும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை கேட்டுக்கொள்கிறது. அனைத்து ஊடக தளங்கள், செய்தி நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக பயனர்கள் பொது மேடையில் எந்தவொரு தகவலையும் பகிரும் போது மிகுந்த பொறுப்புடன் செயல்பட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பொது அலுவலகங்களின் நடவடிக்கை சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளிலும், சரிபார்க்கப்பட்ட தகவல்கள் மட்டுமே வெளியிடப்படும் வகையில் சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையைப் பெற வேண்டும்." என கூறப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில் விருது: முன்னதாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட தியாகி கான்ஸ்டபிள் முதாசிர் அகமதுவின் தாயார் ஷமீமா அக்தர், அதிகாரிகளால் நாடு கடத்தப்படும் 60 பாகிஸ்தானியர்களில் ஒருவர் என்று PTI செய்தி நிறுவனம் தெரிவித்தது.

கடந்த மே 2022 இல் பயங்கரவாதிகளுடன் சண்டையிடும் போது வீர மரணம் அடைந்தவர் காவலர் முதாசிர் அகமது ஷேக். வெளிநாட்டு பயங்கரவாதிகளின் குழுவைத் தடுத்து நிறுத்திய ஜம்மு காஷ்மீர் காவல் துறையின் ரகசிய நடவடிக்கைக் குழுவில் முதாசிர் ஒருவராக இருந்தார். முதாசிர் அகமது ஷேக் மரணத்திற்கு பின்னர் 'சௌர்ய சக்ரா விருது' வழங்கப்பட்டது. ஷமீமா, தனது கணவருடன் மே 2023 இல் டெல்லியில் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடமிருந்து இந்த விருதை பெற்றார்.

ஷமீமா அக்தர் நாடு கடத்தப்படுவதாக செய்திகள் பரவிய நிலையில் முதாசிர் அகமது ஷேக்கின் உறவினர் முகமது யூனுஸ் செய்தியாளர்களிடம் கூறும் போது, "எனது உறவினர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர். அது எங்கள் பிரதேசம். பாகிஸ்தானியர்கள் மட்டுமே நாடு கடத்தப்பட்டிருக்க வேண்டும். முதாசிர் மரணத்திற்கு பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குடும்பத்தை பார்வையிட்டார். லெப்டினன்ட் கவர்னரும் இரண்டு முறை சந்தித்தார்.

ஷமீமா அக்தர் இங்கு வந்த போது 20 வயது, தற்போது அவர் 45 ஆண்டுகளாக இங்கேயே வசித்து வருகிறார். பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவிடம் வைக்கும் எனது வேண்டுகோள் என்னவென்றால், அவர்கள் இதை செய்யக்கூடாது.'' என்று முதாசிரின் மாமா முகமது யூனுஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த 1990 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் வெடிப்பதற்கு முன்பு ஷமீமா ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான முகமது மக்சூத்தை மணந்தார். அந்த காவலரின் நினைவாக பாரமுல்லா நகர சதுக்கத்திற்கு 'ஷாஹீத் முதாசிர் சௌக்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ''ஓஆர்எஸ் குடிப்பவரா நீங்கள்?" - தமிழ்நாடு சுகாதாரத்துறை சொல்வதை அவசியம் படிங்க!

இந்நிலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) ஜவானை மணந்த பாகிஸ்தானியர் மினல் கான், ஜம்மு காஷ்மீரிலிருந்து அவரது சொந்த நாட்டிற்கு நாடு கடத்தப்படுவதற்காக திருப்பி அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கரோட்டாவில் வசிக்கும் தனது கணவர் முனீர் கானுடன் மினல் கான் ஜம்மு காஷ்மீரிலிருந்து வாஹா எல்லைக்குப் புறப்பட்டார். அப்போது அவர் முனீர் கானை ஆன்லைனில் திருமணம் செய்து கொண்டதாகக் கூறினர். தற்போது கணவர் மற்றும் குழந்தைகளிடமிருந்து தன்னை பிரிக்க வேண்டாம் என்றும் அவர் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டார்.

இது குறித்து மினல் கான் கூறும் போது, "நாங்கள் குடும்பத்துடன் தங்க அனுமதிக்கப்பட வேண்டும். ஆனாலும் தாக்குதலில் அப்பாவிகள் கொல்லப்பட்டதை நாங்கள் கண்டிக்கிறோம். அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்" என்று கூறினார்.

பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் சிறப்பு பிரிவுகளின் கீழ் சிலவற்றை தவிர ஏப்ரல் 27 அன்று ரத்து செய்யப்படும் என்றும், அவர்கள் ஏப்ரல் 29 ஆம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் இந்தியா கடந்த வாரம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் இணைப்பு
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் இணைப்பு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.